Skip to main content

Posts

Showing posts from March, 2025

மதம் இருந்தே ஆகும்

சப்பைக்கட்டுக்காக சொல்லவில்லை - பிரான்ஸைப் போல இந்தியா முழுமையான மதசார்பற்ற நாடு அல்ல. இந்தியாவில் அரசியல்வாதிகள், பிரதமர்கள், முதல்வர்கள் எல்லாருமே வெளிப்படையாக மதச்சின்னங்களை பாவிப்பார்கள், நிகழ்வுகளில் பங்கு கொள்வதை பிரச்சாரம் ஆக்குவார்கள், அவர்களுடன் ஒட்டுறவில் இருக்கும் அதிகாரிகளும் இவ்வாறே இருப்பார்கள். சிறுபான்மை மத நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்களிலும் மதத்தை / மதக்கருத்துக்களை போதிப்பதில் சட்டரீதியாக தடையில்லை (ஆனால் துபாய் போன்ற நாடுகள் அனுமதிக்காததால் அங்கு இதைவிட நிபந்தனைக்குட்பட்ட மதசார்பின்மை உள்ளது.)  நாம் ஏன் மதவாத மதசார்பின்மை தேசமாக இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள 18-19ஆம் நூற்றாண்டுக்குப் போக வேண்டும் - இந்தியாவின் சமூக சீர்திருத்த, அரசியல் எழுச்சி அமைப்புகள், நிகழ்வுகள் மதத்தின் அடிப்படையில் தோன்றியவையே. நமது சுதந்திரப் போராட்டமும் அதன் நீட்சியே. நம்மை ஆண்ட பிரிட்டீஷ் அரசும் இதை ஊக்குவித்தது. அவர்கள் காலத்தில்தான் -1870இல் - கும்பமேளா மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டது. பிரிட்டீஷார் இதை வருமான வ...

படித்த வேலை பார்க்கும் தகுதியுள்ள மனைவிக்கு பராமரிப்புத் தொகையைக் கொடுக்கலாமா?

  நல்ல தீர்ப்பு! படித்து வேலையில் இருக்கும் அல்லது உயர்படிப்பு முடித்த பெண்களுக்கு பராமரிப்புத் தொகையை மாதாமாதம் கொடுப்பது அவசியமில்லை. பட்டப்படிப்பை முடிக்காதவர்களுக்கு கொடுக்கலாம், அது நியாயம். அதுவும் கணவர் நன்கு படித்து அதிகம் சம்பாதிக்கையில் மட்டுமே. கல்யாணத்துக்காக ஒரு பெண் தன் தொழில் வாழ்வை, அனுபவத்தை அத்தனைக் காலம் தியாகம் பண்ணியதால் அவளுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் எனும் வாதம் தவறானது - அவருக்கு மாதம் 50,000-100000 சம்பாதிக்கும் வாய்ப்பிருந்து அதைக் கணவருக்காக விட்டொழித்தார் எனில் அது அவரது தவறே. கல்யாண வாழ்க்கை ஒரு சமரசம் - வேலையை சில தேவைகளுக்காக ஒருவர் விட்டுக்கொடுப்பது அவர் முடிவுதான். அதற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். கல்யணத்தின்போது கணவர் வற்புறுத்தினால் அந்த கணமே அவரை விவாகரத்து பண்ணலாமே. அல்லது கல்யாணத்திற்கு முன்பே பேசி முடிவு செய்யலாமே. இம்மாதிரி தனிப்பட்ட முடிவுகளுக்காக வாழ்நாள் முழுக்க பராமரிப்புச் செலவைக் கோருவது நியாயமற்றது. தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி வர்க்கரீதியாக, கல்வித் தகுதி சார்ந்து இதைப் பார்ப்பது ஒரு நல்ல மாற்றம். தகுதியில்லாதவர்களுக்கு பராமரிப்ப...

