உன் உதடுகளுக்காய், உன் குரலுக்காய், உன் கூந்தலுக்காய் இச்சையில் தவிக்கிறேன். மௌனமாய், பட்டினியில் காய்ந்து, வீதிகளில் பதுங்கித் திரிகிறேன். ரொட்டி என்னைத் தணிப்பதில்லை, விடியல் என்னை தடுப்பதில்லை, நாள் முழுக்க உன் நீரலை காலடிகளின் சப்தத்தை வேட்டையாடுகிறேன்.