தில்லியில் நிகழ்த்தப்படும் வன்முறை சம்பவங்கள் கண்ணீரை வரவழைப்பவை . பாஜகவின் குண்டர்கள் எளிய மக்கள் மீது நடத்தும் இத்தாக்குதல்களின் நோக்கம் CAA, NRC க்கு எதிரான போராட்ட களங்களை உடனடியாய் கலைப்பது , போராளிகளிடத்து அச்சத்தை விதைப்பது என்பது தெளிவானது . எனக்கு இது ஈழத்தில் எண்பதுகளில் சிங்களப்பெரும்பான்மை அரசு தமிழக குடியிருப்புகள் மீது அவிழ்த்து விட்ட கலவரங்களை , யாழ்ப்பாண நூலக எரிப்பை நினைவுபடுத்துகிறது . குஜராத் படுகொலைகளையும் தாம் . வன்முறை மூலம் போராட்டங்களை ஒடுக்கலாம் எனும் யுத்தி வெற்றி பெறாது என வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது . தில்லி தேர்தல் முடிவும் பாஜகவுக்கு பளாரென ஒரு அறை கொடுத்தது . இருந்தும் ஏன் பாஜக அதே ஆயுதத்தை தூக்குகிறது என எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை ! இப்போது மெல்ல மெல்ல உண்மை புலப்படுகிறது !