காலமும் ஒழுக்கமும்

புத்தரின் அடிப்படையான கருத்தே அனைத்தும் - முக்தியும் கூட - நிபந்தனைக்கு உட்பட்டது என்பதுதான். அதாவது ஒருவர் தியானம், ஒழுக்கம், கருணை என அமைதியான விழிப்பான வாழ்க்கையை வாழ்ந்தாலும் அது கயிற்றின்மீது நடப்பதைப் போன்றதே. அமைதியும் கருணையும் அக ஒளியும் நிபந்தனைக்கு உட்பட்டவை எனும்போது எவையும் நிலைப்பதில்லை. எதுவும் நிபந்தனைக்குட்பட்டது எனும் கருத்து கூட நிபந்தனைக்குட்பட்டதே. ஆக நாம் பத்து கார்களை ஒன்றின்மீது ஒன்று வைத்து ஓடவிட்டால் எப்படி இருக்குமோ அப்படியான இருத்தலையே கொண்டிருக்க முடியும். எக்கணமும் தடுமாறுவதும் நிலைகொள்வதும் இரண்டுமே நிபந்தனைக்குட்பட்டு தோன்றுகின்றன எனும் உணர்வைத் தக்க வைப்பதுமே சாத்தியமுள்ள நிலைகள்.  முன்பு நான் ஜென் துறவிகளின் நூல்களைப் படித்துவிட்டு அவர்கள் எப்போதும் அனுபூதி நிலையில் இருப்பார்கள், அகம் மலர்ந்த பின் அது கூம்பாது என்றே அபத்தமாக நம்பினேன். பின்னரே மலர்தலே மலர்தல் அல்லாத நிலையைச் சார்ந்துள்ளதால் எதுவும் பூரணமாக மலர்வதோ வாடுவதோ இல்லை என நாகர்ஜுனரின் வழியாகப் புரிந்துகொண்டேன். சின்னச்சின்ன தெளிவுகளைக் கடந்து கடைசிவரை எல்லாரும் சாமான்யமான மனிதர...

நம்மால் ஏன் 'போராட' முடிவதில்லை?

ஒவ்வொரு தேர்தலின்போது ராஜ்தீப் சர்தேசாய் ஜனநாயகத்தின் வீழ்ச்சி, பாஜகவின் அட்டூழியத்தை சாடிப் பேசுவார், ஆனால் பாஜக பாராளுமன்ற தேர்தலில் "எதுக்கு பொண்டாட்டி" எனப் பாடியபடி வெல்லும். ராஜ்தீப்பும் தளராமல் 2019ஆம் ஆண்டு, 2024ஆம் ஆண்டுக்கான தன் தேர்தல் எழுத்துக்களைத் தொகுத்து நூல்களாகக் கொண்டு வருவார். இம்முறை ஊட்டி இலக்கிய விழாவிலும் அப்படியான தன் நூலொன்றைப் பற்றி ஶ்ரீனிவாசன் ஜெயினுடன் உரையாடினார். எனக்கு அவரது பார்வையில் உள்ள முக்கியமான முரண்பாடு அவர் மதவாதத்தை ஒரு அரசியல் பண்பாட்டுப் பிரச்சினையாக மட்டுமே பார்க்கிறார் என்பது. உலகம் முழுக்க பாசிசம், மதவாதம் எப்படி கைகோர்க்கின்றன, அதன் பின்னுள்ள சமூகப் பொருளாதாரக் காரணிகள் என்ன என்பதைப் பற்றின அக்கறை இல்லை. தாராளவாத குடியாட்சி ஆதரவாளர்களின் பிரச்சினை இது - நவதாராளவாதமும் அது ஏற்படுத்தும் நகரமய சமூக அமைப்புமே பாசிசத்தை ஏற்படுத்துகிறது அல்லது அதற்கு தோதான சமூக நிலையை ஏற்படுத்துகிறது என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மோடியும் ஷாவும் போய்விட்டால் மதவாதம் ஒழிந்துவிடும் என நம்புவார்கள். ஆனால் மதவாதம் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதுதான்...

