Skip to main content

எதிர்-ஆசான்

 


ஜெயமோகனுடன் எனக்குள்ள கோட்பாட்டு, தத்துவ முரண்களை வெளிப்படையாகவே அறிவித்தே அவரை வாசித்தும் உரையாடியும் வந்திருக்கிறேன்.

ஜெயமோகனையும் பிறரையும் வாசித்தே இலக்கியத்துள் வந்தேன். அவருடனான ஆரம்பகால உரையாடல்கள் என்னை நெறிப்படுத்தவும், எனக்குள் நெருப்புப் பொறியொன்றை பிறப்பித்து வளர்க்கவும் உதவியது. ஆனால் அவரது கருத்துநிலைகள், நிலைப்பாடுகள் அனேகமாகத் தவறானவை எனும் முடிவுக்கு விரைவில் வந்தேன். அதைப் புரிந்துகொள்ளவும் வெளிப்படுத்தவும் எனது கோட்பாட்டு, தத்துவ, இலக்கிய வாசிப்புகள் உதவின. ஒரு விசதத்தின் உண்மைநிலையைப் புரிந்துகொள்ள வேண்டுமெனின் அவர் சொல்வதற்கு நேரெதிராகச் சிந்தித்தால்போதும் எனும் முடிவுக்கு வந்தேன். இது எனக்கு வெகுவாக உதவியது - ஒருவித எதிர் வரைபடம் அவர். அவர் கிழக்கென்றால் நாம் மேற்குக்கு சென்றுவிட வேண்டும். அவர் மேலே என்றால் கீழே போகவேண்டும். அப்போதே உண்மையை, இருத்தலின் ஆழத்தைப் புரிந்துகொள்ள இயலும். அவர் ஆசான் அல்ல, அவர் எதிர்-ஆசான்.
அண்மையில் நிகழ்ந்த சில சம்பவங்களின்போது அவர் அடிப்படையான அறவுணர்வு இல்லாதவர் எனும் எண்ணம் எனக்குள் வலுப்பெற்றது. இதனால் கடுமையான கசப்புணர்வு தோன்றியது. அதன்பிறகு தோன்றியது - இவரைவிட மோசமானவர்களாக, கொடூரமானவர்களாக பல எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள் என வாசித்தறிகிறோம். அதற்காக வெறுக்கத் தேவையில்லை என முடிவெடுத்தேன். என் மனம் தெளிவுற்றது. நிறைய நற்குணங்கள்ளும் இன்னதென்று விளக்க முடியாத கொடூரமும் நிறைந்த படைப்பாளி அவர். இனியும் அவர் மாறப் போவதில்லை. ஒரு வனத்தில் பாம்பு, கரடி, ஓநாய், பறவைகள், முயல் எல்லாம் இருக்கும்தானே. அவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வதே சரி.
நம் மொழியின் திறமையான, படுகுரூரமான எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயமோகனுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...