Skip to main content

தமிழில் சாதி எதிர்ப்பு சினிமா

சாதி ஒழிப்பு படங்கள் சாதி எதிர்ப்பு படங்களாக மாறியதும் சமூகத்தில் கெட்ட சாதி vs களங்கமற்ற நல்ல சாதி என இருமையை உண்டுபண்ணி அதன் அடிப்படையில் வெறுப்பரசியலை உண்டுபண்ணி அதன் மேல் மதவாத அரசியல் சோஷியல் இஞ்சினியரிங் செய்ய உதவும் மூன்றாம் அணி அரசியல் புரோஜெக்ட்களாக மாறின. அதற்கு தெம்பூட்டும் விதமாக சுயசாதிப் பெருமையும் சாதி எதிர்ப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகின. அதற்கு வரலாற்றை திரும்ப சொல்லுதல் எனப் பெயரும் அளித்தோம். இது அடிப்படையில் ஒரு சீரழிவுதான். இதற்கு அந்த காலத்து இடதுசாரி கலகப் படங்களே மேல். அவை எல்லா தரப்புகளையும் உள்ளடக்கி அசல் பொருளாதார, வர்க்கப் பிரச்சினைகளைப் பேசின. அவற்றுக்கு ஆளுங்கட்சி சார்பு அரசியல் நிலைப்பாடும் இருக்கவில்லை. புரோஜெக்ட் வேல்யூவும் இருக்கவில்லை. அப்போது இயக்குநர்கள் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கமாக இருக்கவும், அரசியல் கனவுகள் காணவும் தலைப்படவில்லை. அப்போது அவர்கள் கூட்டம், பேரணி நடத்தவும், அறிக்கை விடவும், அரசியல் செய்திகளை, தலைவர்களை, கொள்கைகளை தம் வியாபாரத்துக்கு பயன்படுத்தவும் இல்லை.

மலினமான அர்த்தமற்ற வணிகப் படங்கள் கூட இவ்வளவு விஷமத்தனமாக இல்லையெனும்படியாக நிலைமை மாறியிருக்கிறது. சமூகவலைதள குழுக்களுக்கும் இதில் முக்கிய பங்குள்ளது. மகத்தான விசயங்களை இப்படித்தான் நம் சுயநலத்துக்காக சேற்றில் புரட்டி நாசமாக்குகிறோம்.
தமிழில் இப்படியென்றால், ஒன்றியத்தில் தேசியவாத, மதவாத அரசியலை படமாக்கும் இயக்குநர்களும் இதையேதான் செய்கிறார்கள். இரண்டு தரப்புகளையும் ஆசீர்வதிக்கும் மாயாவியின் கரங்கள் எவருடையவை?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...