போதாமையின் கசப்பும் கலவரமும்

மக்களின் அடிப்படைப் பிரச்சினை பணமும் ஏற்றத்தாழ்வும் பொருண்மை உலகில் போதாமைகளுமே. ஆனால் அதைக் குறித்து விசனிக்க, கோபிக்க, கொந்தளிக்க, கலவரம் செய்யாமல் மனிதனை ஒரு பக்கம் கடவுள், பணம், பொழுதுபோக்கு தடுக்கிறது எனில் இன்னொரு பக்கம் நாக்பூர் மாதிரியான கலவரங்களும் கோபத்தை வெறுப்புக்கு திசைதிருப்பும், வடிகாலாகின்றன; ஆட்சியாளர்கள் அரியணையில் நீடிக்க உதவுகின்றன. மதம் சார்ந்த மற்றமை (இஸ்லாமியர்) இங்கு ஒரு பொருட்டு மட்டுமே. இஸ்லாமியர் இல்லாவிடில் வேறொரு மற்றமை. இங்கும் எங்கும் எப்போதும் மதவாதம் கலவரத்தை தூண்டாது - அதிருப்தியும் போதாமையுமே கலவரத்தின் எரிபொருள். பி.கு: கோவையில் தொண்ணூறுகளில் நடத்தப்பட்ட கலவரம் வணிக நோக்குடன் நடந்தது - அது விதிவிலக்கு. பாஜகவுக்குப் பிறகு மக்களின் அதிருப்தியும் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் அரசியல் கலவரங்களும் கைகோர்க்கின்றன.

ஓர்குலம் - ஜி குப்புசாமி

From Kuppuswamy Ganesan  அண்டை  மாவட்ட இலக்கியத் திருவிழாவில் பேசுவதற்கு என்னை இன்று அழைத்தார்கள். இதற்கு முன் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மாவட்ட இலக்கியத் திருவிழாவில் பேசுவதற்கு அழைத்திருந்தார்கள், அப்போதெல்லாம் மாவட்ட நிர்வாகம் பேச்சாளர்களை வெவ்வேறு படிநிலைகளில் வைத்து கௌரவப்படுத்துகிறார்கள் என்ற விஷயமெல்லாம்  எனக்குத்  தெரியாது. இப்போது தெரிந்துவிட்டது.  என்னை அழைத்தவரிடம் (இதற்கு முன் எப்போதும் இல்லாத வழக்கமாக) நான் "எவ்வளவு மதிப்பூதியம் தருவீர்கள்?" என்று கேட்டேன்.‌ 2500 ரூபாய் தருவார்களாம். அழைக்கப்படும் பேச்சாளர்கள் எல்லோருக்கும் 2500தான் தருகிறீர்களா என்று கேட்டேன். அவர் பதில் அளிக்காமல் தயங்கினார். சக பேச்சாளர்கள் சிலருக்கு நம்ப முடியாத அளவுக்கு பெருந்தொகை அளிக்கப்படுவது எனக்கு நன்றாகவே தெரியும். அவர்களுக்கு தலை வாழையிலை விருந்து அளித்துவிட்டு எழுத்தாளர்களை வாசலுக்கு வெளியே நிற்க வைத்து சில எலும்புத் துண்டுகளைகளை வீசுவதற்கு ஒப்பான செயல் இது என்றேன். அரசு நடத்தும் விழாக்களில் கலந்து கொள்ளும் எல்லோருக்கும் சம அளவில் மரியாதை தருவதே நியாயம். அ...

