Skip to main content

ஒப்பந்தத் தொழிலாளர்கள் - அயோத்தி ராமி ரெட்டியின் மோசடி வரலாற்றில் மற்றொரு மைல் கல்



 ராம்கி நிறுவனத்தின் தலைவர் 'அல்ல அயோத்திய ராமி ரெட்டி' மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை வழக்குகள் மட்டுமல்ல கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவரது நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2021இல் உலக வங்கிக் குழுமமே அமெரிக்காவில் இவர்களை ஒரு முறைகேட்டின் பெயரில் தடைபண்ணி விட்டார்கள் (பெரிய சம்பவக்காரர்கள்). ஏற்கனவே சென்னையில் 2012இல் பணிகளைச் சரிவரச் செய்யாததற்காக சென்னை மாநகராட்சி இவர்களுடனான ஒப்பந்தத்தைத் தடைபண்ணியுள்ளது. இவர்களுடைய முறைகேடுகளின் பட்டியலை பதிப்பித்தால் அது ஜெயமோகனின் வெண்முரசு அளவுக்கு நீண்டுவிடும் என்பதால் அதை இங்கே செய்ய முடியாது. ஆனால் இவரது நிறுவனங்களுக்குத் தொடர்ந்து இந்தியா முழுக்க ஒப்பந்தங்களை ஏன் வழங்குகிறார்கள்? இவர் ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்பி. ஜெகன் மோகன் ரெட்டியின் வலதுகை என அறியப்பட்டவர். அண்மையில் இவர் பாஜக பக்கம் சாய்ந்து விட்டாரோ என ஐயம் நிலவியது. இல்லை நான் ரெட்டிகாரு பக்கம்தான் என ஒரு கையை ஜெகன் மோகன் பக்கமும் நீட்டினார். துப்புரவுப் பணியாளர் சம்பளப் பிரச்சினைக்குப் பின்னால் முறைகேடுகளின் மலைத்தொடரே ஓடுகிறது. ராமி ரெட்டிக்குப் பின்னால் பாஜகவா ஜெகன் மோகன் ரெட்டியா என்பது கரகாட்டக்காரன் கார் காமிடியைப் போன்றது. இவர் தன் ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பார் என்பது அல்ல பிரச்சினை என இப்போது தெரிகிறது - இவர் இந்த புரோஜெக்டையே முடிக்காமல் பாதியில் கைவிட்டுப் போகவே வாய்ப்பதிகம். அதுவே அவரது வரலாறு. பணத்தை வாங்கி கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்துவிட்டு ஜகா வாங்குவதே இவரது 13 ஆண்டு வரலாறு. இவர்களை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தம் வாழ்க்கையை அடமானம் வைப்பது நித்தியானந்தாவை நம்பி கைலாசாவுக்குப் போவதற்குச் சமம். மேயர் ப்ரியா சொல்வதைப் போல இவர்கள் தம் ஊழியர்களுக்கு பல்வேறு வசதிகளைப் பண்ணிக்கொடுப்பார்கள் எல்லாம் சும்மா கதைதான். இவர்கள் தமக்கு அளிக்கப்பட்ட பணியையே முடிக்க மாட்டார்கள். ஊழியர்கள் எல்லாம் எம்மாத்திரம்?

எப்படியும் மிஸ்டர் ராமிரெட்டி ராவோடு ராவாக தலைமறைவாகிவிட்டு இன்னொரு ஊரில் இதே போல வேறு பெயரில் தோன்றி லஞ்சம் கொடுத்து ஒப்பந்தம் போட்டு ஏமாற்றிக்கொண்டே பாஜக, ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் என இருவேறு கட்சிகளின் சட்டைப் பைகளில் பாதுகாப்பாக உறங்குவார். அப்படியே ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து என்றுகூட மோசடி வேலை செய்து பல இடங்களில் தடைசெய்யப்பட்டு சர்வதேச டானாகிவிடுவார்.
நீரவ் மோடி, மல்லையா போன்ற மற்றொரு வகை மோசடித் தொழிலதிபரான இந்த ராமி ரெட்டியிடம் இத்தனை ஆயிரம் தொழிலாளர்களிடம் கொடுப்பதற்குப் பதிலாக அரசே அவர்களுக்கு ஊதியம் கொடுக்கலாம். ராமி ரெட்டிக்கும் அமலாக்கத்துறைக்கும், அவரது கட்சிக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல் அட்ஜெஸ்மெண்டில் சாதாரண மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...