Skip to main content

தப்பு நிகழக்கூடாது என்று தப்பை ஆதரிப்பவர்

 ராஜன் குறை அரசியல் மனம் கொண்டவரல்லர், அரசியல்வாதியின் மனம் கொண்டவர். ஒரு ஓநாய் ஊருக்கு வந்து ஆட்டுக்குட்டியை அடித்து இழுத்துச்சென்று விடுகிறது. அப்போது அந்த ஓநாயைப் பிடித்து அடித்து பிரியாணி போட வேண்டும், கல்லால் அடித்து துரத்த வேண்டும் என்பது தார்மீகக் கோபம். அதுவே பிரச்சினையைத் தீர்க்கும். எந்த குடியானவனும் அதையே செய்வான். ராஜன் குறையோ அங்கு வந்து ஓநாய் ஆட்டுக்குட்டியைப் பிடித்துக்கொண்டு போவது மிகப்பெரிய சமூக வலைப்பின்னலில் நிகழும் சின்னஞ்சிறு நிகழ்வு. அதற்குப் பின்னால் கண்ணுக்குத் தெரியாத எண்ணற்ற காரணிகள் உள்ளன. அந்த கண்ணிகளைச் சரிசெய்யாமல் ஓநாய் வருவதை தடுக்க முடியாது. அதனால் ஓநாயுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவ்வப்போது சில ஆட்டுக்குட்டிகளை அதற்குக் கொடுப்பதே நடைமுறை சாத்தியமானது. இல்லாவிட்டால் இயற்கையின் அடிப்படையான வலைப்பின்னலே சிதைந்து போகும். ஓநாய் திருந்தி சைவத்துக்கு வர இன்னும் சில நூறாண்டுகள். அதுவரை அமைதியாக இருக்க வேண்டும், நிதானமாக பக்குவமாக இதைக்குறித்து உரையாட வேண்டும். கொந்தளிக்கவோ அறச்சீற்றம் கொள்ளவோ கூடாது என்று நீண்ட உரையாற்றுவார். இப்படி ஒரு லட்சிய சமூக அரசியல் கட்டமைப்பைக் காட்டி, அதுவே நடைமுறை சாத்தியம் என்று சொல்லி அனேகமாக எல்லா சீரழிவுகளையும் ஏற்றுக்கொள்ளவோ பொறுத்துக்கொள்ளவோ சொல்வார். ஜனநாயகத்துக்கும் வளர்ச்சிக்காகவும் ஊழல், குடும்ப அரசியலைக் கூட ஆதரித்து நீண்ட கட்டுரைகளை எழுதுவார். அவரது இந்த வழக்கறிஞர் அணுகுமுறையை என்னால் ஏற்றுக்கொள்ள ஒருபோதும் முடிந்ததில்லை. அவரது எழுத்தில் நீதியுணர்வும் கோபமும் இல்லாமையால், மாறிவரும் சூழலில் தோன்றும் பல்வேறு குற்றங்களையும், அநியாயங்களையும் விமர்சிக்காமல் தொடர்ச்சியாக ஒரே விசயத்தை, அமைப்பை, இயக்கத்தை தொடர்ந்து கண்மூடித்தனமாக ஆதரிக்கையில் அவர் ஏதோ கட்சியின் கி.ப.செ போன்றே தோன்றுகிறார். (ஆனால் அவரது கொள்கைப் பிடிப்பு ஒரு பாவனையோ என்றும் தோன்றுகிறது.) அதனாலே அவரை வாசிப்பதை ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டேன். (ஆனால் அவர் நல்ல கல்வியாளர், தன் வாசிப்பை நன்றாகத் தொகுத்து எழுதுவதால் பலருக்கும் நன்மை பயப்பவர் என்பதால் அவர் மீது எப்போதும் மரியாதை உண்டு.)

மேலும், ராஜன் குறைக்கு இலக்கியம் என்பது சமூகக் கருவி மட்டுமே. அதாவது அது இருத்தலின் ஆழத்துக்குள் நம்மைக் கொண்டு செல்லும் அனுபவமோ, பல்வேறு காலங்களும் உலகங்களும் மோதி முயங்கும் நுண்ணுலகமோ அல்ல. இலக்கியச் செயல்பாடுகளை அவர் புரிந்துகொள்ளும் விதம் என் சிந்தனை மரபில் இருந்து வெகுவாக முரண்படுவது. உ.தா., கதர் துணியை காந்தியவாதி பார்ப்பதைப் போலவே எழுத்தாளர்கள் இலக்கியத்தை முன்னெடுக்கிறோம், முன்னெடுக்க வேண்டுமென அவர் நினைக்கிறார். கதரல்லாத துணிகளை எங்கு பார்ப்பாலும் எரிப்போம் என்று அந்த காலத்தில் சொல்லும் ஒரு தீவிரப் போராளியிடம் "பொறுமையாக இருங்கள், மக்கள் மாறுவதற்கு பல பத்தாண்டுகள் ஆகும், அதற்காக பக்குவமாக உரையாடி காத்திருங்கள்" என்பார். ஆனால் கதர் துணியைப் போல இலக்கியம் எங்களுக்கு கலாச்சார குறியீடு அல்ல. அது எங்கள் உயிர், எங்கள் வாழ்க்கை.
அதனாலே இலக்கியத் திருவிழாக்களை விமர்சிப்போரை தன் வழக்கப்படி கண்டித்து மனுஷ்ய புத்திரனின் கட்டுரையை வாழ்த்தி அவர் எழுதியிருப்பதைப் படித்தபோது எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. அவர் இதைச் செய்யாதிருந்தால் ஆச்சரியத்தில் மாரடைப்பே வந்திருக்கும். காப்பாற்றி விட்டார்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...