Skip to main content

நாவலெழுதுவது பற்றின குறிப்புகள் 7

இருவகையான நாவல் வாசிப்புகள் உளன. ஒன்று விமர்சக வாசிப்பு. மற்றொன்று வாசக வாசிப்பு. விமர்சன வாசிப்பு நாவல் குறித்த சிந்தனைகளை ஒழுங்குபடுத்த, அரசியல்படுத்த முயல்கிறது. அதற்கென்று திட்டமிட்ட நோக்கம் எப்போதும் உண்டு. அதனாலே நாவலின் திரளாத பலதரப்பட்ட முரணான எண்ண, உணர்வோட்டங்கள் உள்ள பரப்பை விமர்சகரால் எட்ட முடியாது. விமர்சகரின் இயக்கமே நாவல் வாசிப்பின் இயக்கத்துக்கு எதிரானதுதான். ஆனால் விமர்சன வாசிப்புக்கென்று ஒரு இடம் உள்ளது - ஒரு நூலகர் அலமாரி அடுக்குகளில் சரியாக நூல்களை அடுக்குவதைப் போன்ற, ஒரு போக்குவரத்துக் காவலர் சாலை நடுவே வந்து இவரை எதாவது கார் மோதினால் என்னாவது என நாம் பயந்துகொண்டிருக்கும்போதே 'நீ போ, நீ வா' என நெறிப்படுத்துவதைப் போன்ற செயல் அது.


ஆனால் வாசகர்கள் விமர்சக வாசிப்பைப் பொருட்படுத்துவதில்லை. வாசிப்பு அவர்களை விமர்சனத்துக்கு அப்பாலே கொண்டு செல்கிறது. வாசிப்பு ஒருவிதத்தில் வெள்ளப்பெருக்கைப் போன்றது. அதில் நின்று நிதானமாக யோசிக்க முடியாது. ஒரு நாவலில் முக்கியமற்றது என விமர்சகர் நினைக்கும் பகுதியை வாசகர் ரசித்து அதிலேயே தொய்வார். ஒரு கதையில் பொருட்படுத்தத் தகாத ஒரு தகவலையோ விவரணையோ படித்து மனம் நெகிழ்ந்து கண்ணீர் விடுவார். கதையின் போக்கில் வரும் ஒரு பிசிறான கருத்தால் ஈர்க்கப்பட்டு அவர் ஒரு புதிய தளத்தை வந்தடைவார். நாவலில் வரும் நூறு அலைகளில் ஒன்றில் ஏறி அவர் யாரும் காணாத தீவொன்றைக் கண்டடைவார். நாவலுக்கு என்று தெளிவான கதைக்களமும், கதைக்கருவும், இலக்கும் உண்டென்றாலும் நாவல் வாசிப்பு இவற்றுக்கு அப்பாலானது.

நாவலாசிரியருக்கு கிடைக்கும் பேருவகை வாசகர்கள் எப்படியெல்லாம் படித்து சிந்திக்கிறார்கள், உணர்கிறார்கள் என கவனிப்பதே.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...