Skip to main content

Posts

Showing posts from November, 2023

ஆலம்

  ஜெயமோகனின் கடந்த ஒரு தசாப்த கதைகளில் எனக்குள்ள ஒரு சிறு உவப்பின்மை, உடன்பாடின்மை அல்லது ஒவ்வாமை அதில் வரும் நம்பகத்தன்மையற்ற மானுட அறவாதம். “அறம்” தொகுப்பிலுள்ள கதைகளைப் படிக்கையில் பரபரப்பாக உயிரோட்டமாக இருக்கும், ஆனால் ஒரு கட்டத்தில் அவை ஏதோ வெற்றுகிரகத்தில் நடப்பவை போலிருக்கும். “ஏழாம் உலகம்” இந்த வேற்றுகிரகத்தில் இருந்து கோபத்துடன் பூலோகத்துவாசிகளைப் பார்த்து புழுதி வாரித்தூற்றுவதைப் போலொரு நாவல். அதிலுள்ள அநீதிச் சித்தரிப்புகளில் ஒரு தேவையில்லாத மிகை உண்டு. ஆனால் நம் கண்முன்னால் அத்தகைய மனிதர்கள் மிக இயல்பாக வாழ்ந்து போவார்கள், அன்றாட வாழ்வில் உள்ளோரும் அவர்களை எந்த கூச்சமும் இன்றி கடந்துபோவார்கள். ஹேனா ஆரிண்ட் தன் கட்டுரை நூல் ஒன்றில் இதை “தீமையின் சகஜத்தன்மை” என்பார். அந்த சகஜத்தன்மையை அப்படியே எதிர்கொண்டு விவாதிப்பதே நம் புரையேறிய மனதை அறுத்து சீழை வெளியேற்றும், அதை மிகையாக்கி மற்றமையாக்கினால் அதில் இருந்து தப்பித்துவிடுவோம் என்பதே என் வருத்தம். நீதி, நியாயம், அறம் போன்ற சொல்லாடல்கள் நாம் கண்ணை இறுக மூடித் தப்பிப்பதற்கான ஒரு சுயமைதுனம் மட்டும் தான். மானுட செயல்பாடுகளில் த...

வாழ்த்துகள்

நான் சென்னையில் இருந்திருந்தால் இந்த எழுத்தாளர்கள் ஆவணப் பட விழாவுக்கு நிச்சயமாக சென்று மகிழ்ந்திருப்பேன். ஒரு இலக்கிய விட்டேந்தித்தனம் இப்போது வந்துவிட்டாலும் மகிழ்ந்திருப்பேன். எழுத்தாளர்களும் வாசகர்களும் ஒன்று கூட, உரையாட நல்ல வாய்ப்பு. திருவுருவாக்கத்திற்கும் தான் - இலக்கிய சூழல் நிலைக்க நம் முன்னோடிகளை திருவுருவாக்குவதே தீர்வு. சும்மா விமர்சித்து ஓயாமல் சண்டையிடுவதால் தான் இப்படி பிச்சையெடுக்கும் நிலையில் படைப்பாளிகள் இங்கிருக்கிறார்களோ? பிரான்ஸில் முன்பு நிலைமை இப்படி இருந்ததென சொல்வார்கள். ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்தில் மோதல், சாதல், காதல் எல்லாம் இராது. இந்திய ஆங்கில எழுத்தாளர்களும் அப்படித்தான் - சண்டை போடவே மாட்டார்கள். எப்போதும் ஐந்து நட்சத்திர விடுதியிலே குடியிருப்பதாலோ என்னவோ நாவலை வெளியிட்டு புரொமோஷனுக்கு "எட்ரா வண்டிய" எனக் கிளம்பும் வரை கைப்புள்ள இருக்கிற இடம் தெரியாது. தமிழில் துரதிஷ்டவசமாக நீண்ட காலமாக பிரெஞ்சு சூழல் இருக்கிறது. கொஞ்ச நாட்கள் மாறுவது, சுயவளர்ச்சியில் கவனம் செலுத்துவது நல்லது. நம் புத்தகங்கள் பரவலாக மக்களிடம் போக வேண்டும். ஆங்கிலத்தில் உள்ள ஜ...

இந்த ஆண்டு வெளிவரும் எனது நூல்

அஞ்சலிப் பாப்பா கிரிக்கெட்

எனக்கு ஆரம்பத்தில் தமிழ் கிரிக்கெட் வர்ணனை பிடிக்கவில்லை. ஆனால் போகப் போக அது கொண்டு வரும் கொண்டாட்ட மனநிலை, குதூகலம், விளையாட்டுத்தனம், கன்னாபின்னா கலாட்டா பிடித்தது. அதற்கு முக்கிய காரணம் ஆர். ஜெ பாலாஜி. அவருக்கு முன் தமிழ் வர்ணனை உண்மையிலேயே மரண மொக்கையாக இருந்தது. பெரிதாக அலசலோ விவாதமோ இராது, சரளமான தமிழின்றி கொச்சைத் தமிழில் அரட்டை அடிப்பார்கள். ஆர். ஜெ அதை கிரிக்கெட்டுக்கு சம்மந்தமில்லாத கலாய்ப்பு தமிழாக மாற்றினார். இதன் அனுகூலம் மிக அலுப்பான ஆட்டமோ, பரபரப்பான நெருக்கடியான ஆட்டமோ நம்மால் லகுவாக, மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. இது தமிழ் வர்ணனையில் மட்டுமே உள்ளது. ஆங்கில வர்ணனை இன்றும் துளி கூட நகைச்சுவையே இல்லாத தீவிரமான உரையாடலாகவே சற்று உலர்வாக இருக்கிறது. அதுவா இதுவா எனில் நான் இதுவே போதும் என்பேன். ஏனென்றால் ஆங்கில வர்ணனையில் அரசியலும் நாடகமும் அதிகமாகி விட்டது. அவ்வளவு உணர்ச்சி மேலிடல், லட்சியவாதம் தேவையில்லையே, இது ஒரு பொழுதுபோக்கு தானே, நீங்கள் காசுக்குத் தானே பேசுகிறீர்கள் என்று தோன்றுகிறது.  முன்பு ஆங்கில வர்ணனையில் ஒரு கல்வி புகட்டும் போக்கு இருந்தது (கவாஸ்கர், கிரெக...

