Skip to main content

தேவதச்சன் விருதும் பேட்டியும்

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டுள்ளதை ஒட்டி அவரை “ஜன்னல்” இதழுக்காய் ஒரு சிறுபேட்டி எடுத்துத் தர முடியுமா எனக் கேட்டார்கள். ஜென், தமிழ் கவிதை மரபு, அவரது கவிதைகளின் மைய குறியீடான படிக்கட்டு பற்றி நான்கு கேள்விகள் கேட்டேன். மிக அழகாய் பதில்கள் அளித்தார். என் கேள்விகள் அவருக்கு பிடித்திருந்தன. ”நேரில வாங்க, இன்னும் ஜாலியா நிறைய பேசலாம்” என்றார். ”நிச்சயம் கோவில்பட்டிக்கு வரேன்” என்றேன்.
இன்றைய தினம் தேவதச்சனை படிப்பதிலும் அவரைப் பற்றி யோசிப்பதிலும் அவருடன் உரையாடுவதிலும் உற்சாகமாய் போனது. பேட்டிக்கு நான் அளித்த தலைப்பு “தேவதச்சன் – படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும் மனிதர்”.

தேவதச்சனுக்கு “விஷ்ணுபுரம் விருது” அளிக்கப்படுவது அவ்விருதை நிச்சயம் துலங்க செய்கிறது. தனிப்பட்ட முறையில் ஜெயமோகனுக்கு தேவதச்சன் கவிதை மீது அதிருப்தி உண்டு என அறிவேன். தேவதச்சன் கவிதைகள் அறிவார்த்தமான தத்துவ பதிவுகள் அவை, கவிதைகள் அல்ல என பத்து வருடங்களுக்கு முன்பு அவர் என்னிடம் பற்றி கூறியதாய் நினைவு. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் தேவதச்சன் தன்னுடன் எழுத ஆரம்பித்தவர்களைக் கடந்து எங்கோ சென்று விட்டார். அவர் கவிதைகள் இன்றும் புதுமையும் தனித்துவமும் மாறாமல் உள்ளன. புதிதாய் வாசிக்க வருகிற பலரும் பேஸ்புக்கிலும் பிளாகுகளிலும் அவர் கவிதைகளை பகிர்வதையும் அது குறித்து எழுதுவதையும் பார்க்கிறேன். இத்தனைக்கும் தேவதச்சன் இருட்டில் சில்வண்டு போல் வாழ்பவர். பத்திரிகைகளில் பேட்டி அளிப்பது, கட்டுரை எழுதுபவது, டிவியில் தோன்றுவது, இலக்கிய நிகழ்ச்சிகளில் தாளிப்பது ஆகிய தன் புகழ் பரப்பும் காரியங்களை செய்ய மாட்டார். ஆனால் தமிழின் இளம் எழுத்தாளர்களுடன் மறைவில் இருக்கும் நக்சல் தலைவரைப் போன்ற உறவில் இருப்பார். யாரிடம் பேசினாலும் “தேவதச்சன் இது போல சொன்னார்…” என அவரை மேற்கோள் காட்டுவார்கள். மிக கொஞ்சமாய் அவர் எழுதி பிரசுரிக்கும் கவிதைகள் பெரிய கவனத்தை பெறுகின்றன. ஜெயமோகன் மிகவும் கூர்மையானவர். அவர் இதையெல்லாம் கவனிக்கிறார். தேவதச்சன் பற்றின தன் பார்வையை மறுபசீலனை செய்திருக்கிறார். இது பாராட்டத்தக்கது. இந்த விருதின் பெயரை மாற்றி, ஒரு விருதுக்குழுவையும் உருவாக்கினால் அதற்கு இன்னும் நம்பகத்தன்மை கூடும் என்றாலும் இப்போதைக்கு இது போதும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...