Skip to main content

Posts

Showing posts from September, 2021

நம்மால் ஏன் சாதியை ஒழிக்க முடியவில்லை? - மென்-வலதுசாரி மத்யமர்களுக்கான பதில்கள்

1. பொதுவாக மென்-சனாதன ஆதரவாளர்கள், மத்யமர்களாக முகம் காட்டுபவர்கள், அம்பேத்கருக்கு முன்பான சமூக சீர்திருத்தவாதிகளில் இருந்து இன்று செயல்படும் பகுத்தறிவு இயக்கங்கள் வரை சாதியை ஒழிக்கவில்லை, அவர்கள் சாதி அதிகாரத்தை இடமாற்றும் பணியை மட்டுமே ஆற்றியிருக்கிறார்கள் என ஒரு வாதத்தை எடுத்து வைப்பார்கள். வெளிப்படையாகப் பார்க்கும் போது “அட ஆமா உண்மை தானே, சாதி எங்கே ஒழிந்துவிட்டது?” என நாமும் யோசிப்போம்.  நிஜம் என்னவென்றால் கண்ணுக்குப் புலப்படாத எத்தனையோ மாற்றங்கள் நம் சமூக அமைப்பில் கடந்த சில நூற்றாண்டுகளாக நிகழ்ந்து கொண்டு வந்திருக்கின்றன. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்கவே சுதந்திரத்துக்குப் பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினருக்கு போதுமான அங்கீகாரமும், பிரதிநுத்துவமும் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் ஒரு மத்திய சாதி சதித்திட்டமோ பகுத்தறிவு, சோசலிச இயக்கங்களோ அல்ல. அதற்கான உண்மைக் காரணத்தை அறிய நாம் பூனா ஒப்பந்த விவாதங்களுக்கு திரும்ப செல்ல வேண்டும்.  ஒரு ஜனநாயக நாட்டில் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரதிநுத்துவம் அமைவது ஆபத்தானது. குறைந்தபட்சம் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள...

கண்ணில் புரை விழுந்த உலகம்

கண்ணில் புரை விழுந்த சிறிய நாய்க்கு உலகமே கலங்கலான நீர்த்தொட்டிக்குள் இருந்து ஒரு மீன் பார்ப்பதைப் போல இருக்கிறது தான் போகும் பாதைகளை அது வாசனைகளால் மட்டுமே வரையறுத்துக் கொண்டது தரை, மிதியடி, நாற்காலி, முக்காலி, சக்கரநாற்காலி,  வாஷிங்மெஷின், அலமாரி,  நேராநேரத்துக்கு நிறைந்து அழைக்கும் சாப்பாட்டுக்கிண்ணம்,  வாசல், வாசல் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் கதவு இவ்வளவுக்கும் இடையில் நுணுக்கமாக இழையும் பல பாதைகள் நினைவின் வரைபடத்தால் வரிசை வரிசையாக செல்லும் எறும்புகளைப் போல அதன் சிறிய பாதங்கள் துல்லியமாக நடக்கின்றன கண்ணில் புரை விழுந்த சிறிய நாய்க்கு இந்த உலகமே வாசனைகளும் சப்தங்களும் தான் என்றானது அதற்கு எந்த வருத்தமும் இல்லை அதை நெருக்கமாய் கவனிப்பவர்களுக்குக் கூட அதன் உலகம் மாறிப்போனது தெரியவில்லை தினமும் காலையில் எழுந்ததும் பால்கனிக் கதவை மூக்கால் தொட்டுத்திறந்து வெளிச்சமும் இதமான வெப்பமும் நிறைந்த மூட்டமான உலகை பார்வையிடுவது பழக்கத்தினாலே கதவு திறக்கும் சப்தம் உணவு சமிக்ஞைக்கான சப்தம் வா போகலாம் எனும் சப்தம் தன் பெயருக்கான சப்தம் தொலைவில் ஏதோ ஒரு தெருமுக்கில் இருந்து கூட்ட...

