Skip to main content

Posts

Showing posts from July, 2013

இளவரசனும் திவ்யாவும்: சில கேள்விகளும் விடைகளும்

கொல்லப்பட்ட அல்லது மரணத்தை நோக்கி துரத்தப்பட்ட இளவரன் மற்றும் திவ்யாவின் மன அமைப்புகளை நுணுகி அறிவதன் வழி காதல் / கலப்பு மணம் புரியப் போகும் ஆண்கள் சில முக்கிய பாடங்களை கற்க முடியும். 

பேஸ்புக் சண்டையும் வாழும் கலையும்

காலையில் ஒரு பஞ்சாயத்து . எங்க குடியிருப்பில் ஒரு நாய் . தெரு நாய் தான் . உள்ளேயே படுத்திருக்கும் . கொரியர் பையன் , கேஸ் சிலிண்டர் சப்ளையர் , வேலைக்காரர்கள் என யாரைப் பார்த்தாலும் சமீபமாய் துரத்த ஆரம்பித்துள்ளது . அந்த நாய்க்கு என் மனைவி சாப்பாடு போடுவதால் காலையிலேயே என்னிடம் தகராறுக்கு மொத்த குடியிருப்பு ஆட்களும் வந்து விட்டார்கள் . எனக்கு அப்போது பேஸ்புக்கில் விவாதித்த ( சண்டை போட்ட ) அனுபவம் வெகுவாக கை கொடுத்தது .

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?

கல்லூரியில் என் அலுவல் நிமித்தமாக ஒரு மேலதிகாரியை பார்க்க போயிருந்தேன் . ஒரு பெண் அம்மாவுடன் வந்து முதல் வருட கட்டணம் செலுத்த வசதி இல்லை என்று காலநீட்டிப்பு கேட்டுக் கொண்டிருந்தார் . வேறு எந்த கல்லூரியிலும் சீட் கிடைக்கவில்லை என்று வேறு வருந்தினார் . மேலதிகாரி காலநீட்டிப்பு செய்ய முடியாதென்றும் ஒரு வருடம் ஏதாவது சான்றிதழ் படிப்பு படித்து விட்டு அடுத்த வருடம் அரசு கட்டணத்தில் படிக்கலாம் என்றும் பரிந்துரைத்தார் . அடுத்து அவருக்கே மனம் தாங்காமல் இன்னொரு கல்லூரியில் தனக்கு பரிச்சயமுள்ள ஒரு பேராசிரியரை அழைத்து அங்கு ஆங்கில இலக்கியத்துறையில் ஒரு இடத்தை அப்பெண்ணுக்கு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார் . அப்பெண்ணுக்கு மருத்துவம் படிக்க ஆசை என்று கொஞ்சம் ஏமாற்றமாக போனார் . அவர் போய் கொஞ்ச நேரமானதும் இவர் பின்னாலே ஓடிப் போய் இத்துறையில் படித்து பின்னால் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் கூட செய்யலாம் என்றெல்லாம் விளக்க ஆரம்பித்து விட்டார் . 

Savukku Shankar’s Absurd Vindication of Trolling and Online Abuse

In the article “Social media is for grown ups” Savukku Shankar makes atrocious and highly dangerous claims about the so-called acceptability of abuse and blackmailing in facebook. He says it is normal for “opinionated” users to be targeted by vicious groups in facebook and one should accept the abuse and keep quiet. In the same vein one could ask whether Savukku Sankar would take it In the chin if his wife, daughter, sister or mother is sexually abused when they are out in the public space, since sexual abuse of women is a common crime in India.

வெறுப்பின் முகமும் முகநூலின் முகமும்

நம்மை காயப்படுத்த நினைக்கிறவர்கள் முதலில் முயற்சியெடுக்கிறார்கள். ஏன் முதலில் என்றேனென்றால் அது பல படிகளில் ஒன்று மட்டும் தான். அடுத்தடுத்து நாம் காயப்பட்டு விட்டோமா என வேவு பார்த்து உறுதி செய்வார்கள். நம் காயப்படவில்லை என்றால் அவர்கள் 1.    புண்பட்டு மனம் வருந்துவார்கள்.

ஜெயலலிதா, கனிமொழியை அரசியலில் இருந்து தடை செய்யலாமா?

ரெண்டு ஆண்டுகள் தண்டனை பெறுபவரின் எம்.பி, எம்.எல்.ஏ பதவியை பறிக்கலாம் என்றொரு தீர்ப்பு வந்துள்ளது. இதை ஒரு புறம் விநோதமாய் எதிர்க்கிற “சமூக ஆர்வலர்களும்” இருக்கிறார்கள். அவர்களின் தரப்புகள் இரண்டு.

