Skip to main content

திரை விலகிவிடுகிறது

 நான் சினிமாக்காரன் அல்ல. ஆனாலும் வெளியில் இருந்து பார்க்கும்போது ஒரு வணிகப்படம் நன்றாக 'அமைந்து' வருகிறது, அது நன்றாக எழுதப்படுவதோ, எடுக்கப்படுவதோ இல்லை என்று தோன்றுகிறது. எத்தனையோ குறுக்கீடுகள், இடையீடுகள், படத்துக்குத் தேவையில்லாத முடிவுகள், மாற்றங்கள், இவற்றால் மிக நன்றாக மேஜிக் போல ஒரு படம் உருவாகும். அது எப்படி என்று இயக்குனராலோ பிறராலோ சொல்ல முடியாது. நேர்முகங்களில் பாருங்கள் அவர்கள் ரொம்ப சாதாரணமானவர்களாக இருப்பார்கள். கலையைக் கரைத்துக் குடித்தவர்களாகவோ அறிஞர்களாகவோ அல்லர். அதனாலே படம் ரொம்பக் கேவலமாக வந்தாலும் அற்புதமாகி வென்றாலும் அவர்களுக்கு அதற்கான காரணம் தெரியும் எனத் தோன்றவில்லை.

நீங்கள் ஒரு நாவலுக்கு அதன் எழுத்தாளரைப் பொறுப்பாக்கலாம். ஒவ்வொன்றும் அவருக்குத் தெரிந்தே நிகழ்கிறது. கனவு நிலையில் எழுதப்படும் பத்திகளைக் கூட அவரால் பின்னர் நீக்கவோ மேம்படுத்தவோ முடியும். ஆனால் சினிமாவுக்கு அவ்வாறு சொல்ல முடியாது (indie படங்களே விதிவிலக்கு). முற்போக்காளர்கள் கோபித்துக் கொள்ளாவிடில் ஒன்று சொல்கிறேன்: சினிமா என்பது ஒரு கேங் ரேப்.
"தக் லைப்" படத்தின் திரைக்கதையை ஒரு எழுத்தாளர் எழுதியிருந்தால் இந்நேரம் மொத்தப் பொறுப்பையும் அவர் மீது போட்டு சாத்தியிருப்பார்கள். நல்லவேளை அப்படி நிகழவில்லை. ஷங்கரின் படங்கள் சுஜாதாவின் மரணத்திற்குப் பின் மோசமாகின என்று சொல்லப்படுவதைக் கேட்கையில் எனக்கு சிரிப்பு வரும். அவர் பத்தாண்டுகள் கூடுதலாக வாழ்ந்திருந்தால் ஷங்கர் மீதான அடிகள் அவருக்கும் விழுந்திருக்கும். ஷங்கரின் படங்கள் சில சந்தர்பங்களால், நிபந்தனைகளால் சுவாரஸ்யமாக அமைந்தன, வேறு நிபந்தனைகளால் தோல்வியுற்றன. இப்படியான விசயங்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் நடந்துள்ளன என வரலாறு சொல்கிறது - ஏன் ஓடுகிறது, ஓடவில்லை என யாருக்கும் தெரியாது. மிக மட்டமான திரைக்கதை கொண்ட படங்கள் பிய்த்துக்கொண்டு ஓடவில்லையா? முட்டாள்கள் வாழ்க்கையில் வெல்கிறார்கள், மிகக்கேவலமான ஆண்களை அழகிகளும் களங்கமற்ற பெண்களும் நேசிக்கிறார்கள், கொடுங்கோலர்கள் திரும்பத்திரும்ப தேர்தலில் வெல்கிறார்கள். சமையலே தெரியாதவர்கள் எதையெதையோ போட்டுச் செய்த சமையல் சுவை கூடுகிறது. ஜோலி ஜோசப் சயனைட் கொடுத்தும் கூட அவர் குடும்பத்தில் சிலர் சாகவில்லை.
சினிமா ஒரு கூட்டுத்துன்பியல், கூட்டு வன்முறை, அது சிலநேரங்களில் அழகாக மலர்கிறது, சிலநேரங்களில் இன்பம் அளிக்கிறது. பல நேரங்களில் அது ஆடை மாற்றிக்கொண்டிருக்கும்போதே திரை விலகிவிடுகிறது.
எவ்வளவோ சிறந்த நாவல்கள் வருகின்றன. நீங்கள் ஏன் அவற்றைப் பற்றியெல்லாம் விவாதிக்க மாட்டேன் என்கிறீர்கள்?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...