Skip to main content

எங்களைத் தூங்க விடுங்கடா எனும் இந்திய அணி


நியுசிலாந்தில் தற்போது நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் டெஸ்டில் அவமானகரமாய் தோற்றது. அதாவது சில தேர்வுகளில் மாணவர்கள் ரெண்டு மணிநேரமும் பெஞ்சில் படுத்து தூங்கி விட்டு வெறுமனே பெயரை மட்டுமே எழுதிக் கொடுத்து விட்டு கிளம்புவார்களே அப்படி ஒரு ஆட்டம். அடுத்த டெஸ்டில் நாம் இதை விட மோசமாகவே தோற்க வாய்ப்பு.

 இந்த போக்கு ஒருநாள் தொடரை 3-0 என இழந்த போதே தொடங்கி விட்டது. ஒரு போட்டியை எதிரணியின் திறமையின் முன் தோற்கலாம். அதில் எந்த பரிதாபமும் இல்லை. ஆனால் இது போட்டி ஆரம்பிக்கும் முன்னரே தலையை பலிபீடத்துக்கு கொடுத்து விட்டு கண்ணை மூடிக் கொள்ளும் தோல்வி. ஒருநாள் தொடரில் இருந்தே பாதி பேர் எந்த வித பங்களிப்பும் செய்வதில்லை - ஷா, அகர்வால், கோலி, ஜாதவ், பும்ரா ... என இந்த கும்பர்கர்ணர்களின் வரிசை போகிறது. முன்னெப்போதும் இப்படி ஒரு பாதி அணி தொடர்ந்து பங்கேற்காமல் பட்டும்படாமல் ஆடியதில்லை. டெஸ்ட் தொடர் ஆரம்பித்ததும் புதிதாக வந்தவர்களிடம் ஒரு முனைப்பு தெரிந்தது - ரஹானே, அஷ்வின், இஷாந்த் என. அகர்வாலும் சமாளித்து நன்றாக ஆடினார். ஆனால் அவரிடத்தை புஜாரா எடுத்துக் கொண்டு கடைசி பெஞ்சில் இடம் பிடித்துக் கொண்டார். மிச்ச மட்டையாளர்கள் மற்றும் பவுலர்களிடம் தென்படுவது களைப்பு என்றால் புஜாரா தொடர்ந்து ரன் அடிக்காத தடுமாற்றத்தில் இருக்கிறார்

இதை தேர்வாளர்கள் சற்று சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் - நீங்கள் ஒரே அணியைத் தொடர்ந்து டி-20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் என மாதக்கணக்கில் ஆட வைத்தால் அவர்கள் திடீரென ஒருநாள் வயதானதைப் போல உணர்வார்கள். வெற்றிக்கும் தோல்விக்கும் பெரிய வித்தியாசம் தெரியாது; சீக்கிரம் முடித்துக்கொண்டு அதிக பாதிப்பு இல்லாமல் வீடு திரும்பினால் போதும் என நினைப்பார்கள். குறிப்பாக இந்த களைப்பு, ஆற்றல் வடிந்து போன உணர்வு வீரர்களை பயணங்களின் போது தான் அதிகமாய் தாக்கும். சொந்த நாட்டில் எவ்வளவு ஆடினாலும் உத்வேகம் குன்றாது. ஆனால் அயல்நாட்டு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தக்க வைப்பது சுலபம் அல்ல. நியுசிலாந்த் அணி சொந்த நாட்டில் ஆடினாலும் கூட தொடர்ந்து புதிய வீரர்களை ஒவ்வொரு வடிவத்துக்கும் கொண்டு வருகிறது. புதிய வீரர்கள் உடனே சோபிக்காவிட்டாலும் ஆர்வம் குன்றாமல் ஆடுகிறார்கள். இதில் இருந்து இந்திய வாரியம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

 அடுத்த தொடர்களில் வடிவத்துக்கு ஏற்ப மாறுபட்ட அணித்தலைவர்களை நியமிப்பது, ஒவ்வொரு வடிவிற்கும் 6-8 வீரர்களையாவது புதிதாய் கொண்டு வருவதைப் பற்றி யோசிக்க வேண்டும். உலகின் தலைசிறந்த வீரரான பும்ரா கூட சரியான நீளத்தில் பந்தை வீச முடியாமல் திணறும் அளவுக்கு இரவு பகலாய் ஆட வைக்கிறோம், செக்கு மாடுகளைப் போல. கோலி ஏதோ தூக்கத்தில் ஆடுவதைப் போல தெரிகிறார். தொலைநோக்குடன் சிந்தித்து பொறுமையாக ஆடும் ஆற்றலை அவர் தற்காலிகமாக இழந்திருக்கிறார். ஒரே தங்க வாத்தை வைத்து 365 நாட்களும் ஆட முடியாது. அதற்குத் தேவையான நேரமும் இரையும் கொடுத்தால் தான் முட்டையிடும். இப்போது விழித்துக் கொள்ளாவிடில் அடுத்து ஆஸ்திரேலிய பயணத்திலும் முழுக்க பழனிமொட்டை தான்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...