Skip to main content

ச. தமிழ்ச்செலவனுக்கு சாகித்ய அகாடெமி விருத





ச. தமிழ்ச்செல்வன் என் பிரியத்துக்குரிய படைப்பாளி அல்லர். அவரைக் குறித்துச் சிந்திக்கையில் எல்லாம் அவரது பலமும் பலவீனமும் மானுடவாதமும் மிகையான எளிமையும்தான் எனத் தோன்றும்.

ச. தமிழ்ச்செல்வன் முதன்மையாக ஒரு மானுடவாத எழுத்தாளர். சிறுகதையாளர். 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டு வருகிறார்.ஆனால் நிறைய எழுதிக் குவித்தவரோ தமிழில் சிறுகதைகளில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களை செரித்தோ மறுத்தோ தன்னைத் தகவமைத்துக் கொண்டவர் அல்லர். அதனாலே அவர் முழுமையாகத் தன்னை எழுத்தாளர் என்று மட்டுமே கருதி வாழ்ந்தார் என்று கருத முடியாது. இடதுசாரி முற்போக்கு செயல்பாட்டாளர், ஆனாலும் தன் கதைகளில் அவர் மார்க்ஸிய பொருளாதார நோக்கில் சமூக அவலங்களைக் கண்டதில்லை என்பது என் பார்வை. அவர் மானுடவாத நோக்கிலேயே கொஞ்சம் கற்பனாவாதத்துடன் மனிதர்களைச் சித்தரித்தார். இது என்னை வெகுவாக ஆச்சரியப்படுத்திய ஒன்று.
வண்ணதாசனின் கதையுலகை எளிய மக்களிடம் வைத்து மென்னுணர்வுகளை தழைதழைப்பு இன்றி நேரடியாகச் சொன்னால் தமிழ்ச்செல்வனின் கதையுலகம் தோன்றிவிடும் என எனக்குத் தோன்றும்.
ச. தமிழ்ச்செல்வன் ராணுவத்தில் இருந்திருக்கிறார் என்பது என்னை ஆச்சரியப்படுத்திய விசயம் - தமிழ் நவீன எழுத்தாளர்கள் பொதுவாக மென்மையான, அலுவலக நாற்காலிகளில் சமையும் பணிகளிலே இருப்பார்கள். ஆனால் ராணுவம், தேசியம், யுத்தங்களின் குரூரம், அபத்தம் குறித்தெல்லாம் கெர்ட் வெனெகெட், ஹெமிங்வேயைப் போல இவர் பேச மாட்டார்.
பெண்கள், பெண்ணுரிமை என்று வந்துவிட்டால் ச. தமிழ்ச்செல்வன் பயங்கர woke ஆகப் பேசுவார் என்பதைக் கவனித்திருக்கிறேன். உதாரணமாக ஆண்கள் நன்றாக சமைக்க ஆரம்பித்தால் குடும்பத்துக்குள் சமத்துவம் வந்துவிடும் எனும் தோரணையில் அவர் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அதேநேரம் நம் இளம்தலைமுறைப் பெண்களில் சிலரோ ஒன்று சமைக்கத் தெரிந்த கணவர் கிடைத்துவிட்டால் அவரை அடிமையாக்கித் துன்புறுத்துகிறார்கள் அல்லது கணவருக்கும் சமையலுக்கும் தொலைவு என்றால் அவருக்குச் சோறே போடாமல் ஸ்விக்கியில் ஆர்டர் போட்டே கொல்கிறார்கள் என்பதும் எதார்த்தம்தான்.
ச. தமிழ்ச்செல்வனின் முக்கியத்துவம் அவர் மானுடவாதச் சிறுகதைகளுக்கு அளித்த பங்களிப்புதான். அதனாலே வரலாற்றளவில் அவர் தவிர்க்க முடியாதவர். அவருக்கு என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...