Skip to main content

நீ சலனமற்றிருக்க வேண்டுகிறேன் - பாப்லோ நெருடா

Image result for pablo neruda

நீ சலனமற்றிருக்க வேண்டுகிறேன்: நீ இல்லவே இல்லை என்பது போல,
அதோடு வெகு தொலைவில் இருந்து நீ என்னை கேட்கிறாய்
அப்போது உன்னைத் தொடுவதில்லை என் குரல்.
ஏதோ உன் கண்கள் பறந்து போனது போல்
ஒரு முத்தம் உன் உதடுகளை உறைய வைத்தது போல்.


எல்லா பொருட்களுமே என் ஆன்மாவால் நிரம்பியவை என்பதால்
நீ அப்பொருட்களில் இருந்து கிளர்ந்து எழுகிறாய், என் ஆன்மாவால் தளும்பி.
நீ என் ஆன்மாவைப் போன்றவள், நீ ஒரு கனவின் பட்டாம்பூச்சி போன்றவள்,
அதோடு நீ துக்கம் எனும் சொல்லைப் போன்றவள்.
  
நீ சலனமற்றிருக்க வேண்டுகிறேன், அதோடு நீ வெகுதொலைவில் இருக்கிறாய்.
நீ அரற்றுவது போல் கேட்கிறது, புறாவைப் போல் முனகும் ஒரு பட்டாம்பூச்சியே.
அதோடு வெகுதொலைவில் இருந்தும் உனக்கு என்னைக் கேட்கிறது, இருந்தும் என் குரலோ உன்னை அடையவில்லை.
உன் மௌனத்தில் சலனமற்றிருக்க என்னை அனுமதித்திடு.

என் வார்த்தையின்மையால் உனது மௌனத்துடன் பேச அனுமதித்திடு
உன் மௌனம் அகல் ஒளியை போன்று பிரகாசமானது, ஒரு மோதிரத்தைப் போன்று எளிமையானது.
நிச்சலமாய் நட்சத்திர கூட்டம் சூழ நிற்கும் இரவைப் போன்றவள் நீ.
ஒரு நட்சத்திரத்தின் ஓசையின்மை உனது, தொலைவாய் ஒளிவுமறைவற்று.

நீ சலனமற்றிருக்க வேண்டுகிறேன்: நீ இல்லவே இல்லை என்பது போல,
தொலைவாய், துயரத்தில் தளும்பி, நீ மரணத்தை தழுவி விட்டது போல.
பிறகு, ஒரு சொல், ஒரு புன்னகை, அது போதும்
நான் மகிழ்வேன், அது உண்மையல்ல என மகிழ்வேன்.


(தமிழில் ஆர். அபிலாஷ்)

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...