Regionality and Sub-regionality: the Story of Kanya Kumari Tamil Writing

1) While regionality is understood generally in terms of the subject matter, you could go a step further and problematize by claiming that it is also defined by who are all intended as target readers. 2) The targeted readers then go on to define the sub-regionality of Tamil writing. 3) It raises the question whether there exists an attempt at universal Tamil regionality construction in modern and postmodern Tamil literature. 4) We can analyse this specifically in terms of the literature that predominantly uses the dialect of the people Kanyakumari district. More specifically we can focus on writers who come under the category of modern and postmodern Tamil literature who hail from the district and who use the dialect of the district. 5) Kanyakumari is unique in Tamil Nadu as far as culture and politics goes: A) It is the southernmost district in the mainland India B) According to Wikipedia “historically, Nanjinad and Edai Nadu, which comprise the present-day Kanyakumari di...

“கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” - ஒரு விமர்சனப்பார்வை, சித்தார்த்தன் சுந்தரம்

A thriller with a difference! "Came to the end of a story" reflects the mind of people towards girl children, irrespective of their social strata. The author depicts the attitude of high and might as well as economically down-trodden and their psyche towards innocent and helpless girl children...the characters Tamilselvan, Munda, George et al mentally disturbed for one or the other reasons and it reflects thru their deplorable activities...Tamilselvan misbehaved with a girl student when he was a teacher but got away from that...is he involved in the death of his adapted daughter...? the investigating officer also suffered due to the separation from his wife and the daughter and getting treatment for his psychiatric problems...is he involved in the murder...?! since Tamilselvan, the influential politician might have involved in the murder of his daughter and his assistant / help / driver Sahayam...but due to his influence in the high place, the commissioner would like to relie...

“கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” விமர்சனப் போட்டி

  என்னுடைய நாவல் கிண்டிலில் வந்து விட்டது. அதற்கு ஒரு விமர்சனப் போட்டியை அறிவிக்கிறேன். இந்த நாவலுக்கு சிறந்த விமர்சனத்தை கிண்டில் பக்கத்தில் எழுதுகிறவர்களில் முதல் பரிசாக என்னுடைய இரு புத்தகங்களை கையெழுத்திட்டு அனுப்புகிறேன். இரண்டாவது, மூன்றாவது பரிசுகளாக என்னுடைய ஒரு புத்தகத்தை கையெழுத்திட்டு அனுப்புகிறேன். லிங்க் இதோ:  https://www.amazon.in/dp/B09FMS63H6/ref=cm_sw_r_apan_glt_VDXZXHXMGR562HRC22DN

“கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” நாவலுக்கு ஒரு புதிய அட்டைப்படம்

 “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” நாவலுக்கு ஒரு புதிய அட்டைப்படத்தை நண்பர் சுதர்சன் மோகன் உருவாக்கித் தந்துள்ளார். எப்படி உள்ளது?

“கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” கிண்டிலில்

 என்னுடைய துப்பறியும் நாவலான “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” இப்போது கிண்டிலில் மின் நூலாக வெளியாகி உள்ளது. நண்பர்களும் வாசகர்களும் அந்நூலை வாங்கி ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். லிங்க்:  https://www.amazon.in/dp/B09FMS63H6/ref=cm_sw_r_apan_glt_VDXZXHXMGR562HRC22DN

‘தியாகச் செம்மல்’ சயானும் நக்கீரனும்

இந்த முறை சயானை பேட்டி எடுக்கும் போது நக்கீரன் பிரகாஷ் சற்று ஓவராகத் தான் போய் விட்டார் - சயான் தவ வாழ்வு வாழ்ந்தவர், சிறையில் படாத பாடெல்லாம் பட்டவர் என்று பேசிக்கொண்டே அவர் போகும் போது ஏதோ மகாத்மா காந்தியைப் போல மக்களுக்காக போராடி சிறைசென்றவர் என்று சொல்லி விடுவாரோ என பயந்தேன். நல்லவேளை அந்த எல்லைக்கு செல்லவில்லை. சயானின் குடும்பம் கொல்லப்பட்டது ஒரு துயரமே. ஆனால் பாம்புடன் விளையாடினால் கொத்துப்படத் தான் செய்யும். கொடநாட்டில் கொலை நடந்த உடனே மற்ற கூலிப்படையினரைப் போல சயான் உடனடியாக சரணடையத் தயாராக இல்லை. ஒருவேளை அவர்களைப் போல் அல்லாமல் சயானுக்கு இந்த பிரச்சனையின் ஆழம், அதன் பொருளாதார மதிப்பு, அரசியல் பாதிப்புகள் நன்கு தெரிந்திருக்கலாம். ஆக, குடும்பத்தை விட்டு வருகிறேன் என கேரளாவுக்கு தப்பிச் செல்கிறார். இத்தனை ரகசியங்களுடன் அவர் போவது ஆபத்தானது என உணர்ந்து அப்போதைய முதல்வரும் அவரது சகபாடிகளும் லாரி வைத்து அவர் போன காரை வழியிலே தூக்கி இருக்கலாம். சரியாக அவர் எங்கே போகிறார் என டிராக் செய்ய போலீஸ் இல்லாமல் முடியாது. சயானின் கார் விபத்தாகி பதினைந்து நிமிடங்களில் அங்கு வரும் போலிசார் அவருட...

