Skip to main content

புதிய டிரெண்ட்


இதை எத்தனை பேர்கள் உணர்கிறீர்கள் எனத் தெரியவில்லை. எனக்கு ரஹ்மானின் அண்மைக்கால பாடல்கள் (கடந்த சில ஆண்டுகளாக) ஏதோ ராணுவ அணிவகுப்பு மெட்டைப் போல தோன்றுகின்றன. ஒரு எளிய மெட்டு, அதையே அடுத்தடுத்து சரணத்திலும் மீளப்பாடும்படியும் சில வாத்திய கருவிகளை அதே போல தட்டையாக ஒலிக்கவிட்டு முடித்துவிடுகிறார். (இதைப் பற்றி தன் பதிவு ஒன்றில் குறிப்பிட்ட பிரபாகர் வேதமாணிக்கம் ஒரு புதிய முறையை கொண்டு வர முயல்கிறார் ரஹ்மான் என்று சொல்லியிருந்தார்.)
ஆண்டுக்கு சராசரியாக பல பாடல்களை இப்படி உருவாக்கி கலர் கோழிக்குஞ்சுகளை போல வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார். ரஹ்மான் பாட்டு என்றாலே ஒரு வெறுப்பு தோன்றுகிறது. யார் பாராட்டினாலும் இப்போது நான் கேட்க தயாராவதில்லை. டங் டங் டடன் டங் டங் டங் டடண் டங் இப்படியே எல்லா பாடல்களும் போகின்றன. ஐந்தாண்டுகள் முன்வரை அவரது பாடல்களில் நிறைய சிக்கலான அமைப்புகள், படிவம் படிவமான மாறுபாடுகள், ஸ்வரங்கள் வரும் (அது அவராக உருவாக்கியதோ இல்லையோ). இப்போது அவரது நாட்டுப்புற மெட்டுடன் வரும் ஹிந்துஸ்தானி ஸ்வரம் கூட டங் டடங் என்.ஸி.ஸி, ராணுவ அணிவகுப்பு மாதிரியே ஒலிக்கிறது.
சரி ரஹ்மானிடம் தான் பிரச்சினை என நினைத்தால் அண்மையில் பாலிவுட் பாடல்களும் அப்படியே உள்ளன. பல்லவியைத் தாண்டி மெட்டு பல்லி போல சுவரில் இருந்து விழுந்துவிடுகிறது. பட்டாம்பூச்சி போல பறப்பதில்லை. அனேகமான பாடல்கள் முதல் சில வரிகளைத் தாண்டி மனதுக்குள் நுழைவதில்லை. 30 வினாடிப் பாடலை மூன்று நிமிடங்களுக்கு நீட்டியதைப் போல. இது ஒரு புதிய போக்கு, டிரெண்ட் என நினைக்கிறேன். ரஹ்மான் இப்படித்தான் குப்பையாக எல்லாம் போகப் போகிறது, இத்தலைமுறைக்கு இதுவே பிடிக்கும் என முடிவு பண்ணி முன்கூறாகவே தன் இசையின் பாணியை மாற்றிவிட்டார் என நினைக்கிறேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...