Skip to main content

புதிய தொகுப்பு

 இத்தொகுப்பில் உள்ள கதைகளைப் படிக்கையில் நகைமுரண்தான் இவற்றின் பொதுவான தொனி என்று தோன்றுகிறது. ஆய்வு, கல்விப்புலம், பதிப்புத் துறை, தொல்பெருமை, அறிவியல், பரிசோதனை, வேலை, அறம், நேர்மை என விரியும் கதைகள் இவை. என் கல்லூரிப் பருவம் முதல் முப்பதுகளின் பிற்பகுதி வரையிலும் எழுதிய கதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு எனும் அளவில் இக்கதைகள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தைச் சேர்ந்தவை அல்ல.


முன்னோடிகளின் சாயல் அதிகம் தெரியாமல் எழுதியிருக்கிறேன். திட்டமிட்டல்ல. என் இயல்பே பழைய ஒன்றை மறந்து புதிய ஒன்றை நோக்கி நகர்வதுதான். எனக்கு மிகவும் பிடித்த படைப்பாளிகளின் நடையின் மீதான நினைவுகளோ ஈடுபாடோ பணவீக்கத்தின்போது சம்பளக் காசைப் போல எழுதும்போது காணாமல் போய்விடும்.

அசோகமித்திரனுக்கு இத்தொகுப்பை நான் அர்ப்பணித்திருப்பதற்கு ஒரு காரணம் இக்கதைகளின் முடிவில் உள்ள நுட்பத்தையும் அமைதியையும் நான் அவரிடம் இருந்தே கற்றுக் கொண்டேன் என்பதே. மேலும் இதிலுள்ள சில கதைகளை எழுதிய காலத்தில் அவரை அடிக்கடிச் சந்திக்கும் வாய்ப்பும் அமையப்பெற்றது. அதற்காக நான் அவருடைய வாரிசு என்றெல்லாம் கோரிக் கொள்ளவில்லை. ஒரு கடப்பாட்டின் அடிப்படையில் மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

ஏற்கனவே பிரசுரமான கதைகளே என்றாலும் இத்தொகுப்பிற்காக கதைகளின் மொழியையும், சில கதைகளின் முடிவையும் மாற்றியுள்ளேன்.

நன்றி! இனி இக்கதைகளை படித்து விட்டு எதையாவது சொல்லத் தோன்றினால் சமூகவலைதளங்களிலோ மின்னஞ்சலிலோ தொடர்புகொண்டு எனக்கு எழுதுங்கள்.

https://www.amazon.in/dp/B0GFP2PPMM




Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...