Skip to main content

மாயக் கதவின் கதை

 பொதுவாக கடுமையான விமர்சனங்களைப் பார்க்கையில் எனக்கு விமர்சிக்கப்பட்ட படைப்பாளி மீது இரக்கம் மேலிடும். ஆனால் அண்மையில் அவ்வாறு விமர்சித்த ஒருவரே என் இரக்கத்தை, வருத்தத்தை, கவலையைக் கோரும்படியாக ஒரு பதிவெழுதியிருந்தார்: தான் எழுதிய எதிர்மறை விமர்சத்தினால் தனக்கு எதிர்காலத்தில் திறக்கப்படக்கூடிய கதவுகள் திறக்கப்படாமல் போகக்கூடும் எனத் தனக்குத் தெரியும் என்று அவர் சொல்கிறார். அவரது வருத்தம் புரிகிறது. இது இன்றைக்கு பல எழுத்தாளர்களுக்குள்ளும் இருக்கும் அச்சம்தான். எழுத்தாளர்கள் ஒற்றை அடையாளத்தின் கீழ் வரும் ஒரு இயக்கத்தின் பகுதியாக தம்மை மாற்றும்போது அவர்களை இணைப்பது தன்னலமும் அச்சமுமே. அவர்கள் அதனாலே தம் கருத்துக்களை தம் இதயத்துக்குள் புதைத்துக் கொள்கிறார்கள். எழுத்தாளர்கள் தம் கருத்துக்களைச் சுதந்திரமாகத் தெரிவிக்க முடியாமல் போகும்போது அவர்கள் அகவெளியும் சுருங்குகிறது, அவர்களுக்கும் சமூகத்துக்குமான தொடர்பு வலை அறுகிறது, அவர்கள் மௌனத்தை தூக்குக் கயிறாக முடிச்சிட்டு தம் கழுத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். தமிழில் இதற்குச் சிறந்த உதாரணம் விஷ்ணுபுரம் அமைப்பு. ஜெயமோகன் என்னதான் எழுத்தாளர்கள் திமுக சார்பு எடுத்து போலியாக நடிப்பதாக விமர்சித்தாலும் உண்மையில் தமிழ் எழுத்தாளர்கள் என்றுமே அரசைப் பற்றி விமர்சனம் செய்ததில்லை. ஆனால் அவர்கள் கலாச்சார விமர்சனத்தை, கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்கள். தொடர்ந்து விருதளிப்பது, வேறு இலக்கிய மேடைகளைத் தன் செல்வாக்கால் ஆக்கிரமிப்பது, வெளிநாட்டுப் பயணங்களைத் தன் ஆதரவாளர்களுக்கு அமைத்துக் கொடுப்பதன் வழியாக அவர் வெளியே உள்ள படைப்பாளிகளை தன்னை விமர்சிக்காமல், தன் கருத்துக்கு எதிர்க்கருத்து சொல்லாமல் நாக்கைத் துண்டித்துவிடுகிறார். கமல்ஹாசன், மணிரத்னம் தொடர்பையும் அவர் சினிமா வாய்ப்பு எனும் ஆசை காட்டவே பயன்படுத்தி இருக்கிறார். சினிமாவுக்குப் போக விரும்பும் இளம் படைப்பாளிகளும் எதற்குப் பகைத்துக் கொள்ள வேண்டும் என அமைதியாகப் போகிறார்கள். எதையும் இழக்கச் சாத்தியமில்லாத வாசகர்களும் பேஸ்புக்கர்களுமே இப்போதும் சுதந்திரமாக இருக்கிறார்கள். இச்சூழல் அந்த காலத்துக்கு ஸ்டாலினிய ரஷ்யாவையும், ஹிட்லரின் ஜெர்மனியையும் நினைவுபடுத்துகிறது.

அச்சம் ஆபத்தானது. அது இலக்கியத்தை உள்ளிருந்தே தின்னும் புற்றுநோய். எனக்கு மேற்சொன்ன எழுத்தாளரின் விமர்சனப் பாணியிலோ கருத்துக்களுடனோ உடன்பாடில்லை. ஆனால் அவரது பயத்தைப் பார்க்க பயமாக உள்ளது. தமக்கான வாய்ப்புகள் பறிபோகக்கூடும் என ஒரு எழுத்தாளர் பயப்படும்போது அவர் தனக்கான வாய்ப்புகளும் திறக்கூடிய கதவுகளும் உள்ளன என நம்புகிறார் என்றே பொருள். (அதேநேரம் அவர் இதை ஒரு தற்காலிக உணர்வாகவே பார்க்கிறார். இது அவரை மௌனிக்க வைப்பதில்லை.) நிஜத்தில் இந்த அச்சமே ஒரு கற்பிதம்தான். இப்படியான கற்பிதங்கள் இன்னும் அச்சமூட்டுகின்றன.
நீங்கள் பொய்யாக ஒரு கதவை உருவாக்கி அதை ஒரு சிறு திரளின் முன் வைக்கிறீர்கள். ஒருவர் பாடல் எழுத வாய்ப்பு பெற்றால் அது தன்னாலே நடந்தது எனச் சொல்லி, ஒருவர் தேசிய விருது பெற்றால் அதுவும் தன்னால்தான் எனக் கோரி அக்கதவைக் கட்டமைக்கிறீர்கள். அமெரிக்காவில் இருபது பேர்கள் திரளும் கூட்டம் ஒன்றை நடத்தி நான் சர்வதேச அளவிலான கூட்டத்தை நடத்தி அங்கு என் ஆதரவளார்களை அனுப்புவேன் என ஒரு கதவை வரைந்து காட்டுகிறீர்கள். (ஒரு ஒப்பீட்டுக்கு, உலகம் முழுக்க மில்லியன் கணக்கில் புத்தகங்களை விற்கும் பெருமாள் முருகன் எவ்வளவு அடக்கமாக இருக்கிறார் எனப் பாருங்கள்.) இப்போது அக்கதவை நோக்கி பரிதவிப்புடன் மக்கள் நிற்கிறார்கள். அல்லது ஒருவேளை அக்கதவு திறந்துவிடுமோ எனும் அச்சத்தில் நிற்கிறார்கள். எப்படி கடவுள் பேசுவதில்லையோ அதேபோல இம்மாதிரி கதவுகளும் திறப்பதில்லை

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...