Skip to main content

அண்ணாமலையின் ஊடக சந்திப்பு

 இந்த ஊடக சந்திப்பு ரொம்ப வேடிக்கையாக, ஜாலியாக இருந்தது. எட்டு வருடங்கள் காவல்துறையில் குப்பை கொட்டினேன் என்கிறார், தேசியக் கட்சியில் மாநிலத் தலைவராக நான் ஏன் குப்பை கொட்டவேண்டும் என்கிறார். "ரோட்டுக்கு வந்து போராட்டம் பண்ணினால் அப்படியே ஆயிரம் போலீசை அனுப்பி அமுக்கி கல்யாண மண்டபத்தில வச்சிருவீங்க. இனிமேல் அப்படிப் போராட்டம் பண்ண நாங்கள் தயாராக இல்லை, போராட்டம் பண்ணாத்தானே அரெஸ்ட் பண்ணுவீங்க?" என்று அவர் கேட்டபோது நான் சிரித்துவிட்டேன். நூதனமாக ஒரு புதிய உத்தியை அறிவித்தார், "எல்லா தொண்டர்களும் தம் வீட்டுக்கு முன் நின்று போராடுவார்கள்". வீட்டுக்கு முன்னால் போய் நிற்பதெல்லாம் போராட்டமா? வீட்டுக்கு வெளியே வராமால் ஒருவரால் வீட்டுக்குள்ளேயா இருக்க முடியும்? எத்தனை பேர் தினமும் வீட்டிலிருந்து வெளியே வருகிறார்கள். அவர்களையும் போராட்டக்காரர்களையும் மக்கள் எப்படி கண்டுகொள்வார்கள்? அப்படியே எதாவது பதாகையைப் பிடித்து செல்பி எடுத்தாலும் அது ஏதோ சாதா செல்பியைப் போலத்தான் இருக்கும். அதெல்லாம் போராட்டமா? தலைகீழாக நின்று போராடினால் கூட வித்தியாசமாக இருக்கும். எளிய மக்கள் எப்படியெல்லாம் வித்தியாசமாகப் போராடுகிறார்கள். இவர் ஏன் இப்படி உளறுகிறார் என விழுந்து புரண்டு சிரித்தேன். கடைசியாக அவர் சாட்டையால் ஆறுமுறை அடித்துக்கொள்வேன் என்று சொன்னதுதான் முத்தாய்ப்பு. அதைச் செய்துவிட்டாரா? காணொளி இருந்தால் பகிருங்கள்.

செருப்பில்லாமல் எப்படி பேரணியின் போது வெயிலில் நடப்பார்? தேர்தல் பிரச்சாரத்தின் போது என்ன செய்வார்? ஒருவேளை இனி பேரணியே போவதில்லை என முடிவெடுத்துவிட்டாரா?
அண்ணாமலை திரும்ப வந்தாலே அரசியல் ரொம்ப ஜாலியாக காமிடியாக இருக்கிறது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...