Skip to main content

ஹீரோவும் ஜீரோவும்



நிர்பயாவை கொன்றவர்களில் ஒருவரான பதினெட்டு வயதுக்கு கீழான குற்றவாளி விடுதலை செய்யப்படுவதை ஒட்டி தில்லியின் ஜந்தாமந்தரில் கண்டக்கூட்டம் நடக்கிறது. டி.வியில் இது ஒளிபரப்பாகிறது. ஷபானா ஆஸ்மி ஆவேசமாய் பேசி முடித்த பின் அவரது கணவர் ஜாவித் அக்தர் வந்து நிர்பயாவுக்கு நடந்த அநீதி பற்றியும் பெண்களின் நிலை பற்றியும் ஒரு கவிதை வாசிக்கிறார். பேட்டி எடுக்கும் சர்தீப் நெகிழ்ந்து போய் பாராட்டுகிறார். அடுத்து அவர் ஒரு கேள்வி கேட்கிறார் “நீங்கள் ஒரு ராஜ்யசபா எம்.பி. இளங்குற்றவாளிகளுக்கான சட்டத்தை மாற்றுவதற்கான மசோதாவை ராஜ்யசபாவில் உங்களைப் போன்றவர்கள் முடக்கி வைத்திருக்கிறார்கள். அது நிலுவையில் வந்திருந்தால் இது போன்ற குற்றவாளிகள் இப்போது சுளுவில் வெளிவே வர முடியாதில்லை தானே?”.

 ஜாவித் அக்தரின் முகம் சோர்வடைகிறது. இமைகள் தளர்கின்றன. கசப்பாய் உதட்டை சுளிக்கிறார். “நாங்கள் யார் மீதும் வேற்றுமை பாராட்டி செயல்படுவதில்லை” என்று கூறி விட்டு அங்கிருந்து விலகுகிறார். இன்றைய மீடியா யுகத்தில் ஒருவர் ஹீரோ ஆக்கப்பட்டு கொண்டாடப்பட பெரிய காரணங்கள் தேவையில்லை. ஆனால் மறுநொடியே சிலுவையிலும் அறையப்படுவார்கள். இன்று நம்மால் வாதப்பிரதிவாதங்களை மடித்தும் திரித்தும் யாரையும் குற்றவாளி ஆக்க முடியும். எதுவும் நம் கையில் இல்லை. ஜாவித் அக்தர் அதை அந்த நொடியில் உணர்ந்திருப்பார். அவருக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம்? அவரை போன்ற கௌரவ உறுப்பினர்களா ராஜ்யசபாவில் ஒரு மசோதாவை முடக்குகிறார்கள்? இதை நாம் சச்சினை நோக்கியும் கேட்கலாமே: “நீங்க நூறு சதம் அடித்தீர்கள். பாராட்டுக்கள். ஆனால் நிர்பயாவின் குற்றவாளியை தப்பிக்க விடாமல் தடுக்க உங்களைப் போன்ற எம்.பி என்ன தான் செய்தீர்கள்?”

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...