Skip to main content

இந்தியா இஸ்ரேலாகுமா?


பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இந்தியா பெரும்பான்மை யூதர்களின் வாக்குகளை மட்டும் கொண்டு ஸியோனிஸ்ட் கட்சிகளை மட்டும் ஆட்சியில் வர அனுமதிக்கும் இஸ்ரேலைப் போல ஆகும் என மாலன் அந்திமழை பேட்டியில் கூறுவதைக் கேட்டேன். இதெல்லாம் என்ன மாதிரி ஒப்பீடு? இஸ்ரேலின் வரலாறு, பண்பாடு, பொருளாதாரம், இனக்குழு அடையாளம், மதங்கள் வேறு இந்தியா வேறு. இஸ்ரேல் செயற்கையாக மேற்கத்திய சக்திகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட சிறிய நாடு. இந்தியாவோ மிக மிக சிக்கலான பரந்துபட்ட தேசம். காலனியவாதிகள் வருமுன்பே இந்து அடையாளம் அற்று பல்வேறு தொகுப்புகளாக வாழ்ந்து வந்த மக்கள் இந்தியர். எத்தனையோ நம்பிக்கைகள், பண்பாடுகள், தத்துவங்கள், மொழிகள், சாதிகள், மதங்களைக் கொண்ட தேசம் இது. இங்கு ராமர் பெயரிலான அரசியல் பிரச்சாரம் மகாராஷ்டிர தலித்துகளை பதற்றமாக்குகிறது. தென்னிந்தியர்களை அந்நியமாக்குகிறது. வைணவ தலைமையை சைவர்கள் ஏற்க மாட்டார்கள். ஆனால் சிவனுடன் விஷ்ணுவையும் வழிபட தயங்க மாட்டார்கள். கேரள சி.எம்.ஐ சபையினர் தம் ஏசுவின் பக்கத்தில் சங்கரரை வைத்திருக்கிறார்கள். பல பௌத்த கோயில்களை இந்துக்கோயில்களாக்கி எந்த பிரச்சினையும் இன்றி வழிபடுகிறோம் என விவேகானந்தர் மகிழ்ச்சியுடன் கோருகிறார். தமிழ்நாட்டு இஸ்லாமிய சடங்குகள், விழாக்களில் இந்துமத சாயல் உண்டு. இந்தியர்களின் மத அணுகுமுறை விசித்திரமானது - மிக மிக நீர்மையானது.
இப்படியான மக்கள் தொகுதியை நீங்கள் எப்படி யூதர்களுடன் ஒப்பிட முடியும்?
நமது பாராளுமன்ற தேர்தல் வரலாற்றைப் பாருங்கள் - ஒரு போதும் சர்வாதிகாரிகள் நீடித்ததோ மதவாதத்துக்காக மக்கள் பெருவாரியாக வாக்களித்ததோ இல்லை. 2014இல் பாஜக வளர்ச்சியின் பெயரிலும் 2019இல் தேசப் பாதுகாப்பின் பெயரிலும் பொய்ப் பிரச்சாரம் பண்ணி ஆட்சியைப் பிடித்தது. அவர்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலே மோடியின் பிம்பம் முழுவதுமாக சரிந்து குப்பையில் கிடக்கிறது. மதவாத வெறிக்காக அவருக்கு வெற்றியை இந்த நாடு இதுவரை அளிக்காத போது இனிமட்டும் எப்படி அளிக்கும்? அதுவும் 200 தாண்டுவார்களா என்பதே கேள்வியாக இருக்கும் போது இவர் நிரந்தர இந்து பெரும்பான்மை ஆட்சி பற்றி பேசுவது அவரது ஆழ்மன ஆசையின் வெளிப்பாடு அன்றி வேறொன்றுமில்லை. ஆனால் அவர் அதை ரொம்ப பாந்தமாக பட்டும்படாமலும் விஷம் ஏற்றுவதைப் போல 'நடுநிலையாக' சொல்வார்.
மாலன் ஒருபக்கம் இப்படி பேசினால் மற்ற பாஜக எதிர்ப்பு தமிழ் சேனல்களில் பல வினோத சாத்தியங்களை பேசுகிறார்கள். ஜூன் 4 வரும் வரை பவாவை விட பயங்கரமாக கதை சொல்வார்கள் போல!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...