Skip to main content

மதம் இருந்தே ஆகும்


சப்பைக்கட்டுக்காக சொல்லவில்லை - பிரான்ஸைப் போல இந்தியா முழுமையான மதசார்பற்ற நாடு அல்ல. இந்தியாவில் அரசியல்வாதிகள், பிரதமர்கள், முதல்வர்கள் எல்லாருமே வெளிப்படையாக மதச்சின்னங்களை பாவிப்பார்கள், நிகழ்வுகளில் பங்கு கொள்வதை பிரச்சாரம் ஆக்குவார்கள், அவர்களுடன் ஒட்டுறவில் இருக்கும் அதிகாரிகளும் இவ்வாறே இருப்பார்கள். சிறுபான்மை மத நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்களிலும் மதத்தை / மதக்கருத்துக்களை போதிப்பதில் சட்டரீதியாக தடையில்லை (ஆனால் துபாய் போன்ற நாடுகள் அனுமதிக்காததால் அங்கு இதைவிட நிபந்தனைக்குட்பட்ட மதசார்பின்மை உள்ளது.) 

நாம் ஏன் மதவாத மதசார்பின்மை தேசமாக இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள 18-19ஆம் நூற்றாண்டுக்குப் போக வேண்டும் - இந்தியாவின் சமூக சீர்திருத்த, அரசியல் எழுச்சி அமைப்புகள், நிகழ்வுகள் மதத்தின் அடிப்படையில் தோன்றியவையே. நமது சுதந்திரப் போராட்டமும் அதன் நீட்சியே. நம்மை ஆண்ட பிரிட்டீஷ் அரசும் இதை ஊக்குவித்தது. அவர்கள் காலத்தில்தான் -1870இல் - கும்பமேளா மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டது. பிரிட்டீஷார் இதை வருமான வழியாகவும், மதம்சார்ந்த தேச உருவாக்க உத்தியாகவும் கண்டார்கள். நேருவின் காலத்தில் தான் மிகப்பெரிய கும்ப மேளா நிகழ்ந்து அதில் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டு கூட்ட நெரிசலில் மக்கள் இறந்தார்கள். இது அண்மையில் மோடி யுகம் வரை தொடர்கிறது. மதச்சடங்குகளில் அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் அமைச்சர்களும் பங்கேற்பது தமிழ்நாட்டிலும் நீள்கிறது. 

இந்த வரலாற்றை கருத்திற் கொண்டு நாம் மதசார்பற்ற நாடு எனும் பாசாங்கை விட்டொழிக்க வேண்டும். 

இன்னொரு விசயம் - நம் ஊரில் மதப்பழக்கத்தை மூடநம்பிக்கை, பிற்போக்கு சிந்தனை, சாதியத்துடன் முடிச்சுப்போட்டு ஒரு பக்கம் இதைக் கண்டித்தபடியே பாசாங்காக உள்ளுக்குள் பின்பற்றுகிறோம். என்னிடம் கேட்டால் இதன் பயன் என்னவென வினவ வேண்டும் - இந்திய / தமிழ்ச் சமூகம் இந்த நவதாராளவாத நெருக்கடியில், பின்நவீன மனநிலையில் சிக்கிச் சிதறாதிருக்க, ஒற்றைத் திரளாக உணர்வதற்கு மதநம்பிக்கையும் கூட்டுச் சடங்குகளும் உதவுகின்றன, தற்கொலைகள், மனநிலைக் குலைவுகளைக் குறைக்கின்றன. சமூகமாகத் தொடர சில நன்மைகளை அளிக்கின்றன. ஆகையால் அரசியல், வரலாற்றுரீதியாகவும், சமூக உளவியல் ரீதியாகவும் மதம் இருந்தே ஆகும்.

இது சிறுபான்மைக்கு என்னவிதமான நெருக்கடியைக் கொணரும் என்பது மட்டுமே முக்கியமான ஒரே கேள்வி - இதை 100 ஆண்டுகளுக்கு முன்பே ஜின்னா எழுப்பினார். அவர் சொன்னது உண்மையாகி இருக்கிறது. அதற்குத் தீர்வு மக்களிடம்தான் இருக்கிறது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...