Skip to main content

வாய் மட்டும் இல்லாவிட்டால்...


 

நேற்று பிரதமர் உரையாற்றும்போது ஜி.எஸ்.டியில் மாற்றங்கள் கொண்டு வரப்போவதாகவும், அதனால் விலைவாசி குறைந்து மக்களால் அதிகமாகச் செலவழிக்க முடிந்து, பொருளாதாரம் வளரப் போகிறது (அதாவது, பொருளாதார வீக்கம் குறையப்போகிறது) என்றார். அதைக் கேட்கையில் அடடா என்றிருந்தாலும் ஐயய்யோ என்றும் இருந்தது. இவர்கள் என்ன சொன்னாலும் செய்வது இன்னொன்றாக இருக்குமென்பதே நம் அனுபவம். இன்று செய்தியில் ஜி.எஸ்.டி மாறுதலால் எந்த பொருட்களுக்கெல்லாம் விலை குறையும் என்று போட்டிருந்தார்கள். டி.வி. ஏஸி போன்ற மின்னணு சாதனங்கள், சைக்கிள், பேக்கரி ஐட்டங்கள், சேவ் போன்ற நொறுக்குத்தீனிகள், கண்ணாடி, மருந்துகள், நோட்டுப் புத்தகங்கள், பேனா போன்ற கல்விக்கான பயன்பாட்டுப் பொருட்கள். இதை அவர் இந்திய மக்களுக்கான தீபாவளிப் பரிசு என்று அறிவித்திருக்கிறார். ஆனால் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள அத்தியாவசியப் பொருட்களுக்கு அவர் வரியைக் குறைக்கவில்லை. அதாவது அன்றாட உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்கும் முயற்சியை எடுக்கவில்லை. முக்கியமாக பெட்ரோல், டீஸல் மீதான ஜி.எஸ்.டியை வெகுவாக குறைத்து அதன்வழியாக அதன் விலையைக் குறைக்கவில்லை. சும்மா ஏ.ஸி, டிவி விலையைக் குறைப்பதால் மக்களின் அன்றாடத் தேவைகள் தீரவோ பிரச்சினைகள் தணியவோ போவதில்லை.

ஒருவர் இன்று மாதம் 10,000 சம்பாதித்தால் வாழவே முடியாது. நகரங்களில் 20,000 கூட ஒரு குடும்பத்துக்குப் போதவில்லை. காய்கறி, மளிகை சாமான்கள் விலையெல்லாம் எக்குத்தப்பாய் எகிறிக் கிடக்கின்றன. வீட்டு வாடகை லாக் டவுனுக்குப் பிறகு பெருமளவு அதிகரித்துவிட்டது. சம்பளம் பெரும்பாலும் உணவு, உறைவிடத்துக்கே போய்விடுவதாலே மக்களால் நுகர்வுப் பொருட்களை வாங்க முடியவில்லை. பெட்ரோல், டீஸல் விலையில் 30-40 ரூபாய் குறைந்தாலே மிகப்பெரிய மாற்றம் வரும். உணவுப் பொருட்களின் விலை குறையும். பொருளாதார வீக்கம் குறையும். இன்று 20% மேல் பெட்ரோலில் எத்தனால் சேர்க்கப்படுகிறது. உலகம் முழுக்க கச்சா எண்ணெய்யின் விலை குறைந்திருக்கிறது. அதனால் நியாயமாகவே விலையை 80 ரூபாயாகக் குறைத்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. கூடுதலாக ஜி.எஸ்.டியையும் குறைத்தால் 50 ரூபாய்க்கே கூட கொடுக்கலாம். அரசு தன் வருமானத்தையும் அம்பானிகளின் வருமானத்தையுமே பிரதானமாகக் கருதுவதாலே நம் பொருளாதாரம் வீங்கிவீங்கி வெடிக்கும் நிலையில் இருக்கிறது.
அடுத்து, நோட்டுப் புத்தகம், பேனாவின் ஜி.எஸ்.டியைக் குறைக்காமல் தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்களின் கல்விக் கட்டணத்திற்கு ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வந்திருக்க வேண்டும். மத்திய வர்க்க குடும்பங்களின் வருமானத்தில் பெரும்பகுதி கல்விக் கட்டணம் செலுத்துவதிலேயே போகிறது. அடுத்து, நிலத்தில் முதலீடு செய்வதிலும், வாடகையிலும் கட்டுப்பாடு அவசியம் - மக்கள் பணத்தை பங்குகளிலும் தங்கத்திலும் முதலீடு பண்ணுவதைத் தடுக்கும் நோக்கில் வரியை அதிகரித்த அரசு ரியல் ஏஸ்டேட்டைத்தான் நிஜத்தில் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் நிலத்தின் விலையை அரசே நிர்ணயிக்கும் என அறிவித்து, வங்கிகளும் தாம் அளித்த பணத்தின் வட்டியை சரிபாதியாகக் குறைக்க வேண்டும் என அறிவிக்க வேண்டும். நிலத்தை, வீட்டை வாங்கி விற்பதில் ஒரு லாக் இன் பீரியட் கொண்டு வரலாம். பணம் நிலத்தில் முடங்காமல் இருந்தாலே வணிகம் வளரும். அதுவே வீடு வாங்குவதற்கான கடனில் சிக்கித் தவிக்கும் மக்களைக் காப்பாற்றும். இதைச் செய்ய விருப்பம் இல்லாவிடில் அரசே மக்களுக்கான மலிவு விலை வீடுகளைப் பரவலாக எல்லா நகரங்களிலும் கட்டி விற்கலாம் (பழைய சோவிய நாடுகளில் நிகழ்ந்ததைப் போல).
பிரதமருக்கு இதைக் குறித்தெல்லாம் எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஜி.எஸ்.டியைக் குறைக்கும்படி பெருவணிகர்களின் லாபி போடும் அழுத்தத்திற்கு ஏற்ப சில பொருட்களுக்கு மட்டும் குறைத்திருக்கிறார்கள். (மருந்துகளின் ஜி.எஸ்.டியைக் குறைத்தது மட்டுமே பாராட்டத்தக்கது.) ஆகையால் இதைப் பெருவணிகர்களுக்கான தீபாவளிப் பரிசென்றே கூறலாம். இதனால் மக்களின் பாக்கெட்டில் பணமும் மிஞ்சாது, நுகர்வும் அதிகரிக்காது. அமித் ஷா கூட எடையைக் குறைத்துவிட்டார். ஆனால் பொருளாதாரத்தின் தொப்பை வீக்கம் குறையாது.
இந்த வாய் மட்டும் இல்லாவிட்டால் நாய் தூக்கிக்கொண்டு போய்விடும் என்பார்கள். அது நம் பிரதமருக்குப் பொருந்தும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...