நாவலைப் பதிப்பிக்கும் சவால்களும் தீர்வுகளும்

நீங்கள் ஒரு நாவலைப் பிரசுரிக்க முடிவெடுக்கும் முன்பு சந்தையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். இங்கு ஒரு வருடத்திற்கு எவ்வளவு நாவல்கள் வருகின்றன, எந்தெந்த பதிப்பகங்கள் அதிகமாக நாவல்களைப் பிரசுரிக்கிறார்கள், யார் இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்த, உற்சாகப்படுத்த தலைப்படுகிறார்கள், எந்த பதிப்பகத்தில் நாவல்களுக்கு அதிக கவனம் கிடைக்கிறது என்கிற தகவல்களை சேகரியுங்கள். இதற்கு நீங்கள் பேஸ்புக்கில் வரும் புத்தக விளம்பரங்களை கவனித்து, பதிப்பாளர்களை சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்தாலே போதும். கூடுதலாக, நீங்கள் புத்தகத் திருவிழாக்களுக்கு சென்று முக்கிய பதிப்பக ஸ்டால்களில் முன்வரிசையில் வைக்கப்பட்டுள்ள நாவல்களை கவனியுங்கள். அடுத்து நாவல்களின் பொதுவான பக்க அளவைப் பாருங்கள். சில பதிப்பகங்களில் அதிகமாக 200-250 பக்க நாவல்கள் வரும். சில பதிப்பகங்கள் 350 பக்கங்களுக்கு மேல் பிரசுப்பார்கள். மிக மிக அரிதாகவே 500, 600 பக்கங்களுக்கு மேல் நாவல்கள் வரும். இதை நான் எழுதும் போது தமிழில் 200 பக்க நாவலுக்கு 220-250 ரூ விலை வைக்கிறார்கள். 300 பக்கங்கள் எனில் 350 ரூபாய். நீங்கள் எந்த அளவுக்கான நாவலை எழுத வ...

ஜெயமோகனுக்கு

... "நாவல் எழுதும் கலை" நூலை நம் காலத்தின் மகத்தான நாவலாசிரியர் ஜெயமோகனுக்கு சமர்ப்பித்திருக்கிறேன்.  ஜெயமோகனின் இலக்கிய, பண்பாட்டு கருத்துக்களுடன் நான் உடன்படுவதில்லை. ஆனால் ஒரு கலைஞனாக அவரது அர்ப்பணிப்பு, உழைப்பு, திறமை நிகரற்றது.இந்நூலில் பல இடங்களில் அவரது நாவல்களை உதாரணமாக குறிப்பிட்டிருக்கிறேன். என் நாவல் வகுப்பிலும் மாணவர்கள் அவ்வப்போது அவரது எழுத்துக் கலைப் பற்றின கருத்துக்களை குறிப்பிட்டு கேள்வி எழுப்புவார்கள். அவர்களுக்கு அளித்த பதில்களையும் இந்நூலில் இணைத்துள்ளேன். அதனால் ஆசானே இந்நூலின் சமர்ப்பணத்திற்கு ஏற்றவர்.

அஞ்சலிப் பாப்பா கிரிக்கெட்

எனக்கு ஆரம்பத்தில் தமிழ் கிரிக்கெட் வர்ணனை பிடிக்கவில்லை . ஆனால் போகப் போக அது கொண்டு வரும் கொண்டாட்ட மனநிலை , குதூகலம் , விளையாட்டுத்தனம் , கன்னாபின்னா கலாட்டா பிடித்தது . அதற்கு முக்கிய காரணம் ஆர் . ஜெ பாலாஜி . அவருக்கு முன் தமிழ் வர்ணனை உண்மையிலேயே மரண மொக்கையாக இருந்தது . பெரிதாக அலசலோ விவாதமோ இராது , சரளமான தமிழின்றி கொச்சைத் தமிழில் அரட்டை அடிப்பார்கள் . ஆர் . ஜெ அதை கிரிக்கெட்டுக்கு சம்மந்தமில்லாத கலாய்ப்பு தமிழாக மாற்றினார் . இதன் அனுகூலம் மிக அலுப்பான ஆட்டமோ , பரபரப்பான நெருக்கடியான ஆட்டமோ நம்மால் லகுவாக , மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது . இது தமிழ் வர்ணனையில் மட்டுமே உள்ளது . ஆங்கில வர்ணனை இன்றும் துளி கூட நகைச்சுவையே இல்லாத தீவிரமான உரையாடலாகவே சற்று உலர்வாக இருக்கிறது . அதுவா இதுவா எனில் நான் இதுவே போதும் என்பேன் . ஏனென்றால் ஆங்கில வர்ணனையில் அரசியலும் நாடகமும் அதிகமாகி விட்டது . அவ்வளவு உணர்ச்சி மேலிடல் , லட்சியவாதம் தேவையில்லையே , இது ஒரு பொழுதுபோக்கு தானே , நீங்கள் காசுக்குத் தானே பேசுகிறீ...