தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டுள்ளதை ஒட்டி அவரை “ஜன்னல்” இதழுக்காய் ஒரு சிறுபேட்டி எடுத்துத் தர முடியுமா எனக் கேட்டார்கள். ஜென், தமிழ் கவிதை மரபு, அவரது கவிதைகளின் மைய குறியீடான படிக்கட்டு பற்றி நான்கு கேள்விகள் கேட்டேன். மிக அழகாய் பதில்கள் அளித்தார். என் கேள்விகள் அவருக்கு பிடித்திருந்தன. ”நேரில வாங்க, இன்னும் ஜாலியா நிறைய பேசலாம்” என்றார். ”நிச்சயம் கோவில்பட்டிக்கு வரேன்” என்றேன். இன்றைய தினம் தேவதச்சனை படிப்பதிலும் அவரைப் பற்றி யோசிப்பதிலும் அவருடன் உரையாடுவதிலும் உற்சாகமாய் போனது. பேட்டிக்கு நான் அளித்த தலைப்பு “தேவதச்சன் – படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும் மனிதர்”.