Skip to main content

ஒரு நாள் வரும்!




என்னுடைய மொழியாக்கத்தில் மார்ச் மாதம் வெளியாகிற Kisses at Daybreak மனுஷ்யபுத்திரனின் 60 காதல் கவிதைகள் தாங்கிய நூல். அவரது முதல் ஆங்கில மொழியாக்க நூல் என நினைக்கிறேன். சுமார் மூன்று பத்தாண்டுகளாக எழுதி வரும், தீவிர வாசகர் மட்டுமன்றி எளிய வாசகர்களுக்கும் பரிச்சயமான ஒரு கவிஞருக்கு இவ்வளவு தாமதமாக ஆங்கில மொழியாக்கம் வருவது குறித்து எனக்கு ஆச்சரியமில்லை. அவர் அதற்கான முயற்சிகளை இவ்வளவு நாளும் எடுக்கவில்லை. அது மட்டுமே காரணம். சில படைப்பாளிகளுக்கு பதிப்பகங்களின் அரிய முயற்சியால் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் நூல்கள் மொழியாக்கப்பட்டு கவனம் பெற்றுள்ளன. காலச்சுவடு, க்ரியா, ஸீரோ டிகிரி போன்ற பதிப்பகங்களை இவ்விசயத்தில் குறிப்பிட்டு பாராட்ட வேண்டும். நூல் ஆங்கிலத்தில் வருவதற்கும் ஒரு படைப்பாளியின் பிரபலம் மற்றும் திறமைக்கும் எந்த பெரிய சம்மந்தமும் இல்லை. அதற்கான உள்கட்டமைப்பு, வேற்று மொழித் தொடர்புகள், தொடர்ந்து தொடர்பாக்கம் செய்து முயற்சி எடுப்பதற்கான ஆட்கள் இல்லாத காரணத்தாலே ஜெயமோகன், எஸ்.ரா போன்றோரின் முக்கிய நூல்கள் இன்னும் தமிழுக்கு வெளியே அதிகம் கிடைக்கவில்லை. இது ஒரு அவலம் என்றே சொல்வேன். எழுத்தாளன் நிச்சயம் இதன் பின்னால் அலைய முடியாது.

 மனுஷ்யபுத்திரனின் இந்த நூல் மொழியாக்கம் கூட மிக எதேச்சையாக நடந்ததே. அதைப் பற்றி பின்னர் எழுதுகிறேன்.
 ஆனால் எதிர்காலத்தில் இந்த நிலை மாற வேண்டும் என்பது என் ஆசை. இப்போதே பிராந்திய மொழிகளை  கார்ப்பரேட் நிறுவனங்கள் வட்டம் போடத் தொடங்கி விட்டன. ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்படும் நூல்களில் இருந்து கவனம் இனி பெருமளவு பிராந்திய மொழியாக்கங்களுக்கு மாறும் என நினைக்கிறேன். இப்போது கூட நம்முடைய எழுத்தாளர்களை ஆங்கிலப் பாடத்திட்டங்களில் பரிந்துரைப்பதற்கு பெரிய தடையாக மொழியாக்கமே உள்ளது. அசோகமித்திரனை பிற மொழியினருக்கு தெரிந்த அளவுக்கு ஏன் புதுமைப்பித்தனையோ நகுலனையோ தி.ஜா, ஜி.நாகராஜன், .சா.ராவையோ தெரியவில்லை என நான் வியந்ததுண்டு. ஈழ இலக்கியம் என ஒன்று இருப்பதே இங்கு கல்விப்புலத்தில் பலரும் அறிய மாட்டார்கள் (ஷோபா சக்தியின் சில நூல்கள் மொழியாக்கப்பட்டதாய் அறிகிறேன்). ஆங்கிலத்தில் இவர்களின் புத்தகங்கள் போய் சேராதது தான் மிகப்பெரிய காரணம். சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சில கதைகளை மொழியாக்கினால் கூட அது பெரிய கவனம் பெறும் என நினைக்கிறேன். ஜெயமோகனின்விஷ்ணுபுரம்தொண்ணூறுகளின் இறுதியில் மொழியாக்கப்பட்டிருந்தால் அது அப்போது பிரசித்தமான பல ஆங்கில இந்திய நாவல்களுக்கு இணையாக பேசப்பட்டிருக்கும் என கணிக்கிறேன் - அதற்கு ஏற்ற ஒரு அகில இந்தியத்தன்மை அந்நாவலுக்கு உண்டு; மேலும் சுதந்திரம் பெற்றதற்கு பின்பான இந்தியா குறித்தான ஒரு நீதிக்கதையாகவும் அந்நாவலைப் படிக்க முடியும்


நான் பெங்களூருக்கு வந்த பிறகு என்னுடையகால்கள்நாவல் ஆங்கிலத்தில் வந்துள்ளதா என அடிக்கடி யாராவது விசாரிப்பார்கள். அப்போது நான் என் முன்னோடிகளை நினைத்துக் கொள்வேன். அவர்களுக்கு நிகழாதது எனக்கு மட்டும் ஏன் நிகழ வேண்டும். ஆனால் ஒருநாள் வரும். அன்று உலகம் முழுக்க நம் எழுத்துக்கள் பேசப்படும்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...