தமிழவனின் எழுத்தில் இப்படியான அற்புதமான அவதானிப்புகள் வந்துகொண்டே இருக்கும் - உறவு மாற்றுகளை உருவாக்கி அவற்றின் இன்மையில் தப்பிப்பது நவீன வாழ்க்கையின் அவலங்களில் ஒன்று. அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, புரோ, பேப் என எல்லாரையும் அழைப்பது இப்படியானது. இதை அழகாக கலாப்ரியாவின் கவிதையில் பொருத்துகிறார் பாருங்கள்!
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
