Skip to main content

மர்ம தேசம்

ஜூன் 4க்குப் பிறகு பாஜக எப்படி நடந்துகொள்ளும் என்பதைப் பற்றின கணிப்புகள் எனக்கு எமர்ஜென்ஸி காலத்தில் இந்திரா-சஞ்சய் அணி காங்கிரஸ் கட்சியையும் ஊடஙகளையும் ஒரேயடியாக கட்டுப்படுத்தி எந்த உண்மை செய்திகளும் மக்களுக்கு போய் சேர விடாமல் தடுத்து ஒரு பூடகமான, மர்மமான சூழலை உருவாக்கியதை நினைவுபடுத்துகிறது. இந்திரா சட்டம் மூலமாக கடும் ஊடக தணிக்கையை கொண்டு வந்தார் எனில் மோடி-ஷா ஊடகங்களின் பங்குகளை விலைக்கு வாங்கி, அமலாக்கத் துறையை ஏவிய அச்சுறுத்தியும், ஓசி விளம்பரங்களைக் கொடுத்தும் அனேகமாக எல்லா ஊடகவியலாளர்களையும் ஊடக முதலாளிகளையும் மறைமுக தணிக்கை செய்துவிட்டார்கள். ஒட்டுமொத்த தேசமும் அடுத்து என்ன நடக்கப் போகிறது எனும் கையறு நிலையில் இருக்கிறது. வாக்களிப்பதுடன் மக்களின் பங்கு முடிவதில்லை, ஜனநாயக விழுமியங்கள் பேணப்பட்டு அடுத்த அரசு ஒழுங்காக அமைவதையும் உறுதிபடுத்த வேண்டும் என சில சிவில் அமைப்புகள் கோரும் நிலை வந்திருக்கிறது. ராணுவ ஆட்சி, வாக்கு எந்திரங்களை கைப்பற்றுவது போன்ற புரளிகளும் பரவுகின்றன. இந்திராவின் எமெர்ஜென்ஸியின் போது அவர் அமெரிக்க சதியுடன் தன்னைக் கொல்லும் சதித்திட்டம் உள்ளது எனத் தொடர்ந்து பேசி வந்ததுடன், தேர்தலிலும் எதிர்க்கட்சிகளுக்கு நிதியளிப்பது அமெரிக்க உளவுத்துறையே என்றார். இது போக தேர்தலில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர்களை அவர் கடைசி சில வாரங்கள் வரும் வரை அனுமதிக்கவில்லை. கிட்டத்தட்ட எல்லா எதிர்க்கட்சியினரும் சிறையிலிருந்த நிலையிலே ஒரு அரசியல் எழுச்சி நிகழ்ந்து இந்திரா ஆட்சியை இழந்தார். ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியின் போது அங்குள்ள ஜெர்மானிய பிரஜைகளுக்கு இரண்டாம் உலகப்போரின் போது அவர்களுடைய தேசம் பல மாதங்களாக தோல்வியைத் தழுவி வரும் உண்மை தெரிவிக்கப்படவில்லை. ஹிட்லர் வீழ்ந்த பின்னரே அவர்கள் அதிர்ச்சியடைந்து என்ன நிஜமாகவே நாம் தோற்றுவிட்டோமா எனக் குழம்பியதாக சொல்வார்கள். கடந்த முறை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோற்ற பிறகும் அவரது ஆதரவாளர்களுக்கு அவர் வென்றுவிட்டதாகவே சொல்லப்பட்டது, அவர்கள் அதனாலே அவரது தோல்வியை ஏற்காமல் கலவரம் பண்ணினார்கள், டிரம்பும் கடைசி வரை அதை ஏற்க தலைப்படவில்லை. மோடி ஆண்ட் கோவின் நடவடிக்கைகளும் இப்படியே உள்ளன.
என்ன பிரச்சினையெனில் இந்திராவோ ஹிட்லரோ டிரம்போ இப்போது மோடியோ தோல்வியை ஒப்புக்கொண்டால் தலைபோகும் எனும் அளவுக்கு குற்றங்களை, மோசடிகளை இழைத்திருக்கிறார்கள், ஊழல் செய்திருக்கிறார்கள், தோல்வி என்றால் முடிவு எனும் இடத்திற்கு வந்துவிட்டார்கள். இது சர்வாதிகாரிகளின் உளவியல் மற்றும் நடத்தை. அவர்களுடைய உளச்சிதைவு ஒரு தேசத்தின் மனநிலையாகவும் பீதியாகவும் மாற்றப்படுவதே அவலம்.
வரலாற்றில் நாம் காணும் இன்னொரு வினோதம் சர்வாதிகாரிகளை வலதுசாரி நிறுவனங்களுடன் முதலீட்டாளர்களின் லாபி ஒன்றும் சேர்ந்தே எப்போதும் வளர்த்தெடுக்கிறது என்பது. (இந்திரா மட்டுமே இதில் விதிவிலக்கு; எதிர்க்கட்சிகளுக்கு நிதியளித்து அவரை வீழ்த்த முயன்ற இந்த லாபி மீதான அச்சத்தாலும் தன் பதவி ஆசையாலும் அவர் சர்வாதிகார லட்சணங்களை வெளிப்படுத்தினார்.) இந்த முதலீட்டிய லாபியும் ஸ்தாபனங்களும் இவர்களை தற்காலிகமாக கைவிட்டால் தோல்விக்குப் பின்னர் மக்கள் இவர்களை மன்னித்து ஏற்பதும் நடக்கவே செய்கிறது. ஹிட்லரை அவரது வீழ்ச்சிக்குப் பின்பும் ஜெர்மானியர்களில் பெரும்பகுதியினர் சுலபத்தில் வெறுக்கவில்லை. ஆனால் போகப் போக அவரை மறந்துவிட்டார்கள். அவர் இறந்து போகாமல் தேர்தலில் நின்றிருந்தால் ஜெயித்திருப்பாரா என்பதும் சந்தேகமே. ஆனால் இந்திராவும் மீண்டு வந்தார். அவர் உண்மையான தலைவர்.

டிரம்பு இப்போது முழுமையான காணாமல் போய்விடவில்லை. பாலியல் வழக்குகள், மோசடி வழக்குகளுடன் போராடிக்கொண்டு தன் ஆதரவாளர்களையும் அரவணைத்து தான் போகிறார். ஆனால் மோடிக்கு இந்த முதலீட்டாளர்கள், ஊடக, ஸ்தானப ஆதரவுக்கு வெளியே ஒரு மக்கள் ஆதரவு உண்டா என்று எனக்கு சந்தேகம் உண்டு. ஏன் பிரச்சினை வரும் போதெல்லாம் அவர் மக்களின் பிரச்சினையை பேசாமல் அம்பானி, அதானிகளுக்கு சாதகமான கூடுதல் முடிவுகளை எடுப்பது, கோயில் கட்டுவது, வேடம் போடுவது என மீண்டும் ஊடகங்களயே சார்ந்து நிற்க நேர்கிறது? அவர் ஹிட்லரைப் போல ஒரு வெற்று பிம்பமோ எனும் சந்தேகம் எழுகிறது? இல்லாவிடில் அவர் ஏன் உண்மையை (பணவீக்கம், வேலையின்மை, ஏற்றத்தாழ்வான வளர்ச்சி, அதிக வரிகள்) எதிர்கொள்ள விரும்பாமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...