Skip to main content

இரண்டு பெருந்துன்பங்கள்

 

நவீன வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கும் பெருந்துன்பங்கள் என்று இரண்டைச் சொல்வேன்:

1) நம் வாழ்க்கை மீது நமக்கு எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை. பணம், சுற்றுச்சூழல், குடும்ப அமைப்பு, உறவுகள், உற்பத்தி உறவு என எதிலும் நமக்கென ஒரு முகமையோ அதிகாரமோ இல்லை. நாம் அதிலெல்லாம் இருக்கிறோமோ அல்லது மாயாவியாகத் திரிகிறோமா என்பதே தெரியவில்லை. இதனால் சதா ஒருவிதப் பதற்றத்திற்கு ஆட்பட்டிருக்கிறோம். அதைப் போக்க வன்முறை, போதை, கேளிக்கை, துய்ப்பு என உள்ளுக்குள் குறுகிக் கொண்டே போகிறோம், வெறுப்பாலும் கசப்பாலும் நிரம்பியிருக்கிறோம். நமது கொண்டாட்டங்கள் தப்பித்தல் மட்டுமே. அசலான நிம்மதியான தன்னம்பிக்கை ததும்பும் கொண்டாட்டங்கள் அல்ல.

2) நம் திறமைக்குப் பொருந்தாத வேலைகளைச் செய்யும்படி நிர்பந்திக்கப்படுகிறோம். நீங்கள் டெலிவரி பாய்ஸைப் பாருங்கள். விற்பனைப் பிரதிநிதிகள், சேவைத் தொழிலில் உள்ளோரைப் பாருங்கள். அவர்களுக்கும் அவர்கள் செய்யும் வேலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. வேலைக்கு அதனளவில் முன்பிருந்த மரியாதை இன்றில்லை. வேலையென்பது அது ஈட்டித் தரும் பணத்தினால் மட்டுமே மரியாதையைப் பெறுகிறது. ஒரு டாஸ்மாக்கை நடத்துபவர் ஒரு ஆசிரியரை விட பலமடங்கு மேலானவர் இங்கு. சவுக்கு சங்கர் அவருடைய சொத்து மதிப்பினாலே ஒரு அரசியல் போராளியை விட அதிக அதிகாரமும் மதிப்பும் பெற்றவர். மோசடிப் பேர்வழிகள் தம் அதிகாரத்தாலும் பணத்தாலும் கொண்டாடத்தக்கவர்கள் ஆகிறார்கள். இப்படி எல்லாமே தலைகீழாகி விட நாம் நம் வேலையில் இருந்து வேலையைச் செய்யும் முன்பே வெளியேற்றப்படுகிறோம். அவநம்பிக்கையுற்று வேலையை அசிரத்தையாகச் செய்வோர் பெருகி விட்டனர். இது தமக்கான வேலையல்ல எனும் எண்ணமே அவர்களைச் செலுத்துகிறது.

இக்காரணங்களாலே பெரும்பாலானோர் ஒருவித சமூக மனவியாதிக்கு ஆட்படுகிறார்கள். கடும் வறுமையால் மக்கள் துன்புறும்போது அது பசிப் பிரச்சினை. போரினால் நிலையழியும்போது அது அழிவின் பிரச்சினை. ஆனால் தன்னிலிலும் பிறரிலும் பொருந்த முடியாமல் போகும்போது, வேலை, குடும்பம், சமூகம் எல்லாமே மனிதர்களை வெளியேற்றும்போது அது சமூகப் பைத்தியமாக வெடிக்கிறது. இந்தப் பைத்தியத்திற்கு மருந்து மாத்திரைகள் தீர்வல்ல.

சமூகப் பொருளாதார, சமூகக் கலாச்சார தீர்வுகளே நமக்குத் தேவை. மனிதர்களுக்கு தாம் வாழும் வெளியில் - அகவெளியிலும் புறவெளியிலும் - உரிமையும் முகமையும் வேண்டும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...