அபிலாஷ் எழுதிய ‘ரசிகன்’ நாவலின் 3வது பகுதியின் 6ஆம் அத்தியாயத்தை மட்டுமே ஒரு குறும்படமாக எடுக்கலாம். கதாநாயகனான சாதிக்கின் முன்னாள் காதலியான பிரவீணாவின் வீட்டில் கதைசொல்லியான சங்கர் சில நாட்கள் தங்க நேர்கிறது. பிரவீணாவும் சங்கரும் மொட்டை மாடியில் மது அருந்துகின்றனர். மாடிச்சுவரின் விளிம்பில் பிரவீணாவின் பாதி பிருஷ்டம் பாதி பிதுங்கி இருந்தது. அவள் மதுக்கோப்பையைத் தன் தொடைகளுக்கு இடையே வைத்து வெல்லத் தேய்க்கத் தொடங்குகிறாள். இதைக் கண்டு சாதிக் அவளைக் கண்டிக்கிறான். தன் செயலியை எண்ணி அவமானத்தில் கூசிப் போய் சங்கரிடம் மன்னிப்பு கேட்கிறாள் பிரவீணா. “விடு இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே ரெண்டு பேரும் மறந்திடுவோம்” எனக் கடந்துபோகிறான் சங்கர். “என்னை நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு. என்னை யாருக்கும் பிடிக்காது. எனக்கு ஃப்ரெண்ட்ஸ் இல்லை. சாதிக்கும் என்னைவிட்டுப் போய்ட்டான்” என அவனிடம் புலம்பினாள். “எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்” எனச் சொல்லி பிரவீணாவை ஆறுதல் படுத்துகிறான். பிறகு அந்தப் பேச்சிலிருந்து திசைதிருப்புவதற்காக அவளின் குடும்பம் பற்றிக் கேட்கிறான். அதற்குப் பிரவீணா, “சின்ன வயசுல என்ன...