Skip to main content

தொழில்முனைவோர் நீயா நானா

 வேலை செய்துகொண்டே வியாபாரம் ஆரம்பித்து பலத்த நட்டமடைந்த தொழில்முனைவோரைக் குறித்த இவ்வார நீயா நானா நன்றாக இருந்தது. எந்த அடிப்படை ஆய்வும் இல்லாமல் எப்படி இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி முதலீடு செய்து மாட்டிக்கொள்கிறார்கள் என்று வியப்பாக இருந்தது. ஒருவர் மதுரையில் இருந்து சென்னையில் தேநீர் கடை ஆரம்பிக்க தன் குடும்பத்தை அழைத்து வருகிறார். ஆனால் வந்த பிறகே சென்னை கடை வாடகை அதிகமெனத் தெரிய வருகிறது. இது கூடத் தெரியாமலா முடிவெடுத்தார் என வியப்பாக இருந்தது. இன்னும் சிலர் கடன் வாங்கி பெரிய முதலீடு பண்ணி சிக்கிக் கொள்கிறார்கள். கருப்பட்டிக் காப்பி, வெரைட்டி தோசைக்கெல்லாம் பிராஞ்சைஸி எடுக்கிறார்கள் என்பதையும் நம்ப முடியவில்லை. அவசரம், சோம்பல், தொழில்முனைவோர் மோகம். அதனால் சமையலுக்கான மளிகைச் சாமானில் இருந்து பிற பொருட்கள், சமையற்காரர், வேலையாள், பிராண்ட் வரை யாராவது பண்ணிக் கொடுத்தால் பணம் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதை மட்டும் தாம் செய்துவிடலாம் என கனவு காண்கிறார்கள்.

எந்த அடிப்படையான திட்டமிடலோ pilot projectகளோ செய்து பார்க்காமல் தவறாக சில சமயங்களில் முதலீடு செய்கிற பெரிய நிறுவனங்களும் உண்டு. ஆனால் அவ்வபோது ஏற்படும் நட்டத்தை ஈடுசெய்யும் சக்தி அவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு இல்லை.
என்னுடைய ஒரு மாணவர் இருக்கிறார். வகுப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பார், சேட்டை செய்வார். நான் அவரை அழைத்து நட்பாக விசாரித்ததும் சொன்னார்: அப்பாவுக்கு உடல் சரியில்லை என்றதும் அவர் பகுதி நேர மாலை வேலையில் சேர்ந்து தன் குடும்பத்துக்கு சம்பாதித்துக் கொடுக்கிறார். பகலில் படிக்கிறார். அந்த அழுத்தம் அவரை மனரீதியாக பாதிக்கிறது. நான் கொஞ்சம் பாராட்டியதும் அவர் உற்சாகமாகிவிட்டார். என் எல்லா வகுப்பிலும் கலந்துகொண்டு ஒழுங்காக இருக்க ஆரம்பித்தார். வீட்டுக்கு கீழேயே தோசைக்கடை வைத்து குடும்பமாகச் சேர்ந்து அதை நடத்துகிறவர்களையும் தெரியும். இவர்களெல்லாம் சுலபத்தில் தோற்க மாட்டார்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...