கல்லூரியில் எனக்கு சிறந்த ஆசிரியர்கள் சிலர் அமைந்தார்கள். ஸ்காட்டில் படிக்கும் போது ஜனார்த்தனன், ஜேம்ஸ் டானியல், செபாஸ்டியன், ரொசாரியோ என. எம்.ஸி.ஸியில் வி.ராஜகோபாலன், கணேஷ், செரியன் குரியன், நிர்மல் செல்வமணி போன்ற நட்சத்திர ஆசிரியர்கள். கிரைஸ்டில் நான் அடிக்கடி போய் அமர்ந்து பாடம் கேட்பது சமூகவியல் பேராசிரியர் ராஜீவின் வகுப்புகள். ராஜீவ் ஒரு சிறந்த ஆசிரியர் என்றாலும் என் நண்பர். ஆகையால் அவரைத் தவிர்த்து இந்த நல்லாசிரியர்களை இந்த நன்னாளில் நன்றி கூர்கிறேன்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share