Skip to main content

பைக்: நனவுவெளிக் குறிப்புகள் (எ)

 

15) என் வாழ்க்கையின் ஆகக்கொடுமையான அனுபவங்களில் ஒன்று எனச் சொல்ல மாட்டேன் என்றாலும் அந்த இருட்டில் வண்டியோட்டியது கிலியான அனுபவம்தான். சுந்தர் சியின் பேய்ப்படங்களைப் போல என் பீதியைக் காண எனக்கே சிரிப்பாகவும் வந்தது. அங்கங்கே கடைகளும் குடியிருப்பும் வருமிடங்களில் விளக்குகள் ஒளிரும். மீண்டும் கடும் இருட்டு. என்னதான் சாலையின் ஒரு பக்கமாய் அமைக்கப்பட்டிருந்த பிரதிபலிக்கும் அம்பு முனைக் குறியீடுகள் வண்டியை வயலுக்குள்ளோ பாறைகளிலோ பாய்ச்சாமல் தப்பிக்க உதவினாலும் சில இடங்களில் எங்கே சாலை வளைகிறது, எங்கிருந்து வாகனங்கள் வருகின்றன என கணிக்க வேண்டியிருந்தது. பெங்களூர் வந்து பிரதான சாலையை அடையும்வரை ஏதோ முதலிரவில் விளக்கணைத்து நடக்கும் வன்முறை போலத்தான் வண்டியோட்டினேன்


16) அவெஞ்சரில் ஒரு வினோதப் பிரச்சினை - ஷோரூமில் தந்த சாவி அடிக்கடி வளைந்தது. மாற்றுச் சாவியைச் செய்தால் அதுவும் வளைந்தது. ஒருவேளை பிரச்சினை என்னிடம்தான் இருக்க வேண்டும். ஆனாலும் சாவி எப்படி வளையலாம், பஜாஜ் கம்பெனியே நம்மை ஏமாற்றுகிறது, வழக்குத் தொடுக்க வேண்டும், சட்டையைப் பிடித்துக் கேட்க வேண்டும் என டொனால்ட் டிரம்பைப் போல பல்லவி கொதித்துக் கொண்டிருந்தாள். போல்ட் லூசாக இருந்ததும் அவளைத் தூண்டிவிட்டது. வண்டி ஒழுங்காக ஓடினால் போதும் என்பது, சாவி என் தவறாகவும் இருக்கலாம் என் நிலைப்பாடு. ஷோரூமில் இருந்து வண்டியை எடுக்கும்போது சில நேரங்களில் சின்னச்சின்ன பிரச்சினைகள் வருமென்பதும் என் அனுபவம். ஆனாலும் அவள் சொன்னதில் ஒரு விசயத்தை ஒப்புக்கொண்டேன் - சுமோ மல்யுத்த வீரனைப் போல ஒரு பைக்கைக் கொடுத்துவிட்டு அதன் பிரதானமான உறுப்பை மட்டும் இவ்வளவு சின்னதாக, மெல்லியதாக, வளையக் கூடியதாக கொடுத்திருக்கக் கூடாது. அதன் வடிவத்தாலும் கனத்தாலும் வண்டியை அசைப்பதும், திருப்புவதும் கடினமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் அதை இயக்குவதையும், லாக் செய்வதையும் முத்தம் கொடுப்பதைப் போல வலிக்காமல் பண்ண வேண்டியது என பஜாஜ் நிறுவனம் சொல்லக் கூடும். “கன்னிப் பொண்ணா நினைச்சு காரைத் தொடணும்என்று வாலி சொன்னது காருக்கு மட்டுமல்ல பைக்குக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். முதல் சர்வீஸுக்கு விடும்போது இப்பிரச்சினைகளைக் குறிப்பிட்டேன். சர்வீஸ் பொறுப்பாளர் இதெல்லாம் பிரச்சினையே இல்லையென்பதைப் போல ஒரு அட்டைக் காகிதத்தில் குறித்துக்கொண்டார். முதல் சர்வீஸுக்குப் பின்பு வண்டி இன்னும் சுமூகமாக, வெண்ணெய் போல ஓடும் என்கிறார்கள். மைலேஜும் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். பார்ப்போம்.


17) சர்வீஸுக்குப் பின் வண்டியின் பிக் அப்பும், வேகமும் நன்றாகவே உள்ளன. ஆனால் பூட்டு மட்டும் அதிமுக தலைவர்களின் தலையை வருடிக் கொடுக்கும் மோடியைப் போல உள்ளது. ஒருநாள் திறக்கிறது, இன்னொரு நாள் அசைய மறுக்கிறது. சர்வீஸ் செண்டரில் கேட்டாலும் புதுசு அப்படித்தான், போகப்போக பழகிரும் என்கிறார்கள். நேற்று ஒரு ஆட்டோக்காரரிடம் இதைப் பற்றிப் பேசினேன்: அவர் தன் வண்டிச் சாவியைக் காட்டி இப்போது வரும் வாகனங்களின் சாவிகள் பலவீனமாக உள்ளதாகவும், அதற்கு கம்பெனிக்காரர்கள் கொண்டு வந்துள்ள தொழில்நுட்ப மாற்றங்களே காரணம் என்றார். அவெஞ்சரின் சாவிப் பிரச்சினையைப் பற்றி யுடியூபில் காணொளிகளும் உள்ளன. நம் ஆட்கள் என்ன சீர்திருத்தம், மாற்றம் கொண்டு வந்தாலும் அது புதுப் பிரச்சினைகளையும் கைப்பிடித்து அழைத்து வருகிறது

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...