என்னுடைய துப்பறியும் நாவலான “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” இப்போது கிண்டிலில் மின் நூலாக வெளியாகி உள்ளது. நண்பர்களும் வாசகர்களும் அந்நூலை வாங்கி ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். லிங்க்: https://www.amazon.in/dp/B09FMS63H6/ref=cm_sw_r_apan_glt_VDXZXHXMGR562HRC22DN
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
