Skip to main content

படித்த வேலை பார்க்கும் தகுதியுள்ள மனைவிக்கு பராமரிப்புத் தொகையைக் கொடுக்கலாமா?


 

நல்ல தீர்ப்பு! படித்து வேலையில் இருக்கும் அல்லது உயர்படிப்பு முடித்த பெண்களுக்கு பராமரிப்புத் தொகையை மாதாமாதம் கொடுப்பது அவசியமில்லை. பட்டப்படிப்பை முடிக்காதவர்களுக்கு கொடுக்கலாம், அது நியாயம். அதுவும் கணவர் நன்கு படித்து அதிகம் சம்பாதிக்கையில் மட்டுமே. கல்யாணத்துக்காக ஒரு பெண் தன் தொழில் வாழ்வை, அனுபவத்தை அத்தனைக் காலம் தியாகம் பண்ணியதால் அவளுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் எனும் வாதம் தவறானது - அவருக்கு மாதம் 50,000-100000 சம்பாதிக்கும் வாய்ப்பிருந்து அதைக் கணவருக்காக விட்டொழித்தார் எனில் அது அவரது தவறே. கல்யாண வாழ்க்கை ஒரு சமரசம் - வேலையை சில தேவைகளுக்காக ஒருவர் விட்டுக்கொடுப்பது அவர் முடிவுதான். அதற்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். கல்யணத்தின்போது கணவர் வற்புறுத்தினால் அந்த கணமே அவரை விவாகரத்து பண்ணலாமே. அல்லது கல்யாணத்திற்கு முன்பே பேசி முடிவு செய்யலாமே. இம்மாதிரி தனிப்பட்ட முடிவுகளுக்காக வாழ்நாள் முழுக்க பராமரிப்புச் செலவைக் கோருவது நியாயமற்றது. தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி வர்க்கரீதியாக, கல்வித் தகுதி சார்ந்து இதைப் பார்ப்பது ஒரு நல்ல மாற்றம்.

தகுதியில்லாதவர்களுக்கு பராமரிப்புத் தொகையைக் கொடுப்பதிலுள்ள வேறு இரு சிக்கல்களையும் குறிப்பிட வேண்டும்:
பணம் கொடுப்பதை வாழ்நாளில் எப்போதும் தவறவிட்டாலும் நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டிவரும் என்பதால் ஆண்கள் இதைத் தவிர்க்க வேறுவழியின்றி பெரும் செட்டில்மெண்டைத் தர முன்வருவார்கள். இதற்காகவே சிலர் இப்போது இடைக்கால பரமாரிப்புத் தொகை கேட்டு விண்ணப்பித்து பெற்றும் விடுகிறார்கள். இது ஆண்களை மிரட்டி சமரசத்துக்குப் பணிய வைக்க உதவுகிறது. இரு கட்சிக்காரர்களுக்கும் இடையில் அசமத்துவத்தை ஏற்படுத்துகிறது. சட்டத்தை அதன் நடைமுறைப் பயன்பாட்டில் பாரபட்சமாக்குகிறது.
அடுத்து, பராமரிப்புத் தொகையை ஒரு பெண் கோரும்போது அவரது சொத்துக்கணக்கு, டிஜிட்டல் பரிவர்த்தனையை நீதிமன்றம் சோதிப்பதில்லை. அதை நிரூபிக்கும் பொறுப்பு ஆணுக்கு வந்துவிடுகிறது. அதேபோல, ஆன்லைனில் வேலை செய்யும் பெண் தான் வேலையில் இல்லையென்று கூறினால் அவரது கணவரால் அதை நிரூபிக்க முடியாது. வேலையில் இல்லாத பெண் பராமரிப்புத் தீர்ப்புக்குப் பின்பு வேலை பெற்று சம்பாதித்தாலும் அதை அவரிடம் இருந்து பிரியும் கணவரால் சுலபத்தில் தெரிந்துகொள்ள முடியாது. விவாகரத்துக்குப் பின்பு அவரவர் வழியில் தனித்தனி உலகங்களில் வாழ்கிற, வெவ்வேறு நகரங்களில் இருக்கிற தம்பதியினருக்கு இது சிக்கல். சதா முன்னாள் மனைவியை கணவர் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர் வேலைக்குப் போகிறாரா இல்லையா என்பதை ஆள் வைத்துக் கண்டுபிடிக்க வேண்டும். அதை ஆதாரத்துடன் நீதிமன்றத்திடம் கொண்டு சேர்த்தாலே நீதிமன்றம் தீர்ப்பை ரத்துப் பண்ணும். பட்டறிவு இல்லாத, ஏழை வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இம்மாதிரி ஏமாற்ற வாய்ப்புகள் இருக்காது. மேற்தட்டினர் சுலபத்தில் செட்டில்மெண்ட் கொடுத்து முடித்துவிடுவார்கள். இது மேல்மத்திய, மத்திய வர்க்கப் பிரச்சினையாகும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...