Skip to main content

குற்றவிசாரணைப் பிரச்சாரம்


 

நாங்கள் டீக்கடையில் இருந்தோம். விஜய்க்கும் போதை மருந்து குழுவுக்குமான தொடர்பு, அவரது வீட்டில் நடக்கும் விருந்துகள் குறித்த செய்திகளை ஆளுங்கட்சி சார்பு யுடியூபர்களும் பத்திரிகையாளர்கள் ஏன் கசிய விடுகிறார்கள் என நண்பர் ஒருவர் கேட்டார். அப்போது எங்கள் உரையாடலைக் கேட்ட டீ மாஸ்டர் சொன்னார், "அவரைப் பார்த்து ஆளும் அரசு பயப்படுகிறது". அவர் ஒரு விஜய் அண்ணா விசிறி. ஆனால் எனக்கு இது விஜய் மீதான அரசியல் வன்மத்தில் நடக்கிறது என நினைக்கவில்லை. மாறாக, திமுக அரசு விஜய் மீது கைவைக்காது என்றே நினைக்கிறேன். வரும் தேர்தலில் அவருக்கு பாஜக கொடுத்துள்ள அசைன்மெண்ட் திமுக அரசை ஊழல் அரசு எனக் கடுமையாக விமர்சிப்பது. அதை சற்று விஜய் இனி மட்டுப்படுத்துவார். ஒரு பக்கம் பாஜகவின் அமலாக்கத்துறை, இன்னொரு பக்கம் இவர்களின் போதை ஒழிப்பு நடவடிக்கை. அமலாக்கத்துறை நடவடிக்கையை விட இது விஜய்யின் பிம்பத்தை மோசமாகப் பாதிக்கும். ஆகையால் இந்தப் பிரச்சினையை இவர்களுடன் இத்துடன் விட்டுவிடுவார்கள், அவரும் தம் கூரம்புகளை மலரம்புகளாக மாற்றிக்கொள்ளும்படி தனக்கு பிரச்சார உரை எழுதும் உதவியாளர்களிடம் சொல்வார்.

திமுக அரசு எதிரணியின் துணைப்படையினருக்கு (ஒ.பி.எஸ்-பூவை மூர்த்தியார் ஆட்கடத்தல் வழக்கு, அதிமுக இணையப் பிரிவினர் போதை மருந்து, விஜய் போதை மருந்து சர்ச்சை) ஒவ்வொருவராக குற்ற விசாரணை மூலமாக செக் வைக்கிறார்கள். தேர்தல் வரும்போது அதிமுக-பாஜக கூட்டணியை பலவீனமாக்குவதே அவர்களின் நோக்கம் என நினைக்கிறேன். என்ன பிரச்சினை என்றால் அது அப்பட்டமாக எல்லாருமே புலப்படுகிறது

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...