அப்பா

மத்தியவர்க்க அப்பாக்களுக்கே உள்ள குணமோ என்னவோ அல்லது ஏதாவது ஒரு கட்டத்தில் மனதின் ஒரு பகுதி இறுகிப் போனதனால் இருக்கலாம், என் அப்பா என்னிடம் வெளிப்படையாக அன்பு காட்டி பாராட்டிய தருணங்கள் மிக மிக குறைவு. அல்லது என் நினைவில் இருந்து அகன்று போயினவா? நிறைய பேருக்கு பெற்றோர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளதை கண்டிருக்கிறேன். எனக்கும் அப்பா மீது உண்டு. எவ்வளவோ.

Live-in உறவு திருமணத்துக்கு மாற்றாகுமா?

Live-in உறவுகள் பற்றி சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கும் முன்னேயே இதைப் போன்று திருமணமற்ற உறவுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் தீர்ப்புகள் 2008இல் இருந்தே சில வந்துள்ளன. ஆனால் சமீப தீர்ப்பு அதில் செக்ஸுக்கு தரப்பட்ட அதிகாரபூர்வ அந்தஸ்து காரணமாக பரபரப்பான விவாதத்துக்கு உள்ளானது. ஏற்கனவே விவாதங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதைப் போல இத்தீர்ப்பு செக்ஸ் வைத்தால் திருமணம் என எளிமைப்படுத்தவோ வலியுறுத்தவோ இல்லை. தொடர்ந்து குறிப்பிட்ட ஒரு கால அளவுக்கு தம்பதியினர் சேர்ந்திருந்தால் அது திருமணமாக அங்கீகரிக்கப்படலாம் என்கிறது. கூடவே “உடலுறவு கொண்டிருந்தால்” எனும் சொற்களும் சேர சில அதை எப்படி நிரூபிக்க முடியும், திருமணம் என்பது செக்ஸ் மட்டும் அல்லவே என நியாயமான கேள்விகளைக் கேட்டனர். 

“நீ பிச்சையெடுக்க போறே”

பொதுவான கணக்கு வாத்தியார்கள் மாணவர்கள் கணக்கு படித்தால் மட்டுமே உருப்பட முடியும் என திடமாக நம்புவார்கள். “உலகமே கணிதத்தின் அச்சின் தான் சுழல்கிறது” என்று ஸ்படிகம் எனும் படத்தில் கணக்கு வாத்தியாராக வரும் திலகன் சொல்லுவார். அப்படி எனக்கும் ஒரு ஆசிரியர் இருந்தார். சர்மா. ஊரில் அவருக்கு மிக நல்ல பெயர். எவ்வளவு சிரமமான கணக்கையும் மிக எளிதாக தீர்க்கும் சூத்திரங்களை சொல்லித் தருவார் என கூறுவார்கள். அவரது மாணவர்கள் தாம் பொதுவாக கணக்குப் பாடத்தில் முதலில் வருவார்கள். 

வேப்பமர உச்சியில் நின்று பேயொண்ணு ஆடுதுண்ணு…

பொதுவாக மோசமான மனநிலை தவிர்க்க இயலாதது. மந்தாரமான வானிலை போல அது நமக்குள் ஒரு இருளை கசப்பை அவநம்பிக்கையை கொண்டு வரும். பருவநிலையை சகிப்பது போலவே மோசமான மனநிலையையும் சகிக்கிறோம். சிலர் பாட்டு கேட்பார்கள், படம் பார்ப்பார்கள், இணையத்தில், போனில் அரட்டை, அல்லது மூர்க்கமாக வேலை செய்வார்கள். கோயிலுக்கு கூட போகலாம். ஏன் தீர்வை நாடாமல் இத்தனையையும் செய்கிறோம்? ஏனென்றால் நமக்கு காரணம் தெரியவில்லை. மனம் தானாக தெளிய காத்திருக்கிறோம். அது எப்போது எனத் தெரியாததனால் வரும் பதற்றமும் ஒரு பக்கம் நம்மை செலுத்துகிறது. 

இளவரசனின் கொலைக்கு நடவடிக்கை எடுப்பாரா ஜெயலலிதா?

இளவரசனின் பிணம் போடப்பட்டுள்ள நிலை, அங்கு வைத்திருக்கும் மதுபுட்டி போன்றவை இது நிச்சயம் ஒரு செட்டப் செய்யப்பட்ட தற்கொலை என காட்டி விடுகிறது. மேலும் அவர் இறந்த நேரத்தில் அவ்வழி எந்த ரயிலும் போகவில்லை. 

மாணவிகளின் ஆடைக் கட்டுப்பாடுகளும் அதன் அபத்தங்களும்

ஆடைக்கட்டுப்பாடு பற்றின இன்றைய சன் டி.வி விவாத மேடையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் சில சுவாரஸ்யமான (அத்தோடு கொஞ்சம் நகைச்சுவையான) கருத்துக்கள் சொன்னார்.