Skip to main content

"ரசிகனில்" சில சிறந்த உரையாடல்கள் - பாலு

”இந்த செக்ஸ் சொறி மாதிரி. சொறிய சொறிய சொகமா இருக்கும். ஆனா புண்ணான பெறவு வலிக்கும், ரத்தம் வரும். லவ் பன்ணும்போது செக்ஸுக்கு கொஞ்சமாவது நியாயம் இருக்கும். ஒரு கட்டுப்பாடு வரும். ஆனா கண்ட பொண்ணுங்க பின்னாடி போய் உரசுறது ஒரு வியாதி. ஒரு புண்”

*

“புண்ணுக்கு ஏன் மருந்து போடணும்? சொறிஞ்சு சொறிஞ்சு சுகம் காணலாமே? ஏன்னா சொறிஞ்சா சொகமாத்தான் இருக்கும், ஆனா கடைசியில வலிக்குமில்லா, அதுக்குத்தான், நிரந்தரமா ஒரு திருப்தியோட நிம்மதியோட இருக்கணுனா செக்ஸை பிழிந்து வெளியே போடணும்”

*

“செக்ஸை கடந்து போறது ஈஸி”

“அதெப்படி ஈஸி?”

“நிறைய பேரு பண்ணிக் காட்டி இருக்காங்க. காந்தி ஒரு எக்ஸாம்பிள். அவரு தொடர்ந்து கையடிக்காமலே பொண்ணுங்ககிட்ட போகாமலே இருந்திருக்காரு.”

“அதெப்படி? உடம்பே வெடிக்கிற மாதிரி இருக்குமே”

“இருக்கும். ஆனா அந்த எனர்ஜிதான் பெரிய எனர்ஜி. செக்ஸில் நாம வீணடிக்காத எனர்ஜியை சரியான வேற விசயங்களில பயன்படுத்தலாம். இல்லாட்டி சும்மாவே இருக்கலாம். மனசு சுத்தமா இருக்கும்.”

“அதெப்படி இருக்கும்?”

“செக்ஸ் அழுத்தம் இல்லாடி நீ எதையும் சாதிக்க வேண்டியதில்ல. உன் தோற்றம், அந்தஸ்து பத்தி கவலை இல்ல. உன் இஷ்டத்துக்கு வாழலாம். யோசிச்சுப் பாரேன், எந்தப் பொண்ணு பத்தியும் யோசிக்காம வாழ்ந்தா எவ்வளவு ஃப்ரீயா இருக்கும்.”

*

“நாம பார்க்கிற சினிமா, கேட்கிற கதை, பார்க்கிற ஓவியங்கள், அப்புறம் பொண்ணுங்க தங்களை அலங்கரிச்சுக் காட்டிக்கிற விதம் இதுதான் செக்ஸி, அழகுன்னு நமக்கு ஒரு அபிப்ராயத்தை உண்டாக்குது. ஆனா அது செயற்கையா உருவான ஒரு பிம்பம். யோசிச்சு பாரேன், தொப்புள்னா என்ன? ஒரு சின்னக் குழி, அதைப் பார்த்தா நமக்கு ஏன் ஆசை வரணும். அம்மாவோட முலையைப் பார்த்தா ஆசை வருமா?

“இல்ல”

“எதைப் பார்த்தா ஆசை வரணும்னு நாமதான் தீர்மானிக்கிறோம். சிலருக்கு பொம்பளைக்க கால் முடிய பார்த்தாலே நட்டுக்கும். அது செக்ஸி, அது ஏதோ பிரமாதமான ஒண்ணுன்னு அவன் மனசுக்குள்ள பதிஞ்சு போச்சு. இதெல்லாம் நாமளே உருவாக்கிறது”

*

“சந்தோஷம்னா என்ன?”

“ஜாலியா பிடிச்சதை பண்ணிட்டு இருக்கிறது”

“இல்ல. ஜாலியா என்னதான் பண்ணினாலும் அது முடியும்போது அதிருப்தியா இருக்கும். அதனால்தான் குடிக்கிறவன் குடிச்சிக்கிட்டே இருக்கான். பொண்ணு பிடிக்கறவன் ஒவ்வொரு பொண்ணா தேடி அலஞ்சிக்கிட்டே இருக்கான். சந்தோஷம்னா ரொம்ப முக்கியமான வேலைகளை மட்டும் பண்றது.”

*

“நாத்திகமும் ஒரு மதம் போலத்தான். என்ன, கடவுளுக்கு பதில் தர்க்கம்”

“பிறகு எதுதான் சரி?”

“கடவுள் இல்லையென்பதை ஏற்றுக்கொள்ள நாத்திவாதிகளுக்கு உள்ளுக்குள் சிரமமாய் இருக்கிறது. அதனால் தர்க்கம் மூலம் இன்னொரு கடவுளை சிருஷ்டிக்கிறார்கள்.”

*

“நம்ம யங் ரைட்டர்ஸ்ட ஒரு பிரச்சனை சார். நல்லா இஅல்லேன்னாலும் ஏத்துக்க மாட்டாங்க. நல்லா இருக்குன்னாலும் நம்ப மாட்டாங்க. ஆனால் நிறைய படிக்கிறவங்க, எழுதித் தேர்ச்சி பெற்றவங்களைவிட எழுத்தனுபவமோ வாசிப்போ இல்லாதவங்ககிட்ட இருந்துதான் சிறந்த படைப்புகள் வர வாய்ப்பதிகம்”

*

“நாம முழு இருட்டில் உட்கார்ந்திட்டு இருக்கும்போது என்ன நினைப்போம்? நம்மள சுத்தி இருட்டு மட்டும்தான் இருக்குதுன்னு. இருட்டுதான் ஒரே நிஜம்னு தோனும். ஆனா அது உண்மையா? ஸ்விட்ச்சை போட்டா உடனே வெளிச்சம் வந்திடும். அதுவரை தெரியாத பொருட்கள் கண்ணுக்குத் தெரியும். அதுவரை நாம நினைச்சிக்கிட்டிருந்தது உண்மையான உலகம் இல்லைன்னு புரியும். அதுவரைக்கும் பொய்யையே உண்மைன்னு நினைச்சுக்கிட்டு இருந்தோமுன்னு புரியும்.”

(Some of the best conversations from 'ரசிகன்’ நாவல் by Abilash Chandran)

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...