Skip to main content

கோலியின் தடுமாற்றம்

விராத் கோலி தில்லிக்காக ரஞ்சி ஆட்டத்தில் 6 ஓட்டங்களில் அவுட் ஆன காணொளியைப் பார்த்தேன். நியுசிலாந்து டெஸ்ட் தொடர் முதலே அவரிடம் ஒரு பிரச்சினையை கவனிக்கிறேன் - அவர் பந்தின் நீளத்தை சரியாகப் பார்ப்பதில்லை. சில நேரங்களில் பந்தின் திசையையும் கணிப்பதில்லை. இந்த பந்து ஆறாவது குச்சியில் விழுந்து உள்ளே வருகிறது. அதை கோலி கவர் டிரைவ் செய்யும் நோக்கில் மட்டையைத் தூக்கிக் கொண்டு லெக் ஆண்ட் மிடிலில் நிற்பதைப் பாருங்கள். உள்ளே வரும் பந்தை யாரும் அப்படி விரட்ட மாட்டார்கள். அதுவும் பந்துவீச்சாளர் குச்சிகளுக்கு நேராக வரும்போது பந்து நேராகவோ உள்ளாகவோ தாம் வரும். இது பாலபாடம்.

சரி அதையும் விடுவோம். பந்து ஸ்விங் ஆகாது என்று அவர் நினைத்தால் கவர் பகுதியில் ஆடும்படி அவரது தலை முன்னங்காலை நோக்கி கவர் பக்கமாகத் தானே போக வேண்டும். ஆனால் கோலியின் தலை அவரது இடப்பக்கம் சரிகிறது. மட்டையின் இறக்கமோ கீப்பரின் பக்கமிருந்து கீழே வருகிறது. அது கவர் டிரைவுக்கானது என்றால் ஷாட் நேரான டிரைவுக்கானது. இப்படி அவர் ஒரு ஷாட்டை அடித்தால் கையும் தலையும் வேறிரு ஷாட்களுக்காக தயாராகின்றன. முக்கியமாக அவர் பந்தின் திசையை பந்து விழும் முன்னரே கால்வினாடியில் கணிக்கிற திறனை இழந்துவிட்டார். எப்போதாவது அவரது பார்வையும் தலையும் காலாட்டமும் சரியாக அமையும்போது அழகான ஷாட்களை ஆடுவார். மற்ற சமயங்களில் பந்தை டி ராஜேந்தர் தன் நாயகியைப் பாடல் காட்சியில் லவ் பண்ணுவதைப் போலத்தான் அடிக்கிறார். 

பிரச்சினை ஆட்டநிலையிலோ கவனத்திலோ இல்லை. அவரது பார்வையில் ஏதோ பிரச்சினை உள்ளது. திராவிட்டுக்கும் அவரது ஓய்வுக்கு முன்பான ஓராண்டு காலத்தில் இப்பிரச்சினை தோன்றியது. ஆனால் அவர் மீண்டு வந்தார். நியுசிலாந்தின் ரோஸ் டெய்லர், தென்னாப்பிரிக்காவின் ஹஷீம் ஆம்லாவுக்கும் கண் பிரச்சினை ஏற்பட்டு ஆட்டத்தை பாதித்தது. விராத் கோலியின் இப்பிரச்சினையைப் பற்றி ஐந்தாண்டுகளுக்கு முன்னரே கபில் தேவ் ஓரிடத்தில் குறிப்பிட்டார் என்பது கவனிக்கத்தக்கது. 

சிலநேரங்களில் இம்மாதிரி குறைகளுக்கு நேரடித் தீர்வு இல்லையென்றால் வீரர்கள் அதை வைத்துக்கொண்டே ஆட முயல்வார்கள். தம் திறமையில் அதீத நம்பிக்கை வைப்பார்கள். பிடிவாதமாக முயன்று கொண்டே இருப்பார்கள். ஒருவேளை கோலிக்கும் நடப்பது அதுவாக இருக்கலாம். 

பாவமாக இருக்கிறது! இவரைப் போய் ஏன் ரசிகர்கள் திட்டுகிறார்கள்?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...