ரஹானேவின் எதிர்காலம்

தொடர்ந்து ரன்கள் அடிக்காத ரஹானேவுக்கு ஏன் இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பளித்துக் கொண்டே இருக்கிறது என முன்னாள் இங்கிலாந்து அணித்தலைவர் மைக்கேல் வாஹ்ன் அண்மையில் கேள்வி எழுப்பினார். ஆம், கடந்த நான்கு வருடங்களாகவே ரஹானே அவ்வப்போது தான் அரைசதம், சதம் அடிக்கிறார். என்ன ஒவ்வொன்றும் ஆட்டத்தின் போக்கை தீர்மானிப்பவையாக இருந்தன. இருந்தாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. 2017இல் கருண் நாயர் முச்சதம் அடித்தது நினைவிருக்கும். அப்போது அவர் ரஹானேவின் இடத்திலே ஆடினார். அப்போது ரஹானே ஒன்று பிரமாதமான ஆட்டநிலையில் இல்லை. இந்தியாவில் தடவிக்கொண்டே இருந்தார், வெளிநாட்டு பவுன்ஸ் ஆகும் ஆடுதளங்களில் மட்டும் துடிப்பாக ஆடுவார். நியாயமாக இந்திய நிர்வாகம் கருண் நாயரை அடுத்து வந்த வங்கதேசத் தொடரில் ஆட வைத்திருக்க வேண்டும், ஆனால் அதற்குப் பதில் அவரை நீக்கி விட்டு ரஹானேவை கொண்டு வந்தார்கள். தனக்கு கருண் நாயர் மீது நம்பிக்கையோ விருப்பமோ இல்லை என கோலி காட்டினார். ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பளித்து விட்டு அப்படியே தூக்கி விட்டார். கருணுக்கும் சூர்யகுமார் யாதவைப் போல மனவலிமை இல்லை - கோலி போன்றவர்களின...

நான்காவது டெஸ்டின் முடிவும், அதன் விளைவும் என்னவாக இருக்கும்?

இந்த டெஸ்டை இந்தியா இழந்தது என்றாலோ டிரா ஆனாலோ இவ்விசயங்கள் நடப்பது உறுதி:  1) ஐந்தாவது டெஸ்டில் ஜடேஜாவின் இடத்தில் அஷ்வினைக் கொண்டு வருவார்கள். ரஹானேவுக்குப் பதில் விஹாரி அல்லது சூர்யகுமார் யாதவ். அல்லது வி.வி.எஸ் லஷ்மண் உள்ளிட்டோர் கேட்பது போல 2 சுழலர்களை கூட ஆட வைப்பார்கள். என்னுடைய பார்வையில் பிரச்சனை ரஹானேவின் மோசமான ஆட்டநிலை தான். அவருடன் ஆட செல்வது ஒரு மட்டையாளர் குறைவாக செல்வதற்கு சமம். அதற்கு ஈடுகட்டவே எண் 5இல் ஜடேஜாவை ஆட வைக்கிறார் கோலி. அவரது பந்துவீச்சு ஒரு போனஸ் மட்டுமே. 2) டிரா ஆனால் ஜடேஜா பந்துவீச்சு அணி தொடரும், ஆனால் ரஹானே மட்டும் நீக்கப்படுவார்.  வெற்றி பெற முடியாமல் போனால் அது நம் தவறா? இல்லை. இந்திய பந்து வீச்சாளர்கள் மீது எந்த தவறுமில்லை என்றே கருதுகிறேன். ஆடுதளம் மிகவும் தட்டையாகி விட்டது. ஸ்விங், ஸீம் எதுவும் இல்லை. பவுன்ஸ், வேகம் இல்லை. அதனாலே இந்தியாவின் 11வது மட்டையாளரான சிராஜ் ரொம்ப ஜாலியாக தடுத்தாடி, தட்டி விட்டு ஒற்றை ஓட்டங்களை எடுப்பதைப் பார்த்தோம், பும்ரா விராத் கோலியைப் போல் ஆடியதைப் பார்த்தோம், உமேஷ் யாதவ் ரஸலைப் போல் அடிப்பதை பார்த்தோம். இந்த ...

