Skip to main content

பிளாக்லிஸ்ட் கலாச்சாரம்


தமிழ்நாட்டில் இலக்கியத் திருவிழாக்களில் யார் அழைக்கப்பட வேண்டும், எவ்வளவு சன்மானம் வழங்கப்பட வேண்டும் என்பதெல்லாம் ரெண்டாவது விசயம் - ஆனால் பிளாக் லிஸ்டிங் பயம்தான் ஆக மோசமானது. மறுத்தாலோ விமர்சித்தாலோ தம்மை ஒரேயடியாக இருட்டடித்து விடுவார்கள் எனும் அச்சம் எல்லாரிடமும் உள்ளது. ஜி. குப்புசாமியின் இன்றைய குறிப்பிலும் அதைக் குறிப்பிட்டு தான் அஞ்சவில்லை என்கிறார். அரசு யாரையும் பிளக்லிஸ்ட் பண்ணச் சொல்வதில்லை என்றாலும் அதிகாரிகளுக்கு அம்மனநிலை உள்ளது. இது மெல்லமெல்ல பிளாக்லிஸ்ட் கலாச்சாரத்தை உண்டு பண்ணுகிறது, முணுமுணுப்பவர்கள் மெல்ல அமைதியாகிறார்கள். இந்த அச்சம் தம்மை சுயதணிக்கை செய்யவும் பரஸ்பரம் கட்டுப்படுத்தவும் செய்வது.

நான் முதுகலை படித்த எம்.ஸி.ஸியில் ஒரு வழக்கம் உண்டு - விடுதிக்கென்று மாணவர் தேர்தல் நடக்கும். அதில் வெற்றி பெறும் தலைவரை தேர்தலின்போது கடுமையாக விமர்சித்துத் தோற்றுப் போகிறவரை பிளாக்லிஸ்ட் பண்ணாமல் முக்கியமான பொறுப்புகளைக் கொடுப்பார்கள். அவரை மிகுந்த மரியாதையுடன் தலைவர் நடத்தியாக வேண்டும். இதன்வழியாக எதிர்க்குரல் ஆட்சியின் பகுதியாகி விடும். அது எதிர்க்குரலாகவே நீடிக்கும் சுதந்திரமும் உண்டு. உண்மையான ஜனநாயகப் பண்பாடு அது. வெள்ளைக்காரன் எம்.ஸி.ஸியை ஆரம்பித்தபோது கொண்டு வந்தது.

ஆனால் இன்று அதெல்லாம் எங்குமே சாத்தியமில்லை. வாயை மூடுவதும், 'சரியான' விசயத்தை மட்டுமே எப்போதும் பேசுவதுமே இன்றைய ஜனநாயகம் - இப்போது நாம் பின்-மக்களாட்சி காலத்தில் வாழ்கிறோம். மிகுந்த சுதந்திரத்துடனும் அதே நேரம் அதைப் பயன்படுத்தும் அச்சத்துடனும் வாழ்வதே பின்-மக்களாட்சி காலத்தின் இயல்பு.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...