Skip to main content

ஐந்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எனும் பைத்தியக்காரத்தனம் (2)



சொன்னால் நம்ப மாட்டீர்கள் - சில தனியார் கல்வி நிலையங்களில் முனைவர் பட்ட ஆய்வுக்குக் கூட தேர்வு கொண்டு வந்து விட்டார்கள் (தொடர் உள்மதிப்பீடு எனும் பெயரில்). எங்கும் எதற்கும் தேர்வு தான். சரி இந்த கல்வியாளர்களுக்கு ஏன் இந்த அபத்தம் உறைக்க மாட்டேன் என்றால் அதற்கும் ஒரு காரணம் உண்டு. தேர்வுகளை நடத்தாவிட்டால் மாணவர்கள் இப்போதெல்லாம் எந்த படிப்பையும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை என அவர்கள் சொல்கிறார்கள். அதாவது மாணவர்களே தேர்வைத் தான் விரும்புகிறார்கள் என்பது அவர்களின் உட்கிடக்கை. ஏன் அப்படி?

தேர்வை உயர்கல்வி மாணவர்கள் ஒரே சமயம் வெறுக்கவும் ஆதரிக்கவும் செய்கிறார்கள் - இன்று உயர்கல்விக்கு நிறைய பணம் செலவாகிறது; கடுமையாக உழைக்கவும் போட்டியிடவும் வேண்டி உள்ளது. அந்த நிலையில் மதிப்பெண் என்பது அவர்களுக்கு ஒரு தூலமான பிரதிபலனாக, “சம்பாத்தியமாகஇருக்கிறது. தனியார் கல்வி நிலையம் ஒன்றின் ஒரு வகுப்பில் 70 மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால் அத்தனை பேரும் தமக்கு முதல் மதிப்பெண் வேண்டும் என கோருகிறார்கள். அது சாத்தியமில்லை எனத் தெரிந்தாலும் அவர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால் மதிப்பெண்ணை அவர்கள் வாங்கும் பண்டமாகப் பார்க்கிறார்கள்; தாம் படிக்கும் பட்டமும் அவர்களுக்கு ஒரு பண்டம் தான். எப்படி ஒரு ஐபோனை நிறைய பணம் கொடுத்து வாங்கினால் அது தரமாக வேலை செய்ய வேண்டும் என நினைக்கிறார்களோ அப்படியே ஒரு படிப்பில் சேர்ந்ததும் தாமும் தரமானவர்களாக மாற வேண்டும், அது தானாகவே நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். சரி அது கூட பரவாவில்லை. இந்த கல்வி எனும் பொருளை வாங்கும் போது அரூபமாக அன்றி தூலமாக அவர்களுக்கு ஒரு பயன்மதிப்பு தேவைப்படுகிறது - இது தான் இன்று மதிப்பெண் ஆகிறது. ஆறுமாதத்துக்கு ஒருமுறை தேர்வு என்பது இன்று நீண்ட காலம். அதனால் இன்று மாதாமாதம் தேர்வு என்பது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பேஸ்புக்கில் அனுதினமும் அவர்கள் பெறும் லைக்குகள், ஷேர்களைப் போல இருக்கிறது

இந்த கல்வி சந்தைப்படுத்தல் முதலில் தனியார் பள்ளிகளிலே பிரசித்தமானது. அங்கு தான் அடிக்கடி தேர்வுகள் நடத்துவது முதலில் பரிசோதனை செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் பள்ளியின் விளம்பரம் பார்த்தேன் - அவர்கள் ஒரு பரீட்சார்த்தமான கல்விமுறையை வைத்திருக்கிறார்களாம்; தினமும் தேர்வு, தினமும் மதிப்பீடு, அது முடிந்ததும் அடுத்த நாள் தேர்வுக்க்கான தயாரிப்பு. இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கு ஒரு விதமான தினசரி அங்கீகாரத்தை, சுய-மதிப்பீட்டை அளிக்கிறது என்பதால் இதில் ஒரு மறைமுக கிளுகிளுப்பு உள்ளது. தனியார் பள்ளிக் கல்வியில் ஆரம்பித்த வியாதியானது முதலில் உயர்கல்வியை பாதித்து இப்போது அரசுப்பள்ளிகளுக்கும் பரவியுள்ளது என நினைக்கிறேன்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...