ஆசிரியர் தின வாழ்த்துகள்

கல்லூரியில் எனக்கு சிறந்த ஆசிரியர்கள் சிலர் அமைந்தார்கள். ஸ்காட்டில் படிக்கும் போது ஜனார்த்தனன், ஜேம்ஸ் டானியல், செபாஸ்டியன், ரொசாரியோ என. எம்.ஸி.ஸியில் வி.ராஜகோபாலன், கணேஷ், செரியன் குரியன், நிர்மல் செல்வமணி போன்ற நட்சத்திர ஆசிரியர்கள். கிரைஸ்டில் நான் அடிக்கடி போய் அமர்ந்து பாடம் கேட்பது சமூகவியல் பேராசிரியர் ராஜீவின் வகுப்புகள். ராஜீவ் ஒரு சிறந்த ஆசிரியர் என்றாலும் என் நண்பர். ஆகையால் அவரைத் தவிர்த்து இந்த நல்லாசிரியர்களை இந்த நன்னாளில் நன்றி கூர்கிறேன்.

ஒரு சுடரொளி!

ஒரு எழுத்தாளனாக என் ஆசான் எப்போதுமே ஜெ.மோ தான். ஒரு பதின்வயதினனாக அவரை அணுகி கவனிக்க இயன்றதே என்னை பின்னாளில் இப்படி ஒரு எழுத்தாளனாக்கியது. இவையெல்லாம் ஜெ.மோ எனும் ஆசிரியர் எனக்குக் கற்றுத் தந்தவை: 1) ஒரு எழுத்தாளன் தன் வாழ்க்கையை முழுக்க எழுத்தை சுற்றியே அமைத்துக் கொள்ள வேண்டும். 2) சும்மா புகார் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. 3) வேண்டியதை விடா முயற்சியால் அடைய வேண்டும். 4) எதையும் நம்பிக்கையுடன் உறுதிபட சொல்ல வேண்டும். 5) நிறைய எழுத வேண்டும். 6) தினமும் எழுத வேண்டும். 7) தமிழைத் தாண்டியும் வாசித்து, இலக்கியத்தைத் தாண்டியும் பல ஆர்வங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். 8) வாசகனை சமமாக நடத்த வேண்டும். 9) இளம் படைப்பாளிகளை தோளோடு அணைத்துக் கொள்ள வேண்டும். 10) உலகையே மறந்து இலக்கியம், புத்தகங்கள், அறிவுத்துறைகள் பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டும்.  11) யார் செத்தாலும் கவலைப்படாமல் உலகம் சுற்றுகிற அச்சு நம் எழுத்தே என நம்ப வேண்டும். 12) பணம் சம்பாதித்தாலும் அதில் பற்றுக் கொள்ளல் ஆகாது.  13)லௌகீகத்தில் சற்று தத்தியாக இருந்தால் தப்பில்லை. 14) நாம் நம்புவதே உண்மை எனக் கருதி செய...

“காயல்”

