Skip to main content

எடை குறைப்பு மருந்தின் ஆபத்து


 

மௌஞ்சாரோ, வெகோவி ஆகிய மருந்துகள் இந்தியாவுக்குள் பிரவேசித்திருக்கின்றன. வாரம் ஒருமுறை இதை ஊசியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஊசியைப் போட்டுக்கொண்டதும் பயனருக்குப் பசி குறைந்து அவர் தன் உணவைக் குறைவாக உண்படுவதால் எடை குறைகிறது. அமெரிக்காவில் இதைப் பயன்படுத்தியோர் சொல்லும் முக்கிய புகார் ஊசியை நிறுத்தியதும் திரும்ப எடை வந்துவிடும் என்பது. அதாவது இச்சிகிச்சை உங்களை மருந்துக்கு அடிமையாக்கும் - எடையைத் தக்கவைக்க ஊசி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

அடுத்து, எடை அதனளவில் ஒரு பிரச்சினை அல்ல. எடை என்பது 'பசித்த உடலின் அறிகுறி'. அதாவது உடல் நல்ல சத்தான உணவின்றி குப்பையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும்போது உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஹார்மோன் கோளாறுகள், கைகால், முட்டி, முதுகுவலி, மனப்பிரச்சினை, தூக்கமின்மை, அசதி, இதய தமனியில் அடைப்பில் இருந்து புற்றுநோய் வரை. சிலருக்கு கொழுப்பு செல்கள் பெருகி உடல் கனக்கிறது. ஒருவிதத்தில் இது நல்லதே - இதைக் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து உடலை அவர் சீராக்க முடியும். சிலருக்கு உடல் ஒல்லியாக இருக்கும், ஆனால் உள்ளுறுப்பைச் சுற்றி கொழுப்பு படியும். அப்படியே அது கல்லீரலைச் சுற்றிப் படியும். தமனிகளை அடைக்கும். இவர்கள் தாம் ஒல்லியாக இருப்பதால் எதையும் மாற்ற வேண்டாம் என நினைப்பதால் திடீரென மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்ட பக்கவாதம் வரும், மாரடைப்பு வரும். உடலை நாம் மிக மோசமான நிலைக்குக் கொண்டு போகும்போது நமது அணுக்கள் வெறுத்துப் போய் தம்மை அழித்துக்கொள்ள முனைவதும், அவை ஆக்ஸிஜன் இன்றி புராதன நுண்ணுயிர்களைப் போல வாழ் முயன்று பெருகுவதுமே புற்றுநோய் என ஒரு கருதுகோள் உண்டு (atavistic theory). ஆக உடல் எடை மிகச்சிறிய பிரச்சினைதான். அது ஒரு அழைப்பு மணி. காலனின் அழைப்பு மணி. ஆனால் உடல் எடையால் காலன் வருவதில்லை. காலன் வந்துவிட்டான் என்பதை உணர்த்தவே உடல் எடை வருகிறது. பிரச்சினை எடையல்ல.
அழகுக்காகவும் சௌகர்யத்துக்காகவும் ஒருவர் எடையைக் குறைக்கலாம். ஆனால் அவர் காலனிடம் அத்துடன் டேட்டிங் போக முடிவு பண்ணிவிட்டார் என அர்த்தம். ஏனென்றால் அவர் இந்த ஊசியை எடுத்துக்கொண்டு அதே பழைய குப்பையான உணவுகளையே தின்பார். 99% அவரது உணவு மாவுச்சத்தாலும் துரித உணவாலும் அமைந்திருக்கும். ஆகையால் உணவின் அளவு குறைந்தாலும் அவர் தன் உணவு முறையை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. அவருக்கு ஒரு குறுக்குவழி கிடைத்துவிட்டதே. அவர் உடலை நல்ல சத்துணவின்றி, சத்துக்கள் இன்றி 'பட்டினி போடுவதால்' பிரச்சினைகள் இன்னும் மோசமாகிக் கொண்டே போகும்.
அதனாலே இதை ஒரு மோசடி மருந்து என்கிறேன். மருத்துவர்கள் கமிஷனுக்காக இதைப் பரிந்துரை பண்ணுகிறார்கள். ஏதோ நீரிழிவு நோயாளிகளுக்காகப் பரிந்துரைப்பதாக ஏமாற்றுகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் நீரிழிவு இல்லாதவர்கள், தோற்றத்துக்காக இதைப் பயன்படுத்துவோரே. அவர்கள் தம் அறிவீனத்தால் இதற்குப் பலியாகிறார்கள். இந்திய அரசோ மோசடிக்காரர்களுக்காகவே கடைபரப்பி வைத்திருக்கிறார்கள். எதையும் சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுக்க மாட்டார்கள். எந்த 'கிட்னி திருடும்' கார்ப்பரேட் நிறுவனம் வந்து கமிஷன் கொடுத்தாலும் அனுமதி கொடுத்துவிடுவார்கள். இந்த நாட்டில் எதையும் நம்பக்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...