Skip to main content

Posts

Showing posts from January, 2020

அந்நியர் மத்தியில் குழந்தைகள்

இன்று என் வேலையிடத்தில் நான் காண நேர்ந்த இரு குழந்தைகள் இடம் குறித்த என் பார்வையை முழுக்க மாற்றினார்கள் . முதல் குழந்தை அவனது அப்பாவுடன் கையைப் பற்றி வந்தான் . நான்கு வயதிருக்கும் . பள்ளி சீருடை அணிந்திருந்தான் . அவனுடைய அப்பா ( அவர் அங்கு ஒரு ஊழியர் ) சைன் இன்   செய்ய மேலே மாடிக்கு செல்ல்லும் முன் சில நிமிடங்கள் குழந்தையை கீழே உணவருந்தும் இடத்தில் ஒரு மேஜை அருகே விட்டு செல்கிறார் . நான் பின்னால் ஒரு மேஜை அருகே என் சக்கர நாற்காலியை “ பார்க் ” செய்து ஒரு தேநீரை ருசித்தபடி எழுதிக் கொண்டிருக்கிறேன் . கடைக்கண்ணால் குழந்தை படிக்கட்டையும் தன்னைக் கடந்து செல்லும் அந்நியர்களையும் கவனித்துக் கொண்டு நிற்கிறான் . நிமிடத்துக்கு நிமிடம் பதற்றம் ஜுரம் போல ஏறுவதை அவன் முகத்தில் பார்க்கிறேன் . நான் எழுதுவதைத் தொடர்கிறேன் . அப்போது ஒருவர் வந்து “ யாருப்பா நீ ? ஏன் தனியா நிற்கிறே ? என்னாச்சு ?” என அக்கறையாய் விசாரிக்க அவன் பதிலளிக்காமல் முழிக்கிறான் . பயந்து அழுகிறான் . இப்போது அவர் தன் பையை கீழே ...

அந்த மூன்றாவது ஆள்

1) நேரம் எப்படிப் போகுதுன்னே தெரியல என ஒரு நண்பர் ஆயாசப்பட்டார் . அது நல்லது என எனக்குப் பட்டது . ஏன் ? அது தான் நேரத்தின் இயல்பே . நேரம் மிக மிக எலாஸ்டிக்கானது , இழுவையானது , ஒரு ரப்பர் பேண்டை இழுப்பதைப் போல அதை இழுத்து விட முடியும் . இது எங்கு ஆரம்பித்து எங்கு போகிறது எனும் குழப்பம் தான் “ நேரம் எப்படிப் போகுதுன்னே தெரியலே ” என நம்மை யோசிக்க வைக்கிறது . சிலநேரம் நேரம் இப்படிச் செல்வது விடுதலையை அளிக்கும் ; நம்மை மறந்து எதிலாவது திகைத்துப் போய் இருப்போம் . உதாரணமாய் ஒரு அழகிய பெண் பேசும் போது அவளது வாயைப் பார்த்துக் கொண்டிருந்தால் “ நேரம் போவதே தெரியாது ”. பார்க்கிற உணர்வு நமக்கே வந்து விட்டால் பிரக்ஞைபூர்வமாகி விடுவோம் ; பதற்றமும் அலுப்பும் ஏற்படும் .

The Woman Next Door

The Woman Next Door (1981) பிரஞ்சு புதிய அலை இயக்குநர்களில் தலையானவரான டுரோபோவின் படைப்பு . அவரது 400 Blows பிரசித்தமானது . Mobi ஆப்பில் அவரது பல படங்களை தொடர்ச்சியாக காண்பித்து வருகிறார்கள் . கணிசமானவை குறும்புத்தனமான , அதேவேளை தீவிரமான காதல் கதைகள் . இந்த படங்கள் வழியாக அவர் மனித வாழ்வில் சுதந்திரம் என்றால் என்ன எனும் கேள்வியை பல கோணங்களில் கேட்கிறார் என நினைக்கிறேன் - எளிய மனித உறவுகள் , காதல் உறவுகள் , தாம்பத்ய உறவுகள் என ஒவ்வொன்றிலும் மனிதன் நாடுவது பிறழ்வுகளை , பிறழ்வுகள் வழி சுதந்திரத்தை , இதே   அந்த பிறழ்வே பின்னர் விரிசலாகி விரிசல் அஸ்திராவரத்தை அசைக்கும் நடுக்கமாகி அவனை அழிக்கிறது என்பதை .

