Skip to main content

தலையற்றுப் போகும் மனிதன்



 நான் அவளை உணவகத்தில் சந்திக்கும்போது ஒவ்வொரு முறையும் முன்கூட்டியே சென்று காத்திருப்பேன். இது அவளாக சொல்லிச் செய்ததல்ல. நானாக செய்தேன். அவள் வந்ததும் கால் மேல் காலை இட்டபடி தன் பார்வையைத் தாழ்த்தி என்னை இனி எனக்கு உயர்வதற்கு இடமே, வானையும் கடந்து வளர்ந்து சென்றுவிட்ட அடிமுடி அறியா பிறவி நான் என்பதாகப் பார்ப்பாள். அடுத்து உடனே இயல்பாகி புன்னகைப்பாள். நான் உடனே உடைந்து விடுவேன். அவள் இப்படி செய்யும்போதெல்லாம் என் கண்களில் நீர் துளிர்த்துவிடும். இப்படி அவளிடம் ஓராயிரம் பாவனைகள் உண்டு. அவள் வந்து அமர்ந்ததும் நான் அவளது காலை என் கையால் தொட்டு விரலில் முத்தமிடுவது வழக்கம். பப்களில் நான் மண்டியிட்டு அவளது கால் பெருவிரலைச் சப்புவதும் உண்டு, அவள் மெல்ல உதைக்கும்போது என் தலை மேஜையின் விளிம்பில் படும், உச்சம் பெற்றதைப்போல சிரிப்பாள், அது அவ்வளவு அற்புதமான ஒரு தருணம்.

நாங்கள் முதன்முதலாக உணவகத்தில் சந்தித்தது ஒரு மகத்தான நிகழ்வு. என்னால் அந்த நாளை ஒருபோதும் மறக்க முடியாது.
அவள் நகரத்துக்கு வந்ததும் தன் தோழியின் விடுதி அறையில் தன் பொருட்களை வைத்து உடைமாற்றிவிட்டு, புர்காவின் விளிம்புக்கு மேலாக தன் அழகான ஆடையின் அலங்காரம் தெரியும்படி எடுத்துவிட்டபடி, முகத்தில் கிளிட்டரும், இளஞ்சிவப்பு உதட்டுச்சாயமும் அணிந்து என்னை விடுதிக்கு எதிரே உள்ள மோமோஸ் கடை வாசலில் சந்தித்தபோது நாங்கள் சந்தித்த பத்தாவது நிமிடத்தின் தொடர்ச்சியே அது என அவளிடம் சொன்னேன். அவள் தானும் அப்படியே உணர்ந்ததாகச் சொன்னாள்.
இரண்டாவது நாளே அவளை ஓர் உயர்தர உணவகத்து அழைத்தேன். நான் பப்பென்றுதான் சொன்னேன். அவள் அதற்கு “உன்னை அங்கே டான்ஸ் பண்ணுகிறவர்கள் மிதித்துவிட்டால் என்ன செய்வது ஹிட்லர்?” எனச் சிரித்தாள். “அதை நான் பார்த்துக்கொள்கிறேன். பெண்களின் கால்கள் கவனமானவை. அப்புறம் ஸ்டாப் காலிங் மீ ஹிட்லர்.” “ஒருவேளை நீ வழுவழுப்பான காலொன்றில் தடுக்கி விழுந்து பல நடனமாடும் கால்களிடம் ஒரு புட்பாலைப்போல சிக்கிக்கொண்டால்? நான் எப்படி உன்னைக் காப்பாற்றி என் பக்கம் கொண்டு வருவது? எனக்கு பைசைக்கிள் கிக் தெரியாதே.” நான் ஏற்கனவே சென்றிருக்கிறேன் என்று சொன்னதற்கு “இளம்பெண்கள் உன்னைப் பயன்படுத்துவதற்காக அழைத்துப்போய் அங்கே யாரையாவது பிடித்துக்கொள்வார்கள். நான் அப்படி அல்ல. நீ வந்தால் உன் மொத்த பொறுப்பும் எனக்குத்தான்.” என்பாள். அவளுக்குப் பிடிக்கவில்லை என்று பிரசித்தமான உணவகம் ஒன்றை சொன்னேன். நான் மெல்லமெல்ல அழுவதை முடித்தபோது பரிசாகரர் ஒரு தட்டில் முழு கோழி தந்தூரியை வெண்துணி மூடியால் மறைத்துக்கொண்டுவந்து எங்கள் முன்னால் திறந்து காட்டினார். ஆவி பறந்து மேலெழுந்து கலைகிறது. அவள் “வாவ்” என்றாள். அங்கே என் தலை வீற்றிருந்தது. நானும் அவளுமாக என் தலையைக் கத்தியாலும் முள்கரண்டியாலும் வெட்டியெடுத்து பரஸ்பரம் ஊட்டினோம். என் தசை எவ்வளவு சுவையாக இருக்கிறது, அதுவும் கன்னக் கதுப்பு, அதற்கு மேலே உள்ள சிறிய எலும்புகள், பின்னந்தலை ஆஹா ஆஹா. ஒரு மனிதன் தலையற்றுப் போகும்போது ஏன் இவ்வளவு பரவசத்தில் ஆர்ப்பரிக்கிறான்?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...