Skip to main content

அந்த மூன்றாவது ஆள்


1) நேரம் எப்படிப் போகுதுன்னே தெரியல என ஒரு நண்பர் ஆயாசப்பட்டார். அது நல்லது என எனக்குப் பட்டது. ஏன்? அது தான் நேரத்தின் இயல்பே. நேரம் மிக மிக எலாஸ்டிக்கானது, இழுவையானது, ஒரு ரப்பர் பேண்டை இழுப்பதைப் போல அதை இழுத்து விட முடியும். இது எங்கு ஆரம்பித்து எங்கு போகிறது எனும் குழப்பம் தான்நேரம் எப்படிப் போகுதுன்னே தெரியலேஎன நம்மை யோசிக்க வைக்கிறது. சிலநேரம் நேரம் இப்படிச் செல்வது விடுதலையை அளிக்கும்; நம்மை மறந்து எதிலாவது திகைத்துப் போய் இருப்போம். உதாரணமாய் ஒரு அழகிய பெண் பேசும் போது அவளது வாயைப் பார்த்துக் கொண்டிருந்தால்நேரம் போவதே தெரியாது”. பார்க்கிற உணர்வு நமக்கே வந்து விட்டால் பிரக்ஞைபூர்வமாகி விடுவோம்; பதற்றமும் அலுப்பும் ஏற்படும்.
ஜெ.கிருஷ்ணமூர்த்தி மற்றொரு விவாதத்தில் சொல்லுகையில் நாமே நம் வாயைப் பார்க்கிறோம் என்கிறார். அதுவும் பிறர் வாயைப் பார்க்கையில், பார்க்கிற உணர்வு ஏற்படுகையில். அப்போது அங்கு மூன்று பேர் இருக்கிறார்கள் - அழகிய பெண், அவள் வாயைப் பார்க்கும் நீங்கள், உங்களையும் அவளது வாயையும் ஒருசமயம் பார்க்கும் மற்றொரு நீங்கள். அந்த மற்றொரு ஆள் வந்ததும் ரப்பர் பேண்ட் அறுந்து சுரீரென கன்னத்தில் வந்து அடிக்கும்.

2) நேரம் எலாஸ்டிக்காக இருக்கும் போது அழகானது - அதை ஒரு சமயம் ஒன்றை நோக்கி மட்டுமே இழுப்பது நல்லது; நான் இன்று நாவல் எழுதும் நோக்கம் கொண்டிருந்தால் காலை முதல் கிடைக்கிற அவகாசத்தில் எல்லாம் அதை மட்டுமே செய்வேன் - காப்பி குடிக்கும் போது, டிபன் சாப்பிடும் போது, எங்காவது காத்திருக்கும் போது கிடைக்கிற பத்து பத்து நிமிடங்களில் எல்லாம்; அரைமணி, ஒரு மணி இடைவெளி நேரம் வகுப்புகளுக்கு இடையில் கிடைத்தாலும் எழுதுவேன். முதலில் பத்து நிமிடங்கள் நான் நேரத்தை ஜவ்வாக இழுத்துப் பழக்கி இருப்பதால் இந்த அரைமணி, ஒருமணி இழுப்புக்கும் அது நன்றாகவே ஒத்து வரும். அது மட்டுமல்ல அந்த இழுப்பே சுகமாக இருக்கும் (ஒரே வாயைப் பார்ப்பதனால்). ஆனால் பல்வேறு திசைகளில் இழுத்தால் அது எரிச்சலையே தரும். பத்து நிமிடங்கள் பேஸ்புக், பத்து நிமிடங்கள் புத்தகம் படிக்க, இன்னும் பத்து நிமிடங்கள் சில வரிகள் எழுதுவதற்கு, அடுத்த அரைமணி நேரம் மின்னஞ்சல் ஒன்றைப் புனைய, அதற்கு அடுத்த இருபது நிமிடங்கள் இடைவேளை நாவல் எழுத என முயன்று பார்த்தால் அது சுலபமாக, சரளமாக இருக்காது. இது என் அனுபவம்; இது எல்லாருக்கும் பொருந்தும் என சொல்ல மாட்டேன்.

 மாறுபட்ட விசயங்களை செய்யும் போது நான் மாறுபட்ட பல தலைப்பாகைகளை அணிகிறேன்; ஒருவேளை அங்கே அப்போது அந்த மூன்றாவது ஆள் - அந்த பார்க்கிறவனைபார்க்கிறவன்” - தோன்றி விடுகிறானாக இருக்கலாம். சிறிய நேரத் துண்டுகளை ஒரே இலக்கின் பொருட்டு செலவழிப்பதே எப்போதும் என் பரிந்துரை. அதன் மற்றொரு அனுகூலம் சுலபமாக நம்மால் ஒன்றிரண்டு மணிநேரங்களை ஒரு காரியத்துக்காக ஒரு மிக பிஸியான நாளில் கூட செலவழிக்க முடியும் என்பதும் அதனால் காத்திரமாக எதையோ செய்து முடிக்க இயலும் என்பதும்.  

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...