பொதுவாக மோசமான மனநிலை தவிர்க்க இயலாதது. மந்தாரமான வானிலை போல அது நமக்குள் ஒரு இருளை கசப்பை அவநம்பிக்கையை கொண்டு வரும். பருவநிலையை சகிப்பது போலவே மோசமான மனநிலையையும் சகிக்கிறோம். சிலர் பாட்டு கேட்பார்கள், படம் பார்ப்பார்கள், இணையத்தில், போனில் அரட்டை, அல்லது மூர்க்கமாக வேலை செய்வார்கள். கோயிலுக்கு கூட போகலாம். ஏன் தீர்வை நாடாமல் இத்தனையையும் செய்கிறோம்? ஏனென்றால் நமக்கு காரணம் தெரியவில்லை. மனம் தானாக தெளிய காத்திருக்கிறோம். அது எப்போது எனத் தெரியாததனால் வரும் பதற்றமும் ஒரு பக்கம் நம்மை செலுத்துகிறது.