Skip to main content

பேஸ்புக் சண்டையும் வாழும் கலையும்




காலையில் ஒரு பஞ்சாயத்து. எங்க குடியிருப்பில் ஒரு நாய். தெரு நாய் தான். உள்ளேயே படுத்திருக்கும். கொரியர் பையன், கேஸ் சிலிண்டர் சப்ளையர், வேலைக்காரர்கள் என யாரைப் பார்த்தாலும் சமீபமாய் துரத்த ஆரம்பித்துள்ளது. அந்த நாய்க்கு என் மனைவி சாப்பாடு போடுவதால் காலையிலேயே என்னிடம் தகராறுக்கு மொத்த குடியிருப்பு ஆட்களும் வந்து விட்டார்கள். எனக்கு அப்போது பேஸ்புக்கில் விவாதித்த (சண்டை போட்ட) அனுபவம் வெகுவாக கை கொடுத்தது.


அவர்கள் பக்கம் நியாயம் என்பதால் அமைதி காத்தேன். ஏறிக் கொண்டே போனார் ஒருவர். கோபத்தில் என் வீட்டுக் கதவை போகும் போது அவர் வேகமாக சாத்திக் கொண்டு போனார். உடனே பிடித்துக் கொண்டேன். ”எப்பிடி நீங்க அப்பிடி கதவை உடைக்கிற மாதிரி சாத்தலாம்?” எனக் கேட்டேன். “நான் என்ன உடைத்தா விட்டேன்” என்றார். ”நீங்கள் உடைக்க வேண்டியதில்லை, அப்படி சாத்துவதன் மூலமாக என்னை அவமானப்படுத்த முயல்கிறீர்கள்” என்றேன். அவருக்கு இன்னும் டென்ஷனாகி விட்டது. பேச்சுவாக்கில் என்னை ஒருமையில் அழைத்தார். உடனே அதையும் பிடித்துக் கொண்டு ஏறினேன். அடுத்து அவர் மனைவி வந்துஅவரு கோபத்துல தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சுக்குங்க தம்பிஎன்றார். உடனே நான்பரவாயில்ல வயசில மூத்தவர் தானே. ஆனா சார் உங்க வைப் எவ்வளவு டீசெண்டா பேசறாங்க பாருங்க. பாத்து கத்துக்கிங்கஎன்றேன். அவர் முகம் செத்து விட்டது.
அடுத்து பிரச்சனையை நானே இப்பவே சரி பண்ணுகிறேன் என்று உறுதியளித்து விட்டு தண்ணீர் பற்றாக்குறை போன்ற பொதுப்பிரச்சனையை நோக்கி சர்ச்சையை திருப்பினேன். மெயிண்டெனன்ஸ் தொகை நிறைய பாக்கி வைத்திருக்கும் குடியிருப்பின் பொது எதிரி ஒருவர் இருக்கிறார். அவரால் தான் தண்ணீர் பிரச்சனை என்றார்கள். அவரை ஆளாளுக்கு திட்டி விட்டு நாயை மறந்து விட்டு கலைந்து போனார்கள்.

இப்பிடித் தானே பேஸ்புக்கிலயும் எல்லா சண்டையும் நடக்குது. எதையோ யாரோ ஆரம்பிச்சு விடுவாங்க. அப்புறம் மையத்துக்கு சம்மந்தமில்லாத ஒரு விசயத்தை நோக்கி அது போகும். யாராவது வாய் விட அதற்காக அவரை பிடித்து சாத்துவோம். கடைசியில் ஒரு புது பொது எதிரியை உருவாக்கி விட்டு கலைந்து போவோம்.

பேஸ்புக் சண்டையின் முக்கிய பாடம். எந்த பிரச்சனை எழுந்தாலும் அதுக்கு நேரடியா பதில் சொல்லக் கூடாது. அதை ஒட்டி எதிரி பேசும் போது ஒரு வார்த்தையை தப்பாய் விடுவார். அல்லது ஒரு அபத்தமான கருத்து சொல்லுவார். அதை வைத்து சாத்து சாத்தென்று சாத்த வேண்டும். கடைசி வரை நம்மள எதுக்கு திட்ட வந்தான்னு அவனுக்கே நினைவு வரக் கூடாது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...