Skip to main content

நீ என்னை மறப்பாய் எனில் - பாப்லோ நெருடா

 Image result for neruda
நீ அறிந்திருக்க வேண்டும்
ஒன்றை.

உனக்குத் தான் தெரியுமே:
படிக நிலவை நான் பார்த்தேன் எனில்,
என் ஜன்னல் வழி, சன்னமாய் நகரும் இலையுதிர் காலத்தின்
சிவப்புக் கிளையை நான் பார்த்தேன் எனில்
தீயின் அருகாமையில் தொடவே முடியாத
அந்த சாம்பலை தீண்டினேன் எனில்
அல்லது மரக்கட்டையின் நெளிசருமத்தை தொட்டேன் எனில்,
எல்லாமே என்னை அள்ளிச் சென்று சேர்க்கும் உன்னிடம்,
ஏதோ இங்குள்ள ஒவ்வொன்றுமே,
வாசனைகள், ஒளி, உலோகங்கள்,
எனக்காய் காத்திருக்கும் உனது சிறிய தீவுகளுக்கு
செல்லும் சின்னஞ்சிறு படகுகள் என்பது போல்.


ஆனால் இப்போது
கொஞ்ச கொஞ்சமாய் நீ என்னை காதலிப்பதை நிறுத்துவாய் எனில்
நானும் நிறுத்துவேன் உன்னை காதலிப்பதை கொஞ்ச கொஞ்சமாய்.

திடீரென
 நீ என்னை மறந்தாய் எனில்
என்னைத் தேடாதே,
ஏனெனில் நான் உன்னை ஏற்கனவே மறந்து போயிருப்பேன்.

நீ இதைப் பற்றி சாவகாசமாய் யோசித்தாய் எனில்
என் வாழ்வின் ஊடாய் கடந்து போகும் புயலின் போர்ப் பதாகைகளை கருத்திற் கொண்டாய் எனில்
அதோடு நீ என்னை என் வேர்கள் ஓடும்
இதயத்தின் கரையில் கைவிட
முடிவெடுத்தால் எனில்,
நினைவு கொள்
அந்த நாளில்
அந்த மணிப்பொழுதில்,
நான் என் கைகளை உயர்த்துவேன்
அப்போது என் வேர்கள் நீந்தித் தேடிச் செல்லும்
ஒரு புது நிலத்தை.

ஆனால்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மணிநேரமும்,
நீ எனக்கே ஆனவள்
என நீங்காத இனிமையுடன் உணர்ந்தாய் எனில்,
ஒவ்வொரு நாளும்
ஒரு மலர் என்னைத் தேடி
உன் உதட்டை நோக்கி ஏறும் எனில்,
என் காதலே, எனக்கே எனக்கானவளே,
எனக்குள் அந்த நெருப்பு மீண்டும் கிளர்ந்தெழும்,
எனக்குள் எதுவுமோ அணையவில்லை அல்லது மறக்கப்படவில்லை,
என் பிரியம் உன் நேசத்தில் முலைகுடிக்கிறதடி, அன்பே,
நீ வாழும் வரை அது உன் கரங்களில் தவழும்
என்னை தனித்து விடாமல்.

(தமிழில் ஆர். அபிலாஷ்)








                    

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...