கடந்த முறை சென்னை வந்திருந்த போது தமயந்தியின் “காயல்” திரைப்படத்தை அதன் கரட்டு வடிவில் (uncut) பார்த்தேன். சரியான ஒரு தளத்தில் வெளியாகி போதுமான கவனத்தை பெறும் பட்சத்தில் அப்படம் இரண்டு விசயங்களை சாதிக்கும் எனத் தோன்றியது:  1) தமிழ் சினிமாவில் பெண்மொழியை வலுவாக நிறுவும் படமாக இருக்கும். பெண் மொழி என்றால் என்ன? பொதுவாக நமது படங்களில் வெளிப்படுவது ஆண்களின் நோக்கே (male gaze). பெண்களை மட்டுமல்ல ஆண்களை, வயதானவர்களை, பலவீனமானவர்களை, ஊனமுற்றுவர்களை, குடிகாரர்களை, காமாந்தகர்களை, சாகசக்காரர்களை, தியாகிகளை, தலைவர்களை நாம் ஆண்களின் பார்வை வழியாகத் தான் சினிமாவில் காண்கிறோம். அதனாலே வன்முறையை மிகுதியாகக் கொண்டாடுவதாக, ஆண்களை அவர்களுடைய உடலைக் கடந்து ஊடுருவி தரிசிக்க்காததாக நமது சினிமா இருக்கிறது. நமது சினிமா என்றால் தமிழ் சினிமா மட்டுமல்ல, உலகம் முழுக்க சினிமாக்கள் இப்படித்தான் இருக்கின்றன. உலகம் முழுக்க கொண்டாடப்பட்ட Blue is the Warmest Color எனும் லெஸ்பியன் படத்தில் கூட ஆண் நோக்கே வெளிப்பட்டது. கீஸ்லாவஸ்கி போன்ற விதிவிலக்கான சில இயக்குநர்களின் சினிமாக்களில் பெண்மொழி காட்சிகளாக, உணர்ச்சிகளாக ...

பிறவிக் கலைஞன்

  சுஜாதாவின் இந்த முதற் கதையில் அவரது மொழிநடை எவ்வளவு வித்தியாசமாக, பலவீனமாக இருக்கிறது -  புதுமைப்பித்தனின் நடையை அவசரமாக காப்பி அடித்ததைப் போல. வழக்கமாக அவர் முதல் வரியிலேயே கதையை ஆரம்பித்து விடுவார், ஆனால் இதிலோ அவர் கதையை செட் செய்யவே ஒரு பக்கம் எடுத்துக் கொள்கிறார்.  இப்படி ஆரம்பித்தவர் போகப் போக அடுத்தடுத்த ஆண்டுகளில் தனக்கென ஒரு தனி நடையை, தனித்துவமான பாணியை உருவாக்கிக் கொண்டு விட்டார். பிறவிக் கலைஞன் என யாருமில்லை, எல்லாரும் மெல்லப் பயின்று சூழலின் அழுத்தத்தாலும் உழைப்பினாலும் உருவாகி வருகிறவர்களே என்பதற்கு ஒரு சான்று இது.

டைப் 1 நீரிழிவு: இன்சுலினின் மாயங்கள்

 

சர்க்கரை நோயாளிகள் எல்லாரையும் போல சாப்பிட்டு வாழ முடியுமா?

 

தாராவின் காதலர்கள்

மனுஷ்ய புத்திரனின் நீள்கவிதைகளில் சில நேரம் அவற்றின் குறுகின எல்லைக்குள் மூச்சுத்திணறுவதை கண்டிருக்கிறேன் - கொட்டுகிற மழையில் கிடந்து விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு கவிதையை பலவந்தமாக கையைப் பற்றி அழ அழ வீட்டுக்கு இழுத்து சென்று முத்தாய்ப்பாக சில வரிகளை எழுதி முடித்து வைப்பார். அந்த நிர்பந்தங்களை கவிதை எனும் வடிவம் அவர் மீது சுமத்துவதைப் போல கவிதை நாவல் வடிவம் செய்வதில்லை. ஆனால் பிஞ்ச் செயலியில் வெளிவரும் “தாராவின் காதலர்கள்” தொடரில் அவர் முழுமையான சுதந்திரத்துடன் இரவு பகலாய் ஒரே விலங்கைப் பின் தொடரும் வேட்டைக்காரனைப் போல கவிதையின் கடைசி சொட்டு விழுந்து அது கையில் தன்னை ஒப்படைக்கும் வரை துரத்துகிறார். எந்த வடிவ பிரக்ஞை, கவலைகளும் இல்லாமல், முழுக்க ஒரு பரிசோதனைக் களமாக இத்தொடரை மாற்றுகிறார்.  இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரஞ்சு இலக்கியத்தில் ஒரு பெரும் உடலெழுத்து மரபு தோன்றியது - ஹெலன் சிக்ஸு (Inside), ஜெனெ (The Thief’s Journal, Our Lady of the Flowers) போன்றவர்கள் உடனடியாக நினைவுக்கு வருகிறவர்கள். இவர்கள் புனைவு மொழியில் எந்த கதை கூறும் பாசாங்கும் இல்லாமல் இந்த உடலும், மனமும் ...