பிளாக்லிஸ்ட் கலாச்சாரம்

தமிழ்நாட்டில் இலக்கியத் திருவிழாக்களில் யார் அழைக்கப்பட வேண்டும், எவ்வளவு சன்மானம் வழங்கப்பட வேண்டும் என்பதெல்லாம் ரெண்டாவது விசயம் - ஆனால் பிளாக் லிஸ்டிங் பயம்தான் ஆக மோசமானது. மறுத்தாலோ விமர்சித்தாலோ தம்மை ஒரேயடியாக இருட்டடித்து விடுவார்கள் எனும் அச்சம் எல்லாரிடமும் உள்ளது. ஜி. குப்புசாமியின் இன்றைய குறிப்பிலும் அதைக் குறிப்பிட்டு தான் அஞ்சவில்லை என்கிறார். அரசு யாரையும் பிளக்லிஸ்ட் பண்ணச் சொல்வதில்லை என்றாலும் அதிகாரிகளுக்கு அம்மனநிலை உள்ளது. இது மெல்லமெல்ல பிளாக்லிஸ்ட் கலாச்சாரத்தை உண்டு பண்ணுகிறது, முணுமுணுப்பவர்கள் மெல்ல அமைதியாகிறார்கள். இந்த அச்சம் தம்மை சுயதணிக்கை செய்யவும் பரஸ்பரம் கட்டுப்படுத்தவும் செய்வது. நான் முதுகலை படித்த எம்.ஸி.ஸியில் ஒரு வழக்கம் உண்டு - விடுதிக்கென்று மாணவர் தேர்தல் நடக்கும். அதில் வெற்றி பெறும் தலைவரை தேர்தலின்போது கடுமையாக விமர்சித்துத் தோற்றுப் போகிறவரை பிளாக்லிஸ்ட் பண்ணாமல் முக்கியமான பொறுப்புகளைக் கொடுப்பார்கள். அவரை மிகுந்த மரியாதையுடன் தலைவர் நடத்தியாக வேண்டும். இதன்வழியாக எதிர்க்குரல் ஆட்சியின் பகுதியாகி விடும். அது எதிர்க்குரலாகவே நீடிக்கும் ...

“நிழல் பொம்மை” - ஒரு நேர்முகம்

எழுத்தாளர் திலீப்குமார் எனக்கு மிகவும் பிடித்த புனைவெழுத்தாளர், அபாரமான உளவியல் கூர்மையுடன் மொழிக்கட்டுப்பாட்டுடன் மிகச்சிறந்த சிறுகதைகளை எழுதியவர். அவர் எனது “நிழல் பொம்மை” நாவலைப் படித்துவிட்டு அது நன்றாக எழுதப்பட்டுள்ளதாகப் பாராட்டினார். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்தேன். அவர் எனது நாவல் குறித்து இவ்வாரம் நடைபெறவுள்ள ஊட்டி இலக்கிய விழாவில் என்னுடைய உரையாடவிருந்தார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட தவிர்க்க இயலாத நெருக்கடியால் அவரால் நிகழ்வுக்கு வர முடியவில்லை. அதனால் தன் கேள்விகளை என்னிடம் பகிர்ந்திருந்தார். அக்கேள்விகளுக்கான பதில்களை இங்கே பகிரலாம் என இருக்கிறேன்: திலீப் குமார்: முதலில், "நிழல் பொம்மை" நாவலுக்காக என் வாழ்த்துகள்... 1) இந்த நாவலை எழுத உங்களுக்கு ஆரம்ப உந்துதலாக இருந்த ஓரிரு எழுத்தாளர்கள் குறித்தும் அதன் தொடர்ச்சியாக இந்த நாவல் உருவான விதம் குறித்தும் உங்கள் அறிமுக குறிப்பில் விளக்கியுள்ளீர்கள். அதையே இங்கு கூடியிருக்கும் வாசகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இன்னும் சற்று விரிவாக கூறமுடியுமா? ஆர். அபிலாஷ்: வாழ்த்துகளுக்கு என் நன்றியும் அன்பும். காப்காவின் “விச...

