Skip to main content

உன் உடலெனும் வரைபட நூலில் - பாப்லோ நெருடா

Image result for pablo neruda

உன் உடலெனும் வரைபட நூலில் அடையாளமிடுகிறேன்
நெருப்பாலான பெருக்கல் குறிகளால்.
என் உதடுகள் அதன் குறுக்கே செல்லும்: பதுங்க முயலும் ஒரு சிலந்தியாய்.
உன்னில், உனக்குப் பின்னால், தயக்கமாய், தாகத்தில் தவித்து,

மாலையின் கரைப் பகுதியில் உனக்கு சொல்ல வேண்டிய கதைகள்,
என் சோகமான மிருதுவான பொம்மையே, உன் வலியை இதமாக்கும் கதைகள்.
ஒரு அன்னம், ஒரு மரம், தொலைவில் மகிழ்ச்சியாய் ஏதோ ஒன்று.
திராட்சைகள் கனிந்த பருவம், கனிவான விளைச்சல் மிக்க பருவம்.


உன்னை காதலித்தேன் ஒரு துறைமுகத்தில் வாழ்ந்த நான்.
கனவும் பின்னர் மௌனமும் ஊடாடிக் கலைக்கும் என் தனிமை.
கடலுக்கும் துயரத்துக்கும் இடையில் தேக்கி வைக்கப்பட்டு.
அரவமற்று, மனம் தடுமாறி, இரு சலனமற்ற வேனிஸ் நகர படகுகளின் நடுவே.

உதடுகளுக்கும் குரலுக்கும் இடையில் எதுவோ மாய்ந்து போகிறது.
பறவையின் இறகுகள் கொண்ட எதோ ஒன்று, தவிப்பினாலும் தன்மறதியினாலும் ஆன ஏதோ ஒன்று.
வலைக்குள் நீர் நிற்காதது போல.
என் விளையாட்டு பொம்மையே, ஒரு சில துளிகளே மிச்சமாய் நடுங்கி நிற்கின்றன.
இருந்தும், இந்த தலைமறைவான சொற்களில் ஏதோ ஒன்று பாடுகிறது.
ஏதோ ஒன்று பாடுகிறது, பசியால் தவிக்கும் எனது வாய்க்குள் எதோ ஒன்று நுழைந்து ஏறுகிறது.
ஓ ஆனந்தத்தின் அத்தனைச் சொற்களாலும் உன்னை ஆராதிக்க முடிந்தால்.
மனம் பிறந்தவனிடம் கையில் அகப்பட்ட தேவாலய மணிக்கூண்டு போல்,
பாடவும், எரியவும், தப்பித்து ஓடவும் முடிந்தால்.
என் துயரமான மென்மையே, சட்டென என்ன ஆட்கொள்கிறது உன்னை?
மிக அற்புதமான, ஆக குளிரான ஒரு மலைச்சிகரத்தை நான் அடையும் போது
என் இதயம் ஒரு இரவு மலரைப் போல மூடிக் கொள்ளுமடி!


(தமிழில் ஆர். அபிலாஷ்)

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...