Skip to main content

தென்னாப்பிரிக்காவின் பொற்காலம்


 

வெறுமனே மத்திய வரிசை மட்டையாட்டத் திறமை என்று எடுத்துக்கொண்டால் தென்னாப்பிரிக்க அணி நம்மைவிட பலமடங்கு மேல். இன்று பல அணிகளிடமும் ஓரளவுக்கு நல்ல துவக்க வீரர்கள் உண்டு. ஆனால் மத்திய வரிசையின் பலமே ஒரு அணியின் வெற்றிகளைத் தீர்மானிக்கிறது. பிரீட்ஸ்கி பார்க்க அந்த காலத்து டிவில்லியர்ஸைப் போல இருக்கிறார். அடுத்து குட்டி ஏ.பி பிரெவிஸ். அடுத்து இரண்டு பிரமாதமான ஆல்ரவுண்டர்கள் - யான்ஸனும் போஷும் - இருவருமே 25-60 சராசரி வைத்திருக்கிறார்கள். சுலபத்தில் 200 ஸ்டிரைக் ரேட்டில் ஆடுகிறார்கள். இது போக மார்க்ரமும் டிகாக்கும். கிட்டத்தட்ட எந்த இடத்தில் இருந்தும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறம் படைத்த வீரர்கள். இந்தியாவின் மட்டையாட்ட வரிசையை ஒப்பிட்டுப் பாருங்கள் - நம்மிடம் யாருமே இல்லை. ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என எடுத்துக்கொண்டாலும் இந்த மட்டையாட்ட ஆற்றல் இல்லை. மேலும் வயதும் அவர்கள் வசமே (இந்திய மட்டையாளர்களுக்கு ஒன்று திறமை இல்லை அல்லது கோலி, ரோஹித்தைப் போல வயதில்லை). ஆக, இதுதான் தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் பொற்காலம். வரக்கூடிய 50 ஓவர் உலகக்கோப்ப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் அவர்கள் வராவிட்டால் ஆச்சரியப்படுவேன். டி20யில் அவர்களுடைய அணி இன்னமும் செட்டில் ஆகவில்லை என நினைக்கிறேன். ஆனால் விரைவில் இந்த அணியை வைத்தே அதிலும் மேலே வருவார்கள்.

தென்னாப்பிரிக்கா செய்கிற உருப்படியான விசயம் டெஸ்டுக்கும் ஒருநாள் போட்டிகளுக்கும் தனித்தனியான வீரர்களை வைத்திருக்கிறார்கள் (ஒருசிலர் இரண்டிலும் ஆடுகிறார்கள் என்றாலும்). அவர்களுடைய டெஸ்ட் மட்டையாளர்கள் டெஸ்ட் போட்டிக்காகவே ஆடுகிறார்கள் (டி20யில் இடம்பிடிக்கும் பயிற்சியாகக் காண்பதில்லை.) அவர்கள் தம் தடுப்பாட்டத்தை நம்பிப் போராடுகிறார்கள் (நெருக்கடியில் சொதப்புவதில்லை.) அடுத்து, அவர்கள் தம் பழைய இனத்தின் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை கொஞ்சம் நெகிழ்வாகக் கையாள்கிறார்கள். இப்போதைய அணியிலேயே மூன்று கறுப்பு / பழுப்பு நிறத்தவர்கள் தாம் (பவுமா வந்ததும் அது நான்காகிவிடும்). ஒரு போட்டியில் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்தாலே அது போட்டியுணர்வு ஊக்கப்படுத்தும். இதன் நல்விளைவை இப்போது அனுபவிக்கிறார்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...