சேலம் இட்லி

கடந்த ஞாயிறன்று சேலத்துக்குச் சென்றிருந்தேன். சேலத்தில் என்னை அசரடித்தது இட்லி. நான் இதுவரைச் சாப்பிட்டதிலேயே சிறந்த இட்லி அங்கு ஶ்ரீகிருஷ்ணா எனும் ஓட்டலில் சுவைத்ததே. முருகன் இட்லி கடையில் கிடைக்கும் இட்லி மென்மையாக இருக்கும், ஆனால் இந்த இட்லியோ மென்மையுடன் தனித்த சுவையும் கொண்டது. ஒப்பற்றது (சாரு தன் "எக்ஸைலில்" இட்லியை நிதம்பத்துடன் ஒப்பிடுவாரே அதற்கு ரொம்ப பொருத்தமான இட்லி இது). சரி அந்த ஓட்டலின் சிறப்பு போல என நினைத்துக்கொண்டேன். அடுத்த நாள் ஒரு தெருவோர சிறிய கடையில் இட்லி வாங்கினேன். அது இந்தளவுக்கு மென்மையாக இல்லையென்றாலும் அபாரமான சுவையைக் கொண்டிருந்தது. இந்த ஊரின் மண்ணில் விளைகிற அரிசியில்தான் ஏதோ மாயம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். அன்று மதியம் சாப்பிட்ட பிரியாணியின் சீரகச் சம்பாவும் தித்தித்தது. அப்போதுதான் அந்த ஊர் அரிசியில் உள்ள சிறிய இனிப்பு, வித்தியாசமான அடிநாக்கில் பரவும் இனிப்பே இட்லியை அவ்வளவு ரம்மியமான அனுபவமாக மாற்றுகிறது என்று புரிந்தது. அன்று மாலை அதே சேலத்தில் திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது இடைவேளையின்போது அரிசி விளம்பரம் போட்டார்கள்...

"நிழல் பொம்மை" - உரையாடல் நிகழ்வு - ஊட்டி இலக்கிய விழா

  வரும் சனிக்கிழமை ஊட்டியில் இலக்கியத் திருவிழாவில் என்னுடைய "நிழல் பொம்மை" நாவல் குறித்து எழுத்தாளர் எம்.டி முத்துக்குமாரசாமியுடன் பேசுகிறேன். இது ஒரு உரையாடல் நிகழ்வு. நேரமிருந்தால் நாவலில் இருந்து சில பத்திகளையாவது வாசித்துக்காட்ட ஆசையுண்டு. ஒரு எழுத்தாளர் இப்படித்தான் தன் நூலைக் குறித்து உரையாடி வாசகர்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என நம்புகிறேன். அதனால் நானே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் விண்ணப்பம் வைத்து அமர்வை இவ்வாறு உருவாக்கச் சொன்னேன். பொதுவாக நம் இலக்கிய விழாக்களில் நடப்பதைப்போல எழுத்தாளரை அழைத்து அவரது படைப்புலகுக்கு சம்மந்தமில்லாமல் சங்க இலக்கியதில் குதிரைகள், சமகால கொங்கு இலக்கியத்தில் குரங்குகள், நெல்லை இலக்கியத்தில் யானைகள் போன்ற பொதுத்தலைப்புகளில் எழுத்தாளர் பேசலாகாது. எழுத்தாளரின் பணி இலக்கியத்தைப் பயிற்றுவிப்பது அல்ல, தன் எழுத்தைப் புரொமோட் செய்வதும் மற்றவர்களைத் தம்மைக் குறித்துப் பேச வைப்பதுமே. எழுத்தாளர்கள் பொதுத்தலைப்புகளில் உரையாற்றினால், கல்யாண மண்டபங்களில் மைக்கில் வாழ்த்த வரும் பெரிசுகளைப் போல அவர்களை நடத்தும் சமூகம் மெல்லமெல்ல அவர்களைப் பேச்சா...

எது சுதந்திரம்?