ஐந்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எனும் பைத்தியக்காரத்தனம் (3)

நான் சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு கல்லூரிக்கு பேச சென்றிருந்தேன் . அப்போது ஒரு ஆசிரியர் என்னிடம் அங்குள்ள அரசுப் பள்ளிகளின் அவல நிலை பற்றி புகார் சொல்லிக் கொண்டே வந்தார் . அவரது பிரதானம் குற்றச்சாட்டு கராறான மதிப்பீடுகள் இன்றி மாணவர்களை ஆரம்ப கல்வி முதற்கொண்டே நாம் தேர்வாக்கி அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுப்பி வருகிறோம் . இந்த அரசுப்பள்ளி மாணவர்களை தனியார் மாணவர்களுடன் ஒப்பிட்டால் தரம் ரொம்ப தரைமட்டமாக இருக்கிறது என்பது . தயவுதாட்சண்னியம் பார்க்காமல் அரசுப்பள்ளி மாணவர்களை ஆரம்பக் கல்வி தொட்டே மதிப்பிட்டு தோற்கடித்தால் தான் ஆசிரியர்களும் அவர்களுக்கு அக்கறையாக பாடம் கற்பிப்பார்கள் என்றார் அவர் மேலும் . நான் அவரிடம் “ கல்வி என்றால் என்ன ?” எனக் கேட்டேன் . சரளமாக ஆங்கிலம் பேசுவதோ , மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் வாங்குவது மட்டும் கல்வி அல்ல . நேர்முகத்தில் பேசி வேலை வாங்குவதற்கான பயிற்சி மட்டுமே கல்வி அல்ல . கல்வி என்பது ஒருவரது ஆளுமை மெல்ல மெல்ல விகசிப்பதற்கு துணை செய்யும் ஒரு ...

ஐந்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எனும் பைத்தியக்காரத்தனம் (2)

சொன்னால் நம்ப மாட்டீர்கள் - சில தனியார் கல்வி நிலையங்களில் முனைவர் பட்ட ஆய்வுக்குக் கூட தேர்வு கொண்டு வந்து விட்டார்கள் ( தொடர் உள்மதிப்பீடு எனும் பெயரில் ). எங்கும் எதற்கும் தேர்வு தான் . சரி இந்த கல்வியாளர்களுக்கு ஏன் இந்த அபத்தம் உறைக்க மாட்டேன் என்றால் அதற்கும் ஒரு காரணம் உண்டு . தேர்வுகளை நடத்தாவிட்டால் மாணவர்கள் இப்போதெல்லாம் எந்த படிப்பையும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை என அவர்கள் சொல்கிறார்கள் . அதாவது மாணவர்களே தேர்வைத் தான் விரும்புகிறார்கள் என்பது அவர்களின் உட்கிடக்கை . ஏன் அப்படி ?

ஐந்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எனும் பைத்தியக்காரத்தனம் (1)

ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் எனும் தமிழக அரசின் முடிவு ஏற்படுத்தி இருக்கிற நெருக்கடியை அறிவோம் . வரும் காலங்களில் ஒன்றாம் வகுப்புக்கே இவர்கள் பொதுத்தேர்வு நடத்தினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை . இது அரசின் அறிவீனத்தின் விளைவு என பார்ப்பது மேம்போக்கானது என நினைக்கிறேன் ; ஏனென்றால் நாம் வந்து அடைந்துள்ள இந்த நிலைக்கு நாமும் கல்வி நவமுதலாளித்துவ சந்தையில் தொடர்ந்து பண்டமாக்கப்பட்டு வருவதற்கும் , எங்கும் வியாபித்துள்ள நுகர்வு மனநிலைக்கும் ஒரு தொடர்பு உள்ளது . நாமே நம் வாலில் நெருப்பு வைத்து விட்டிருக்கிறோம் ; அது இப்போது நம் தலையை எட்டி உள்ளது . வரும் நாட்களில் நம்மை முழுக்க அது முழுங்கி விடும் . 

தலித்துகள் தம் வாழ்க்கை கண்ணீரும் கம்பலையுமாக காட்டப்படுவதை விரும்பவில்லையா?

கடந்த இரு தினங்களாக நானும் ஜோஷ்வாவும் வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் dissent கருத்தரங்குக்கான தலித் சினிமா அரங்கு பற்றி விவாதிப்பதற்காக அடிக்கடி சந்தித்துக்கொண்டோம் . நிறைய பேசினோம் . தலித் சினிமா மற்றும் அரசியல் குறித்து ஸ்டாலின் ராஜாங்கத்துடன் உரையாடினோம் . எண்பது , தொண்ணூறுகளில் எப்படி கீழ்த்தட்டை சேர்ந்த நாயகன் மேல்தட்டை சேர்ந்த பெண்ணை காதலித்து போராடி மணப்பது அல்லது பண்ணையாரை எதிர்த்து ஏழை நாயகன் வெல்வது ஆகிய ஒற்றைவரிக் கதைகள் சினிமாவில் பிரசித்தமாக இருந்தன , இது மறைமுகமாக சாதிப் பிளவை நாம் பேச முயன்றதன் விளைவு தான் என ஸ்டாலின் சொன்னது என் மனத்தில் தங்கி இருந்தது ; நேற்று அண்ணாமலை படம் பார்க்கும் போது நிலவுடைமை அடிப்படையிலான படிநிலை எப்படி அதில் வந்திருக்கிறது என யோசித்தேன் . ஏன் அதில் ரஜினியின் சாதி குறித்த எந்த குறிப்பும் இல்லை ? அதில் ராதாதவி ரஜினி மீது கொள்ளும் துவேசம் ஏழை மீது பணக்காரனுக்கு உள்ள ஒவ்வாமை மட்டும் தானா என்றெல்லாம் கேள்விகள் எனக்குள் எழுந்தன .