Skip to main content

தில்லிக்கு வந்த ஹிட்லரின் வழித்தோன்றல்கள்!


தில்லியில் நிகழ்த்தப்படும் வன்முறை சம்பவங்கள் கண்ணீரை வரவழைப்பவை. பாஜகவின் குண்டர்கள் எளிய மக்கள் மீது நடத்தும் இத்தாக்குதல்களின் நோக்கம் CAA, NRCக்கு எதிரான போராட்ட களங்களை உடனடியாய் கலைப்பது, போராளிகளிடத்து அச்சத்தை விதைப்பது என்பது தெளிவானது. எனக்கு இது ஈழத்தில் எண்பதுகளில் சிங்களப்பெரும்பான்மை அரசு தமிழக குடியிருப்புகள் மீது அவிழ்த்து விட்ட கலவரங்களை, யாழ்ப்பாண நூலக எரிப்பை நினைவுபடுத்துகிறது. குஜராத் படுகொலைகளையும் தாம். வன்முறை மூலம் போராட்டங்களை ஒடுக்கலாம் எனும் யுத்தி வெற்றி பெறாது என வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. தில்லி தேர்தல் முடிவும் பாஜகவுக்கு பளாரென ஒரு அறை கொடுத்தது. இருந்தும் ஏன் பாஜக அதே ஆயுதத்தை தூக்குகிறது என எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை! இப்போது மெல்ல மெல்ல உண்மை புலப்படுகிறது!


அமித் ஷா அவசரத்தில், பதற்றத்தில் இருக்கிறார் என்பதை மட்டும் புரிந்து கொள்கிறேன். அவர் இந்த மாதம், இந்த தேதி இன்னின்ன விசயங்கள் இந்தியாவில் நிழக வேண்டும் என ஒரு செக் லிஸ்ட் வைத்திருப்பார். ஒவ்வொரு இலக்கு நிகழாமல் அல்லது தள்ளிப் போகும் போது அவர் பதற்றம் கொள்கிறார். குடியுரிமை மசோதா அவரது பட்டியலில் முன்னுரிமை உள்ள ஒன்று. அதை வைத்து தான் அடுத்த தேர்தலில் அவர் தன்னை ஒரு வலுவான பிரதமர் வேட்பாளராக, அடுத்த இரும்பு மனிதராக, அடுத்த வல்லபாய் படேலாக முன்னிறுத்த உத்தேசிக்கிறார். தொடர்ந்து இந்தியாவெங்கும் நிகழும் போராட்டங்களில் பொதுமக்கள் நேரடியாக பங்குபெறுவது, இப்போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தவில்லை என்பது பாஜகவை, அமித் ஷாவை மிகவும் தொந்தரவு பண்ணுகிறது.

 இப்போராட்டங்களை முழுக்க அழித்தொழிக்காமல் பாஜகவால் குடியுரிமை மசோதாவை வெற்றிகரமாக களமிறக்க முடியாது. அதைக் கொண்டு பிரம்மாண்டமான இனவெறிப் பிரச்சாரத்தை எடுத்து செல்லவும் அமித் ஷாவே நமது இந்துக்களின் சூப்பர் மேன் எனும் பதாகையை இந்தியா முழுக்க மேலெடுக்க முடியாது. ஜெ.என்.யுவில் காவல்துறையினரும் பாஜகவின் குண்டர்களும் ஒன்று சேர்ந்து மாணவர்களைத் தாக்கியது இதற்கான ஒரு முன்னோட்டம். காவல்துறையைக் கொண்டு பொதுமக்களைத் தாக்குவது மோசமான எதிர்வினையை பாஜக அரசுக்குத் தந்தது. தில்லி தேர்தல் முடிவுகள் எனும் செருப்படிக்குப் பிறகு இப்போது அமித் ஷா மற்றொரு வியூகத்தை வகுத்துள்ளார்:
 ஜல்லிக்கட்டு போராட்டங்களை, கூடங்குளம் போராட்டங்களை காவல்துறை கடுமையான வன்முறை மூலம் ஒடுக்கியதைப் போல இப்போது குண்டர்களைக் கொண்டு போராட்டக்காரர்களைக் கொன்று அச்சத்தை விதைக்கலாம் என நினைக்கிறார். இந்த குண்டர்களை நீங்கள் பாஜகவினர் என்று நேரடியாக அடையாளப்படுத்தவும் முடியாது, காவல்துறையினர் என குற்றம் சாட்டவும் முடியாது. இந்து-முஸ்லீம் கலவரம் என இத்தாக்குதல்களை அவர்களை சித்தரிப்பதும் எளிது. கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை இப்போதைக்கு 32 எட்டியுள்ளது என சில செய்திகள் தெரிவிக்கின்றன்.


ஜனநாயகத்தைக் கொல்வதே இந்த அரசின் நோக்கம். ஜனநாயகம் பலிகொடுக்கப்படுவதை ஒரு பெரும் ரத்தக்களறியாக ஊடகம் மூலம் சித்தரிப்பதை, அதன் மூலம் தன் ஆற்றலை நிரூபிப்பது இவர்களின் நோக்கம், மக்கள் பலியாவது அதன் விளைவு மட்டுமே என்றால் உங்களுக்கு விநோதமாகத் தெரியும். ஆனால் இவர்கள் வினோதமானவர்கள். இப்படித் தான் இருப்பார்கள்... இவர்கள் நாம் இதுவரைக் கண்ட வகையான அரசியல்வாதிகள் அல்ல. இவர்கள் ஹிட்லர், முசோலினியின் வழித்தோன்றல்கள்! இப்படித் தான் இருப்பார்கள் ...  

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...