என் வாழ்வில் நான் கலந்துகொண்ட மிகச்சிறந்த இலக்கிய கூட்டங்களில் ஒன்று இந்த மார்ச் மாதம் நடந்த புரவி இலக்கியக் கூடுகை. இதை மிஸ் பண்ணிய படைப்பாளிகள் நிஜமாகவே மிகப்பெரிய அனுபவம் ஒன்றை இழந்துவிட்டார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. இந்தக் கூட்டத்தில் என் அனுபவங்களைப் பற்றி பிறகு எழுதுகிறேன். இன்னொரு விசயத்தை இங்கு குறிப்பாகச் சொல்ல வேண்டும் - எனக்கு கிடைத்த படிப்பினை. கடந்த சில ஆண்டுகளாகவே நான் வெகுஜன ஊடகங்களைச் சேர்ந்த பிரபலங்களைச் சந்தித்தால் பிரியமாகப் போய்ப் பேசுவேன். என்னைச் சாதாரண மனிதராகவே அவர்களிடம் முன்வைப்பேன். அது ஒரு பிரச்சினையாகவே எனக்குத் தோன்றியதில்லை. ஆனால் புரவி கூடுகை என் எண்ணத்தை மாற்றியது. நீண்ட காலத்துக்குப் பிறகு நான் அங்கு ‘சமத்துவத்தை’ அனுபவித்தேன். இதைக் கேட்க உங்களுக்கு வினோதமாக இருக்கும். நாம் பொதுவாக சமமாக உள்ளதாகவே நம்புகிறேன் - அலுவலகத்தில், தெருவில், வீட்டில், நண்பர் குழாமில். ஆனால் அது உண்மையல்ல - ஏதோ ஒரு படிநிலை, ஒப்பீட்டு அலகு அங்கு செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. அங்கு மரியாதையோ ஏற்போ இல்லை, எடையிடப்படுவதும் நிலைவைக்கப்படுவதுமே உள்ளது. சாரு ‘சகஹிருதயர்’ எனும்...

மாற்று தெய்வம்

  There Is No God. This negation must be understood solely to affect a creative Deity. The hypothesis of a pervading Spirit co-eternal with the universe remains unshaken. — Percy Bysshe Shelley, Queen Mab, Canto VII, Note 13 நம் ஊரில் பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்று ஒரு பக்கமும் வலதுசாரி சிந்தனை, மதவாதம், கடவுள் நம்பிக்கை, தமிழ் தேசிய சைவம் என இன்னொரு பக்கமும் இரு முகாம்களாகப் பிரிந்து போனதில் தன் எதிரிலுள்ள உலகை, வாழ்வை எதிர்கொள்ளும் ஆற்றலோ முகமையோ இல்லாத தனிமனிதர்கள் கதிகெட்டவர்களாக, வழியற்றவர்களாக மாறினார்கள். இன்று அவர்கள் அதிகமாக கேளிக்கை, சுய அழிவு எனப் பயணிக்கிறார்கள். விஷ்ணுபுரம், ஈஷா போன்ற வசீகரமான முற்றதிகார அமைப்புகளை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். யோசித்துப் பாருங்கள் - பொருளாதாரம், அதை ஒட்டிய சமூக அமைப்புகள், அசைவுகள், தேசியம், அதன் பாலான அதிகாரத்துவம் எல்லாமே நம் எல்லையை மீறி உள்ளன. காலம் நமக்கு கைகூடாமல் நழுவிப் போய்க்கொண்டே இருக்கிறது. அப்போது நமக்கு ஊக்கமும் நம்பிக்கையும் தருவது அமைப்புகளோ, கருத்தியலோ, தத்துவமோ கூட அல்ல, படைப்பூக்கம் மட்டுமே. படைப்பூக்கம், கற்பனை, ...

"கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்" நாவல் பிரஞ்சு மொழியாக்கம்

"கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்" நாவலின் பிரஞ்சு மொழியாக்கம் கிண்டிலில் வெளியாகி உள்ளது: https://www.amazon.fr/dp/B0DZ3WK7NW