ஜடேஜாவா அஷ்வினா?

ஏன் இந்த நான்காவது டெஸ்ட் வரை அஷ்வினுக்கு ஏன் கோலி வாய்ப்பளிக்கவில்லை எனும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. என்னுடைய பார்வை இது: ஜடேஜாவின் மட்டையாட்டத்துக்காக மட்டுமே கோலி அவரைத் தொடர்ந்து அணியில் எடுக்கிறார். ஆனால் ஜடேஜாவால் பெரிதாக ரன் எடுக்கவும் இயலவில்லை. தொழில்நுட்பத்தை விட அவருடைய தாழ்வுணர்வு, பதற்றம், நிதானமின்மை சில வாய்ப்புகளை இத்தொடரில் அவர் வீணாக்க ஒரு காரணம். ஒரு பந்து வீச்சு ஆல்ரவுண்டரை மட்டையாளராக மாற்றுவது கோலியின் நோக்கம். அது இப்போது வரை பலன் தரவில்லை. இன்னொரு சிக்கல் இது அஷ்வினை விட மேலான பந்து வீச்சாளரா ஜடேஜா எனும் கேள்வி அல்ல என்பது. இந்தியாவின் மோசமான மட்டையாட்டம் குறித்த கவலையே தொடர்ந்து ஜடேஜாவை ஒரு வேகத்தடுப்பாக கோலி மட்டையாட்ட வரிசையில் பயன்படுத்தக் காரணம். இன்றைய போட்டியில் கூட ரஹானே, பண்டுக்கு முன்னர் ஜடேஜாவை அவர் களமிறக்கினார். என்ன பிரச்சனை என்றால் கோலி எண் 4க்குப் பிறகு வரும் எந்த மட்டையாளர் மீதும் நம்பிக்கை இல்லை. அதே நேரம் ரஹானேவை அணியில் இருந்து நீக்கவும் துணிச்சல் இல்லை. இந்த அரசியலின் விளைவாகவே அஷ்வின் பலிகொடுக்கப்படுகிறார். கோலி தன் பாட்டுக்கு ஆட்டச்ச...

கோலி-ரஹானே-புஜாரா: தொழில்நுட்பமும் மனநிலையும் சரிவும்

விராத் கோலி, ரஹானே, புஜாரா மூவரும் தொடர்ந்து நான்காவது ஸ்டம்பில் வீசப்படும் உள்வரும் / உள்வந்து நேராகும் வேகப்பந்துக்கு ஒரே போல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆவது குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. கவாஸ்கர் இதற்கு off ஸ்டம்பில் போய் நிற்கிற அந்த back and across கால்பாட நிலை (stance) தான் எனக் கூறுகிறார். 2018இல் கோலி இங்கிலாந்தில் நன்றாக ஆடி சதங்கள் அடித்த போது அவர் off ஸ்டம்புக்கு வெளியே போய் இப்படி நிற்காமல் மரபான கால்பாட நிலையையே வைத்திருந்தார். நிறைய பந்துகளை தொடாமல் விட்டார். ஆனால் இந்த முறை மூன்று வருடங்களுக்குப் பிறகு அவர் அந்த தொழில்நுட்பத்தை மாற்றியதே அவருடைய வீழ்ச்சிக்குக் காரணம் என சொல்கிறார்கள் சஞ்சய் மஞ்சிரேக்கர் உள்ளிட்ட விமர்சகர்கள். வி.வி.எஸ் லஷ்மண் போன்றோரின் பார்வை கோலி பந்தை அடிக்க வேண்டும் என்கிற மிகை விருப்பமே அவரை இப்படி அவுட் ஆக வைக்கிறது என்பது. ஈ.எஸ்.பி.என் கிரிக்கின்போ தளத்தில் சித்தார்த் மோங்கா ஒரு விரிவான, புள்ளிவிரபங்களின் அடிப்படையிலான கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் அவர் கோலி இதே தவறுகளை 2018இலும் செய்தார், ஆனால அப்போது அவர் எட்ஜ் கொடுக்கவில...