Skip to main content

சாருவும் கெர்ட் வொனெகெட்டும்

 


How Tamil author Charu Nivedita has created a cult following for his books  (and his persona)

எனக்கு சாருவின் நகைச்சுவையில் உள்ள கட்டற்ற தன்மை பிடிக்கும். அதை ஒரு அபத்த நகைச்சுவை என்று சொல்லலாம். அதில் ஒரு குழந்தைமை எப்போதும் இருக்கும். குறிப்பிட்ட நபர்களை, நம்பிக்கைகளை பகடி செய்வது அவரது நோக்கமாக இருக்காது. யாருமே பார்க்கவோ பேசவோ விரும்பாத ஒன்றைப் பகடி செய்வார். அந்த ஒன்று சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மாறும். அதை ஒரு எதிர்மறை கடப்புநிலைப் பொருள் (negative transcendent) என்றோ நிகழாத இன்மை (unrealized emptiness) என்றோ சொல்லலாம்.

எதிர்மறை கடப்புநிலைப் பொருள் என்றொன்றைப் பற்றி யாரும் சொல்லியிருக்கவில்லை. குந்தர் ஆண்டர்ஸ் இதை எதிர்காலத்தில் தொழில்நுட்ப ஆதிக்கத்தால் நாம் நமது முன்னேற்றத்தால் நம்மைதே கடந்து அழிவை நோக்கிப் போவோம் எனும் பொருளில் பயன்படுத்தினார். நான் இதை வெற்றுக்குறிப்பான் எனும் பொருளில் பயன்படுத்துகிறேன். சாரு தொடர்ந்து ஆன்மீகம், தன்னைக் கடந்த மகத்தான அனுபவங்கள் குறித்து எழுதுவார். அதனூனே தான் அவரது இந்தப் பகடியும் நிகழும். அவரது எழுத்தின் அடிநாதமே சொல்ல வரும் விசயத்தைக் கடந்த உணர்வுநிலையை நமக்குத் தருவதுதான். இதுவே அதன் கடப்புநிலைத்தன்மை. ஆனால் அவர் நகைச்சுவை என்று வரும்போது தான் கொண்டாடுகிறவற்றின் (இலக்கியம், காதல், நட்பு, லட்சியம்) நிகழாத எதிர்மறைக்குள் நம்மைக் கொண்டு போவார். காதல் காதல் என்று மருகுவோர் அதற்கு நேர் எதிராகச் செயல்படுவதை அவர் பகடி செய்வதை எடுத்துக் கொள்வோம். அங்கு அவர் காதலைப் பகடி செய்யவில்லை, காதல் குறித்த அணுகுமுறையையும் பகடி செய்யவில்லை - ஒருவித பாசாங்கை, முரணைப் பகடி செய்கிறார் என்றும் கொள்ள முடியாது. ஏனென்றால் அடுத்த சில பக்கங்களிலேயே அவர் அதே பாசாங்கைத் தானும் நிகழ்த்தத் தொடங்குவார். அதிலும் அவர் தீவிரமான நம்பிக்கையை வைக்கிறாரா அல்லது அதுவும் ஒருவித விளையாட்டா என்று அறிய முடியாது. இப்படி அவரது பகடி எதிர்மறையை ஊடுருவி அதே எதிர்மறைக்குள் போய் நம்மை நிறுத்துகிறது. அது ஒன்றுமில்லாத இடத்துக்குப் போகிறது. எதிர்மறைக் கடப்புநிலைப் பொருள் எனும் பதமே சற்று கடுமையாகத் தெரியலாம். நிகழாத இன்மை என்பது இன்னும் பக்கத்தில் வருமென நினைக்கிறேன்.
சாருவின் நகைச்சுவையில் உள்ள கட்டற்ற தன்மை எனக்குப் பக்தி கவிதைகளுக்குவெகு நெருக்கத்தில் இருப்பதாக அடிக்கடி தோன்றும். அதனாலே அவரது பகடியை நாம் தனித்துப் படிக்கலாகாது - அதை அவரது காதல் வரிகள், கொண்டாட்ட விவரணைகளுக்கு அருகிலேயே வைக்க வேண்டும். அப்போதே அது ஏன் நம்மை அகத்தே அவ்வளவு சுத்தப்படுத்துகிறது என விளங்கும்.

கெர்ட் வொனெகட்டின் பகடியும் நகைச்சுவை உணர்வும் நிச்சயமாக சாருவை நினைவுபடுத்துகிறது. எதையும் விட்டுவைக்காத முழுமையான அம்மண விளையாட்டாக அவர் பகடியை மாற்றுகிறார். உதாரணமாக Breakfast for Champions நாவலில் தன் மனைவியை இழந்த ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு முழுமையான பைத்திய நிலையில் சரிவதைச் சித்தரிக்கும்போது அவர் எதார்த்தவாத எழுத்தில் வீழ்ச்சியை கசப்புடன் சுய-இரக்கத்துடன் காட்டுவதற்கு நேரெதிராகச் செல்கிறார். முழுக்க முழுக்க கேலி, கிண்டல், பகடிதான், ஆனால் அந்த எள்ளலிலும் கசப்பு இருக்காது. அதே போலத்தான் அவர் பதிப்பு வணிகம் எப்படி இலக்கியத்தையும் போர்னோகிரபிக்கு பக்கத்தில் கொண்டு போகிறது எனக் காட்டும் இடங்கள்.

ஆனால் ஒப்பீட்டளவில் சாருவின் எழுத்து னெகெட்டை விட பலமடங்கு மேலானது - ஏனென்றால் சாரு இந்த பகடியைக் கொண்டு நம்மை இன்னொரு இடத்துக்கு அழைத்துச் சென்று நம்மை சுத்திகரிக்கிறார். இதை வெனெகெட்டால் செய்ய முடிவதில்லை. அவர் மறுப்புநிலைவாதத்துடன் நின்றுகொள்கிறார். தன்னுடைய அரசியல் தரப்பையும் (இடதுசாரி, சர்வாதிகார எதிர்ப்பு) அவரால் கடக்க முடிவதில்லை.  

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...